முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பை காலிறுதியா சூதாட்டமா?



இன்றைய இந்தியா – வங்கதேசம் உலகக்கோப்பை காலிறுதியின் நாற்பதாவது ஓவரில் வேகவீச்சாளர் ரூபல் ஜுசெனின் புல் டாஸ் பந்தை ரோஹித் ஷர்மா அடித்து கேட்ச் கொடுத்தார். ஆனால் பந்து இடுப்புக்கு மேல் உயரமாக வந்ததாக கூறி நடுவர் ஆலம் தேர் அதற்கு நோ பால் என தீர்ப்பளித்தார். ரோஹித் தப்பினார். ஆனால் இது மிகவும் சர்ச்சைக்குரியதாக இப்போது மாறி இருக்கிறது. வங்கதேசத்தில் நடுவர்களின் கொடும்பாவி எரித்திருக்கிறார்கள். வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூரவமாய் ஐ.சி.சிக்கு புகார் அளித்துள்ளது.

 என்னாலும் இந்த நடுவர் முடிவுடன் முழுதும் ஒத்துப் போகவில்லை. பந்து நிச்சயம் இடுப்புயரம் தான், ஆனால் இடுப்புக்கு மேல் போவதாக தெரியவில்லை. பொதுவாக இது போன்ற முடிவுகளில் பிரதான நடுவர் பைன் லெக்கில் நிற்கும் இரண்டாம் நடுவரிடம் பொறுமையாக கலந்தாலோசிப்பார்கள். ஆனால் இம்முறை ஆலம் தெர் சட்டென தன் முடிவை அறிவித்து விட்டார். எனக்கு இதில் ஏதோ சூதாட்ட சதி இருக்குமா என ஒரு சந்தேகம்.
பவர் பிளேவின் போது இந்தியா எவ்வளவு விக்கெட்டுகள் இழக்கும் என சூதாட்டம் இருக்கலாம். பொதுவாக ஒன்றோ இரண்டோ விக்கெட்டுகள் விழும். அதை எதிர்பார்த்து நிறைய பேர் விக்கெட் விழும் என பந்தயம் கட்டியிருக்கலாம். அப்போது விக்கெட் விழாவிட்டால் சூதாட்டக்காரர்களுக்கு பெருத்த லாபம். ஒருவேளை அவர்கள் தான் நடுவரை விலைக்கு வாங்கி விட்டார்களா?
இன்றைய விளையாட்டின் ஒரே சுவாரஸ்யமான அம்சம் இது மட்டும் தான். மற்றபடி ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் முதலில் மட்டையாடிய இந்தியா அடித்தாட சிரமப்பட்டது. அதற்குரிய பாதி பெருமை ஆடுதளத்துக்கு தான். பின்னர் பவர் பிளேவின் போது வெயிலும் மழையும் சேர்ந்து ஆடுதளத்தை சற்றே வேகமாக்கியது. பின்னர் வங்கதேசம் மட்டையாடிய போது ஆடுதளம் சுலபமாகியது. இந்தியாவின் பந்து வீச்சும் பாஸ்ட்புட் கடை மாஸ்டர் முட்டையை உடைக்கிற அளவில் தான் ஆபத்தாக இருந்தது. அதற்கு போய் முட்டுக்கொடுக்க முடியாமல் வங்கதேச மட்டையாளர்கள் திணறினார்கள்.

 அல்லது திணறியது போல் நடித்தார்களா? அவர்கள் பவர் பிளேயில் கூட ஆக்ரோசமாய் ஆட முயலவில்லை. கணிசமான நேரம் அவர்கள் ஆடுவது ஒரு டிராவை நோக்கிப் போகிற டெஸ்ட் ஆட்டம் போலத் தான் இருந்தது. கடைசி பத்து ஓவர்கள் 150க்கு மேல் அடிக்க திட்டமிடுகிறார்களோ என குழம்பினேன். முதலிரவில் மனைவியை பாட்டுப்பாடி தூங்க வைக்கிற கணவன் போல மட்டையாடினார்கள். சூதாட்டக்காரர்களிடம் இருந்து வங்கதேச மட்டையாளர்கள் எவ்வளவு பணம் பெற்றார்கள் என வங்கதேச வாரியம் விசாரிக்க வேண்டும். ஆட்டம் முடிந்த பின் மீடியாவிடம் தோனி சொன்னார் “இந்த முன்னூறு இலக்கை நன்றாக மட்டையாடினால் அவர்கள் அடைந்திருக்க முடியும்.” அதற்கான முயற்சி செய்து ஒரு 270ஆவது அடைந்திருக்க வேண்டும். ஆனால் வங்கதேசம் 200ஐ தாண்டக் கூடாது எனும் திட்டத்துடன் ஆடியதாக தோன்றுகிறது. இன்று நடந்தது கிரிக்கெட்டா சூதாட்டமா?

கருத்துகள்

King Viswa இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ்,

நிச்சய்மாக இதுபோன்ற பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

Complete Downer.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...