முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பை காலிறுதியா சூதாட்டமா?



இன்றைய இந்தியா – வங்கதேசம் உலகக்கோப்பை காலிறுதியின் நாற்பதாவது ஓவரில் வேகவீச்சாளர் ரூபல் ஜுசெனின் புல் டாஸ் பந்தை ரோஹித் ஷர்மா அடித்து கேட்ச் கொடுத்தார். ஆனால் பந்து இடுப்புக்கு மேல் உயரமாக வந்ததாக கூறி நடுவர் ஆலம் தேர் அதற்கு நோ பால் என தீர்ப்பளித்தார். ரோஹித் தப்பினார். ஆனால் இது மிகவும் சர்ச்சைக்குரியதாக இப்போது மாறி இருக்கிறது. வங்கதேசத்தில் நடுவர்களின் கொடும்பாவி எரித்திருக்கிறார்கள். வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூரவமாய் ஐ.சி.சிக்கு புகார் அளித்துள்ளது.

 என்னாலும் இந்த நடுவர் முடிவுடன் முழுதும் ஒத்துப் போகவில்லை. பந்து நிச்சயம் இடுப்புயரம் தான், ஆனால் இடுப்புக்கு மேல் போவதாக தெரியவில்லை. பொதுவாக இது போன்ற முடிவுகளில் பிரதான நடுவர் பைன் லெக்கில் நிற்கும் இரண்டாம் நடுவரிடம் பொறுமையாக கலந்தாலோசிப்பார்கள். ஆனால் இம்முறை ஆலம் தெர் சட்டென தன் முடிவை அறிவித்து விட்டார். எனக்கு இதில் ஏதோ சூதாட்ட சதி இருக்குமா என ஒரு சந்தேகம்.
பவர் பிளேவின் போது இந்தியா எவ்வளவு விக்கெட்டுகள் இழக்கும் என சூதாட்டம் இருக்கலாம். பொதுவாக ஒன்றோ இரண்டோ விக்கெட்டுகள் விழும். அதை எதிர்பார்த்து நிறைய பேர் விக்கெட் விழும் என பந்தயம் கட்டியிருக்கலாம். அப்போது விக்கெட் விழாவிட்டால் சூதாட்டக்காரர்களுக்கு பெருத்த லாபம். ஒருவேளை அவர்கள் தான் நடுவரை விலைக்கு வாங்கி விட்டார்களா?
இன்றைய விளையாட்டின் ஒரே சுவாரஸ்யமான அம்சம் இது மட்டும் தான். மற்றபடி ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் முதலில் மட்டையாடிய இந்தியா அடித்தாட சிரமப்பட்டது. அதற்குரிய பாதி பெருமை ஆடுதளத்துக்கு தான். பின்னர் பவர் பிளேவின் போது வெயிலும் மழையும் சேர்ந்து ஆடுதளத்தை சற்றே வேகமாக்கியது. பின்னர் வங்கதேசம் மட்டையாடிய போது ஆடுதளம் சுலபமாகியது. இந்தியாவின் பந்து வீச்சும் பாஸ்ட்புட் கடை மாஸ்டர் முட்டையை உடைக்கிற அளவில் தான் ஆபத்தாக இருந்தது. அதற்கு போய் முட்டுக்கொடுக்க முடியாமல் வங்கதேச மட்டையாளர்கள் திணறினார்கள்.

 அல்லது திணறியது போல் நடித்தார்களா? அவர்கள் பவர் பிளேயில் கூட ஆக்ரோசமாய் ஆட முயலவில்லை. கணிசமான நேரம் அவர்கள் ஆடுவது ஒரு டிராவை நோக்கிப் போகிற டெஸ்ட் ஆட்டம் போலத் தான் இருந்தது. கடைசி பத்து ஓவர்கள் 150க்கு மேல் அடிக்க திட்டமிடுகிறார்களோ என குழம்பினேன். முதலிரவில் மனைவியை பாட்டுப்பாடி தூங்க வைக்கிற கணவன் போல மட்டையாடினார்கள். சூதாட்டக்காரர்களிடம் இருந்து வங்கதேச மட்டையாளர்கள் எவ்வளவு பணம் பெற்றார்கள் என வங்கதேச வாரியம் விசாரிக்க வேண்டும். ஆட்டம் முடிந்த பின் மீடியாவிடம் தோனி சொன்னார் “இந்த முன்னூறு இலக்கை நன்றாக மட்டையாடினால் அவர்கள் அடைந்திருக்க முடியும்.” அதற்கான முயற்சி செய்து ஒரு 270ஆவது அடைந்திருக்க வேண்டும். ஆனால் வங்கதேசம் 200ஐ தாண்டக் கூடாது எனும் திட்டத்துடன் ஆடியதாக தோன்றுகிறது. இன்று நடந்தது கிரிக்கெட்டா சூதாட்டமா?

கருத்துகள்

King Viswa இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ்,

நிச்சய்மாக இதுபோன்ற பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

Complete Downer.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.