முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பை காலிறுதியா சூதாட்டமா?



இன்றைய இந்தியா – வங்கதேசம் உலகக்கோப்பை காலிறுதியின் நாற்பதாவது ஓவரில் வேகவீச்சாளர் ரூபல் ஜுசெனின் புல் டாஸ் பந்தை ரோஹித் ஷர்மா அடித்து கேட்ச் கொடுத்தார். ஆனால் பந்து இடுப்புக்கு மேல் உயரமாக வந்ததாக கூறி நடுவர் ஆலம் தேர் அதற்கு நோ பால் என தீர்ப்பளித்தார். ரோஹித் தப்பினார். ஆனால் இது மிகவும் சர்ச்சைக்குரியதாக இப்போது மாறி இருக்கிறது. வங்கதேசத்தில் நடுவர்களின் கொடும்பாவி எரித்திருக்கிறார்கள். வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூரவமாய் ஐ.சி.சிக்கு புகார் அளித்துள்ளது.

 என்னாலும் இந்த நடுவர் முடிவுடன் முழுதும் ஒத்துப் போகவில்லை. பந்து நிச்சயம் இடுப்புயரம் தான், ஆனால் இடுப்புக்கு மேல் போவதாக தெரியவில்லை. பொதுவாக இது போன்ற முடிவுகளில் பிரதான நடுவர் பைன் லெக்கில் நிற்கும் இரண்டாம் நடுவரிடம் பொறுமையாக கலந்தாலோசிப்பார்கள். ஆனால் இம்முறை ஆலம் தெர் சட்டென தன் முடிவை அறிவித்து விட்டார். எனக்கு இதில் ஏதோ சூதாட்ட சதி இருக்குமா என ஒரு சந்தேகம்.
பவர் பிளேவின் போது இந்தியா எவ்வளவு விக்கெட்டுகள் இழக்கும் என சூதாட்டம் இருக்கலாம். பொதுவாக ஒன்றோ இரண்டோ விக்கெட்டுகள் விழும். அதை எதிர்பார்த்து நிறைய பேர் விக்கெட் விழும் என பந்தயம் கட்டியிருக்கலாம். அப்போது விக்கெட் விழாவிட்டால் சூதாட்டக்காரர்களுக்கு பெருத்த லாபம். ஒருவேளை அவர்கள் தான் நடுவரை விலைக்கு வாங்கி விட்டார்களா?
இன்றைய விளையாட்டின் ஒரே சுவாரஸ்யமான அம்சம் இது மட்டும் தான். மற்றபடி ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் முதலில் மட்டையாடிய இந்தியா அடித்தாட சிரமப்பட்டது. அதற்குரிய பாதி பெருமை ஆடுதளத்துக்கு தான். பின்னர் பவர் பிளேவின் போது வெயிலும் மழையும் சேர்ந்து ஆடுதளத்தை சற்றே வேகமாக்கியது. பின்னர் வங்கதேசம் மட்டையாடிய போது ஆடுதளம் சுலபமாகியது. இந்தியாவின் பந்து வீச்சும் பாஸ்ட்புட் கடை மாஸ்டர் முட்டையை உடைக்கிற அளவில் தான் ஆபத்தாக இருந்தது. அதற்கு போய் முட்டுக்கொடுக்க முடியாமல் வங்கதேச மட்டையாளர்கள் திணறினார்கள்.

 அல்லது திணறியது போல் நடித்தார்களா? அவர்கள் பவர் பிளேயில் கூட ஆக்ரோசமாய் ஆட முயலவில்லை. கணிசமான நேரம் அவர்கள் ஆடுவது ஒரு டிராவை நோக்கிப் போகிற டெஸ்ட் ஆட்டம் போலத் தான் இருந்தது. கடைசி பத்து ஓவர்கள் 150க்கு மேல் அடிக்க திட்டமிடுகிறார்களோ என குழம்பினேன். முதலிரவில் மனைவியை பாட்டுப்பாடி தூங்க வைக்கிற கணவன் போல மட்டையாடினார்கள். சூதாட்டக்காரர்களிடம் இருந்து வங்கதேச மட்டையாளர்கள் எவ்வளவு பணம் பெற்றார்கள் என வங்கதேச வாரியம் விசாரிக்க வேண்டும். ஆட்டம் முடிந்த பின் மீடியாவிடம் தோனி சொன்னார் “இந்த முன்னூறு இலக்கை நன்றாக மட்டையாடினால் அவர்கள் அடைந்திருக்க முடியும்.” அதற்கான முயற்சி செய்து ஒரு 270ஆவது அடைந்திருக்க வேண்டும். ஆனால் வங்கதேசம் 200ஐ தாண்டக் கூடாது எனும் திட்டத்துடன் ஆடியதாக தோன்றுகிறது. இன்று நடந்தது கிரிக்கெட்டா சூதாட்டமா?

கருத்துகள்

King Viswa இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ்,

நிச்சய்மாக இதுபோன்ற பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

Complete Downer.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...