Skip to main content

என்கவுண்டர் கொலைகளுக்கான தீர்வு என்ன?

Image result for 20 tamils encounter

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனையை ஆந்திர அரசு × தமிழர்கள் என தமிழ் தேசிய மனப்பான்மையுடன் மட்டும் பார்க்காமல் இந்தியா முழுக்க காவல்துறை செய்து வரும் மனித உரிமை மீறல் குற்றங்களின் ஒரு பகுதியாகவும் காண வேண்டும். தமிழகத்தில் ரவுடிகளும் பிற குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்படும் போதும் நாம் இவ்வாறே அதை எதிர்க்க வேண்டும். லாக் அப் வன்முறை உள்ளிட்ட அனைத்து வகை காவல் துறை வன்முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.


 கடந்த வருடம் ஒரு வழக்கில் பொய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒரு வேலைக்காரப் பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கு நினைவிருக்கும். அதே போன்று வட, வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினர் பழங்குடிகளுக்கு எதிராக செய்து வரும் குற்றங்கள். காவல் துறையின் அடிப்படையான சீரழிவை சீர்செய்வதன் மூலம் மட்டும் தான் இது போன்ற என்கவுண்டர்களை தடுக்க முடியும். அதே போல் கவுதம் மேனன் போன்றவர்கள் எடுக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளைக் கொண்டாடும் படங்களுக்கும் நாம் தடை கோர வேண்டும்.

 உள்ளூரில் என்கவுண்டர்களை கொண்டாடும் மனநிலை
ஒழிந்தால் மட்டுமே நம் ஆட்கள் வெளிமாநிலங்களில் அவ்வாறு கொல்லப்படுவது நிற்கும். அதே போல் காவல்துறை மீதான உச்சபட்ச அதிகாரத்தை அரசிடம் இருந்து நீதிமன்றங்கள் வசம் ஒப்படைத்து, மனித உரிமை மற்றும் என்.ஜி.ஓக்கள் மூலமாக பொதுமக்களே நிர்வகிக்கும் சாத்தியங்கள் பற்றியும் நாம் பேச வேண்டும். அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் கையாளாக காவல்துறை இருக்கும் வரை அதை ஒழுங்குபடுத்தி நியாயமாக செயல்பட வைப்பது சாத்தியமே இல்லை. காவல்துறை மக்களுக்காக வேலை செய்ய அது மக்கள் பொறுப்பில் வர வேண்டும்.

 நாம் மக்களாட்சியின் கீழ் வாழ்ந்தாலும் நம் ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை மற்றும் தவறுகளை தட்டிக் கேட்க நமக்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்குப் பதிலாக அரசாங்கத்தின் பாதி அதிகாரத்தை நீதிமன்றம் மூலமாய் மக்களே திரும்ப பெறுவது தான் வழி. ஒரு வழக்கு மூலம் சுலபமாய், அரசின் குறுக்கீடின்றி ஒரு ஆணையரையே பதவி நீக்கும் அதிகாரம் நமக்கு கிடைத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் சுலபத்தில் முடிவுக்கு வரும். நேற்று ஒரு கார் ஓட்டுநர் என்னிடம் அவர் போக்குவரத்து காவலர்களால் ஊழலின் பெயரில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி புலம்பிக் கொண்டு வந்தார். இவர்களுக்கு எல்லாம் நீதி கிடைக்க எந்த உடனடி வழியும் இல்லை. நமக்கு மற்றொரு புதுவகை லோக்பால் வேண்டும்.

நிலப் பறிமுதல் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அரசு எப்படி தன் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, சில கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக ஒரு சட்டத்தை திருத்த முடியும் என்பதற்கு அது ஒரு ஆதாரம். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஒப்புதல் பெற்று ஒரு சட்டதிருத்தத்தை நிலுவையில் கொண்டு வரும் வழக்கத்தை மாற்றி, மூன்றாவதாக நீதிமன்றத்திடம் கொண்டு சென்று அங்கு மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னரே எந்த சட்டதிருத்தமோ புது சட்டமோ கொண்டு வர முடியும் என்கிற நிலை வர வேண்டும். இப்போது நம்மிடம் செயல்படுவது மக்களாட்சி அல்ல. ஒரு மென்மையான சர்வாதிகார ஆட்சி.

ஏற்கனவே இங்கு பேசப்பட்ட லோக்பால் போன்ற எந்த நிபுணர் குழுக்களும் நடுவில் இன்றி மக்களும் நீதின்றங்களுமாய் இந்நாட்டை நிர்வகிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு கொடுங்குற்றம் நிகழும் போதே மீடியாவில் புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அதிகாரத்தின் உச்சிக்கொம்பில் இருப்பவர் காதில் இதெல்லாம் விழாது.

Comments

Your point is little confusing. Do you mean to say socialism is the only solution?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...