அம்மா வருகையை ஒட்டி குவிந்திருந்த கரைவேட்டிகளில் சிலர் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்குள் கழிப்பறை பயன்படுத்த வந்திருந்ததை பார்த்தேன். கூட இருந்த ஒருவர் கட்சிக்காரர்களின் வாகங்களை பார்க் செய்வதற்கும் இன்று நூலக வளாகத்தைதான் பயன்படுத்தினார்கள் என்றார். முன்பு நூலகத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்ற ஜெயலலிதா முயன்றதை ஒட்டி நடந்த சர்ச்சையில் சாரு தமிழகத்துக்கு நூலகங்களை விட கழிப்பறைகளே அதிகம் தேவை எனக் கூறியது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. அதிமுக கரைவேட்டிகளை மிக நன்றாய் புரிந்து கொண்டவர் சாரு.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments