அம்மா வருகையை ஒட்டி குவிந்திருந்த கரைவேட்டிகளில் சிலர் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்குள் கழிப்பறை பயன்படுத்த வந்திருந்ததை பார்த்தேன். கூட இருந்த ஒருவர் கட்சிக்காரர்களின் வாகங்களை பார்க் செய்வதற்கும் இன்று நூலக வளாகத்தைதான் பயன்படுத்தினார்கள் என்றார். முன்பு நூலகத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்ற ஜெயலலிதா முயன்றதை ஒட்டி நடந்த சர்ச்சையில் சாரு தமிழகத்துக்கு நூலகங்களை விட கழிப்பறைகளே அதிகம் தேவை எனக் கூறியது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. அதிமுக கரைவேட்டிகளை மிக நன்றாய் புரிந்து கொண்டவர் சாரு.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share