Skip to main content

தமிழக அரசியலில் தலைமை வெற்றிடம்


தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத விசித்திர சூழல் உருவாகி உள்ளது. ஜெயயலிதாவின் உடல்நலக் கேடு, கருணாநிதியின் முதுமை, அதிமுகவுக்குள் மாற்று சக்திகளின் எழுச்சி, தி.மு.கவில் ஸ்டாலின் தன் அப்பாவையே எரிச்சல்பட வைக்கும் அளவு வளர்ந்துள்ளது அடிப்படையில் இங்குள்ள் அரசியல் தலைமையை பலவீனமாக்கி உள்ளது. எம்.ஜி.ஆர் உடல் நலமற்று, கட்சியில் தன் பிடிப்பை இழந்த கட்டத்திலும் இங்கு மாற்றுத் தலைவராக திமுகவில் கருணாநிதி இருந்தார். இன்று ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றாக விஜயகாந்தும் ஸ்டாலினும் மட்டுமே உள்ளார்கள்.

விஜயகாந்துக்கு அரசியல் நிர்வாக அனுபவமோ ஒரு தலைவராக ஆளுமையோ இல்லை. ஸ்டாலின் இதுவரை தலைமையை ருசிக்காதவர். மக்கள் மத்தியில் ஒரு தலைவராக அவரது செல்வாக்கு என்னவென நமக்கு தெரியாது.
இந்த சூழலில் தான் மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணியாக இத்தேர்தலில் களமிறங்குகிறது. வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கை அது பிரிக்கலாம் என கணிக்கப்படுகிறது. முதன்முறையாய் திமுக மூன்றாம் அணியை ஒரு தலைவலியாக கருதுகிறது. விஜயகாந்த் போன்ற ஒரு மூன்றாம் நிலை தலைவரை திமுகவும் அதிமுகவும் போட்டியாளராக யோசித்துப் பார்க்கும் என்பதே சில வருடங்களுக்கு முன் யாராவது சொன்னால் நகைச்சுவையாய் கருதப்பட்டிருக்கும். போன தேர்தலில் தெமுதிக 29 இடங்களை வென்றது திமுகவின் படுதோல்வியின் பின்னணியில் முக்கியமானது. ஏனென்றால் இதற்கு முன் ஒரு திராவிட கட்சி தோல்வி அடைந்தால் மற்றொரு திராவிட கட்சி முழுவெற்றி பெறும். திராவிட கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெறும். ஆனால் திராவிட கட்சிகளில் ஒன்றை முதன்முறையாய் தெமுதிக பின்னணியில் தள்ளியது. தி.மு.கவை மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள், பா.ம.க, மற்றும் இடதுசாரிகளின் இடத்தை காலி செய்தது. தி.மு.கவும் இத்தேர்தலில் மீண்டு வர உள்ள வாய்ப்பும் இவர்களுக்கு இப்போதைக்கு இல்லை. இந்நிலையில் தான் தெமுதிகவை தன் கூட்டணியில் சேர்க்க தி.மு.க மிகவும் பிரயத்தனம் செய்ய வேண்டியாகியது.
ஆனால் அதே நேரம் இச்சூழல் முழுக்க போன தேர்தலின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உருவானது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தேர்தலில் தெமுதிக தன்னை தக்க வைக்கும் என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை. ஒருவேளை இத்தேர்தலுடன் திமுகவும் அதிமுகவும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
ஆனால் உண்மையான பிரச்சனை வேறு. அதிமுக கடந்த ஐந்தாண்டுகளில் செய்த பிரம்மாண்ட ஊழல்கள், வெள்ளத்தின் போது அதன் நிர்வாகம் திணறிய விதம், ஜெயலலிதா மக்களையோ மீடியாவையோ சந்திப்பதை முடிந்தவரை தவிர்ப்பது இங்கு கிட்டத்தட்ட ஆட்சியில் எந்த கட்சியுமே இல்லையோ எனும் ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
திமுகவை பொறுத்தவரையில் கட்சியை புதுப்பித்து மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை பெற அவர்கள் ஸ்டாலினை தலைவராக முன்னிறுத்துவது தான் ஒரே வழி. ஆனால் கருணாநிதிக்கு அதிகார ருசி இன்னும் தீரவில்லை. அவர் தன் மகனையே தனக்கு போட்டியாக நினைக்கிறார். கருணாநிதி தலைவராய் நீடிப்பதன் முக்கிய சிக்கல் அவரது பிற வாரிசுகளின் அதிகார துஷ்பிரயோகம் தான். ஒருவேளை அவர் அடுத்த முதல்வர் ஆகிறார் என்றால் கனிமொழிக்கு ஒரு முக்கிய பதவி கொடுப்பார். அழகிரியையும் மன்னித்து ஏற்றுக் கொள்வார். மாறன் சகோதரர்களும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள். இந்த மூவரையும் அதிகார களத்தில் இருந்து வெளியேற்றி தி.மு.கவை ஒரு கட்டுக்கோப்பான கட்சியாக மாற்றுவதற்கு சிறந்த வழி ஸ்டாலினை தலைவராக்கி முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே. வீட்டில் ஒரு பூனையிருந்தால் எலிகளின் ராஜ்ஜியம் தானே அடங்கி விடுமே. ஆனால் கருணாநிதி பூனையை கட்டிப் போட்டு விட்டு எலிகள் உருவாக்கும் களேபரத்தில் தன் அதிகாரத்தை தக்க வைக்க முனைகிறார்.
அதிமுகவுக்குள் ஜெயலலிதாவுக்கு போட்டித்தரப்பாக முன்னர் சசிகலா இருந்தார். பின்னர் இப்போது பன்னீர் செல்வத்தின் குழுவினர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை பொறுத்தமட்டில் முக்கிய தலைவலி இவர்களே. உடல்நிலை, ஊழல் வழக்குகள் வேறு அவரை பலவீனப்படுத்தி உள்ளது. இத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் இந்த எதிர் அதிகார மையங்களை முழுக்க நசுக்கி விட்டு மீண்டும் முழுமுதல் தலைவராக முடியும். சராசரி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட அது கட்சிக்குள் தலைமைக்கு எதிரான கலகங்களை இன்னும் தீவிரப்படுத்தும்.

அடுத்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் தலைமை மையங்கள் எப்படி உருக்கொள்ளப் போகின்றன என்பது சுவாரஸ்யமான கேள்வி. காத்திருந்து பார்ப்போம்!
நன்றி: வெற்றிவேந்தன், ஏப்ரல் 2016

Comments

Selvadurai said…
நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். இனவாதம் பேசும் சீமானின் கருத்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுபடாது. களத்தில் இருக்கும் முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாறி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...