வைரமுத்துவுக்கும் ஜெயமோகனுக்கும் பிறகு மதமதவென்ற பருவப்பெண் போன்ற மொழியை கொண்டவர் போகன் சங்கர். அவரது ரசிகன் நான். இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் வெளியாகும் பத்து நூல்களில் அவரது இரு நூல்களும் அடக்கம். அதே போல் சமகாலத்தின் மிக முக்கிய சிறுகதையாளரான எஸ்.செந்தில்குமாரின் மருக்கை நாவலும், சுப்பிரபாரதி மணியன், புலியூர் முருகேசன், அன்பு நண்பர் ஆத்மார்த்தியின் நூல்களும் வெளியாகின்றன. இவ்வருடம் நாம் வாசிக்க நிறைய நல்ல நூல்கள் காத்திருக்கின்றன...
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share