வைரமுத்துவுக்கும் ஜெயமோகனுக்கும் பிறகு மதமதவென்ற பருவப்பெண் போன்ற மொழியை கொண்டவர் போகன் சங்கர். அவரது ரசிகன் நான். இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் வெளியாகும் பத்து நூல்களில் அவரது இரு நூல்களும் அடக்கம். அதே போல் சமகாலத்தின் மிக முக்கிய சிறுகதையாளரான எஸ்.செந்தில்குமாரின் மருக்கை நாவலும், சுப்பிரபாரதி மணியன், புலியூர் முருகேசன், அன்பு நண்பர் ஆத்மார்த்தியின் நூல்களும் வெளியாகின்றன. இவ்வருடம் நாம் வாசிக்க நிறைய நல்ல நூல்கள் காத்திருக்கின்றன...
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments