கார், வீடு, ஐபோன், வெளிநாட்டு பயணங்கள் இவை மட்டுமே சிலருக்கு ஒரே லட்சியமாக இருக்கிறது. அதற்காய் இரவு பகலான உழைப்பு. இவற்றை அடைந்ததும் வேறேதாவது முன்னதை விட விலை மதிப்பான ஒரு பொருளை வாங்க கனவு காண்கிறார்கள். அதற்காய் கூடுதல் பணமீட்ட முனைவார்கள். இப்படியே வாழ்க்கை முழுக்க நிரந்தர வாடிக்கையாளர்கள். இது சமூகத்தில் சுலபமாய் நற்பெயர் பெற்றுத் தருகிறது. எனக்கு இவர்களை காணும் போது ஜெயமோகன் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் சொன்னது நினைவு வரும்: “வாழ்க்கை என்பது உணவு மேஜைக்கும் கழிப்பறைக்கும் இடைப்பட்டதாய் முடிந்து விடக் கூடாது”
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்