கார், வீடு, ஐபோன், வெளிநாட்டு பயணங்கள் இவை மட்டுமே சிலருக்கு ஒரே லட்சியமாக இருக்கிறது. அதற்காய் இரவு பகலான உழைப்பு. இவற்றை அடைந்ததும் வேறேதாவது முன்னதை விட விலை மதிப்பான ஒரு பொருளை வாங்க கனவு காண்கிறார்கள். அதற்காய் கூடுதல் பணமீட்ட முனைவார்கள். இப்படியே வாழ்க்கை முழுக்க நிரந்தர வாடிக்கையாளர்கள். இது சமூகத்தில் சுலபமாய் நற்பெயர் பெற்றுத் தருகிறது. எனக்கு இவர்களை காணும் போது ஜெயமோகன் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் சொன்னது நினைவு வரும்: “வாழ்க்கை என்பது உணவு மேஜைக்கும் கழிப்பறைக்கும் இடைப்பட்டதாய் முடிந்து விடக் கூடாது”
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share