முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடக இசையும் ஹரிஜன சேவையும்

Image result for gandhi with harijans
டி.எம் கிருஷ்ணா ஒரு இசைக்கலைஞர். அவர் தன்னளவில் சாதியை களையும் முயற்சியில் ஈடுபடுகிறார். தான் அறிந்த இசையை அதற்கு பயன்படுத்துகிறார். அவர் அதை செய்யக் கூடாது என நாம் எப்படி சொல்ல முடியும்? இது தடித்தனம அல்லவா? அவர் சேரிக்கு சென்று இசை பாடினால் சமூகத்துக்கு என்ன பாதகம் வந்து விடப் போகிறது? இப்படி நேற்று ஒரு நண்பர் (நான் எழுதியதற்கு எதிர்வினையாக) என்னிடம் சற்று கோபமாய் கேட்டார். நான் அவரிடம் இப்படி சொன்னேன்:


டி.எம் கிருஷ்ணா கர்நாடக இசை ஒரு சிறப்பான இசை வடிவம். அதை மக்கள் அறிந்து ரசிக்க வேண்டும் என்று மட்டும் தன் சமத்துவ கச்சேரிகளை நடத்தவில்லை. பிராமணர்களுக்கு மட்டுமேயான ஒரு சொத்தை தான் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு கொண்டு சேர்க்க போவதாய் கோருகிறார். இதில் தான் சிக்கல் வருகிறது. பொதுவாக கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு கலாச்சார அதிகாரம் உள்ளது. அது ஒரு சாதியின் கலாச்சார மேன்மையின் குறியீடாக விளங்குகிறது. அதை மற்றொரு (தாழ்த்தப்பட்ட) சாதிக்கு எடுத்துச் செல்வதன் வழி டி.எம் கிருஷ்ணா அறிந்தோ அறியாமலோ இந்த கலாச்சார அதிகாரத்தை, சாதிய பண்பாட்டு மேன்மையின் குறியீட்டை இரட்டிப்பு வலிமை கொண்டதாக்குகிறார். இதை டி.எம் கிருஷ்ணாவை எதிர்க்கிற அவர் சமூகத்தை சேர்ந்த இசை அறிஞர்களும் கலைஞர்களும் கூட உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை.

 பா.ரஞ்சித் ரஜினியை வைத்து “கபாலி” எடுத்ததன் நோக்கமே தன் சமூகத்திற்கான ஒரு பண்பாட்டு, அரசியல் குறியீட்டை உருவாக்கத் தான் என ஒரு பேட்டியில் நேரடியாக கூறுகிறார். இதையே தான் டி.எம் கிருஷ்ணா தெரியாமலே செய்கிறார். பா.ரஞ்சித்தின் செயல் ஒரு எதிர்-அரசியலாக தேவையான ஒன்று. அது அதிகார மையங்களை சற்றே அசைக்க உதவும். ஆனால் டி.எம் கிருஷ்ணா செய்வது (தன் சமூகத்தின்) அதிகார மையங்களை எதிர்ப்பதாய் கோரிக் கொண்டே வலுப்படுத்தும் காரியமாகும்.

அதாவது “எங்கள் இசை உயர்வானது; அதனால் நாங்களும் உயர்வானவர்கள்” எனும் கோரிக்கை இதன் பின்னால் உள்ளது. ஒரு ராக் இசை கச்சேரி நடத்துபவரிடம் இத்தகைய ஒரு சமூக கோரல் இருக்காது. அவர் இது ஒரு பொழுதுபோக்கு வடிவம், இதை வைத்து நான் ஒரு தொழில் செய்கிறேன் என்று தான் கோருவார். ஆனால் டி.எம் கிருஷ்ணா இசையை தன் பண்பாட்டுக்கான ஒரு குறியீடாகவும் தான் மறைமுகமாய் கோருகிறார். அதன் மூலம் தன் சமூக மேன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறார். இது தான் சிக்கலானது.

இதை மேலோட்டமாய் கவனித்தால் நமக்கு ஒரு முற்போக்கான செயலாக படலாம். அதாவது நாளை தலித்துகளுக்கு இலவசமாய் சம்ஸ்கிருத சுலோகங்கள் சொல்லித் தந்து அவர்களையும் பூஜை செய்ய அனுமதிக்கப் போகிறோம் என சிலர் கிளம்பினால் அதுவும் புரட்சியாக தோன்றலாம். ஆனால் அது உண்மையில் முற்போக்கு செயல் அல்ல. அது இந்து மதத்தின் அதிகார மையத்தை வலுப்படுத்தும் அரசியல் மட்டுமே. இதையே சமிஸ்கிருதமயமாக்கல் என்கிறார்கள்.

இதையே காந்தி தலித்துகளை ஹரிஜனம் என அழைத்து அவர்களை அனைத்து சமூகங்களும் பரிவுடன் கனிவுடன் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட போது செய்தார்.

என் நண்பர் ஒருவர் ஒரு பிராமண சமூகத்து பெண்ணை மணம் செய்தார். அப்பெண்ணின் பெற்றோர் ஒருமுறை பேச்சின் இடையே “உங்களுக்கு நாங்கள் பூணூல் அணிவித்து ஒரு சடங்கு செய்ய விரும்புகிறோம்” என்றார்கள். நண்பர் உடனே அதை மறுத்து விட்டார். ஏனென்றால் அந்த விருப்பம் பெயரளவில் முற்போக்காய் தோன்றினாலும் அது உள்ளார்ந்த ஆபத்தை கொண்டது. அதை ஏற்றதும் நீங்கள் மறுக்க முடியாதபடி பூணூல் ஒரு உயர் கலாச்சார குறியீடு என ஏற்றுக் கொள்வீர்கள்.

டி.எம் கிருஷ்ணா வெறுமனே இசைக்கச்சேரியை எங்கு வேண்டுமானாலும் நடத்தட்டும். பிரச்சனையில்லை. ஆனால் அதை ஒரு சமூக புரட்சியாக, சேவையாக கோரும்போது அவர் இப்படியான ஒரு “பூணூலைத்” தான் அணிவிக்க முயல்கிறார்.


கருத்துகள்

magudi இவ்வாறு கூறியுள்ளார்…
by talking about டி.எம் கிருஷ்ணா வெறுமனே இசைக்கச்சேரியை எங்கு வேண்டுமானாலும் நடத்தட்டும். பிரச்சனையில்லை. ஆனால் அதை ஒரு சமூக புரட்சியாக, சேவையாக கோரும்போது ," and " “எங்கள் இசை உயர்வானது; அதனால் நாங்களும் உயர்வானவர்கள்” எனும் கோரிக்கை இதன் பின்னால் உள்ளது."-- you are actually doing gross injustice to the villagers/slums who organized such an event in their village. Carnatic music was one of the events along with other folk art presentations. They organized and invited TMK to be part of it.They did it because they encourages all art forms.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.