முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடக இசையும் ஹரிஜன சேவையும்

Image result for gandhi with harijans
டி.எம் கிருஷ்ணா ஒரு இசைக்கலைஞர். அவர் தன்னளவில் சாதியை களையும் முயற்சியில் ஈடுபடுகிறார். தான் அறிந்த இசையை அதற்கு பயன்படுத்துகிறார். அவர் அதை செய்யக் கூடாது என நாம் எப்படி சொல்ல முடியும்? இது தடித்தனம அல்லவா? அவர் சேரிக்கு சென்று இசை பாடினால் சமூகத்துக்கு என்ன பாதகம் வந்து விடப் போகிறது? இப்படி நேற்று ஒரு நண்பர் (நான் எழுதியதற்கு எதிர்வினையாக) என்னிடம் சற்று கோபமாய் கேட்டார். நான் அவரிடம் இப்படி சொன்னேன்:


டி.எம் கிருஷ்ணா கர்நாடக இசை ஒரு சிறப்பான இசை வடிவம். அதை மக்கள் அறிந்து ரசிக்க வேண்டும் என்று மட்டும் தன் சமத்துவ கச்சேரிகளை நடத்தவில்லை. பிராமணர்களுக்கு மட்டுமேயான ஒரு சொத்தை தான் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு கொண்டு சேர்க்க போவதாய் கோருகிறார். இதில் தான் சிக்கல் வருகிறது. பொதுவாக கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு கலாச்சார அதிகாரம் உள்ளது. அது ஒரு சாதியின் கலாச்சார மேன்மையின் குறியீடாக விளங்குகிறது. அதை மற்றொரு (தாழ்த்தப்பட்ட) சாதிக்கு எடுத்துச் செல்வதன் வழி டி.எம் கிருஷ்ணா அறிந்தோ அறியாமலோ இந்த கலாச்சார அதிகாரத்தை, சாதிய பண்பாட்டு மேன்மையின் குறியீட்டை இரட்டிப்பு வலிமை கொண்டதாக்குகிறார். இதை டி.எம் கிருஷ்ணாவை எதிர்க்கிற அவர் சமூகத்தை சேர்ந்த இசை அறிஞர்களும் கலைஞர்களும் கூட உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை.

 பா.ரஞ்சித் ரஜினியை வைத்து “கபாலி” எடுத்ததன் நோக்கமே தன் சமூகத்திற்கான ஒரு பண்பாட்டு, அரசியல் குறியீட்டை உருவாக்கத் தான் என ஒரு பேட்டியில் நேரடியாக கூறுகிறார். இதையே தான் டி.எம் கிருஷ்ணா தெரியாமலே செய்கிறார். பா.ரஞ்சித்தின் செயல் ஒரு எதிர்-அரசியலாக தேவையான ஒன்று. அது அதிகார மையங்களை சற்றே அசைக்க உதவும். ஆனால் டி.எம் கிருஷ்ணா செய்வது (தன் சமூகத்தின்) அதிகார மையங்களை எதிர்ப்பதாய் கோரிக் கொண்டே வலுப்படுத்தும் காரியமாகும்.

அதாவது “எங்கள் இசை உயர்வானது; அதனால் நாங்களும் உயர்வானவர்கள்” எனும் கோரிக்கை இதன் பின்னால் உள்ளது. ஒரு ராக் இசை கச்சேரி நடத்துபவரிடம் இத்தகைய ஒரு சமூக கோரல் இருக்காது. அவர் இது ஒரு பொழுதுபோக்கு வடிவம், இதை வைத்து நான் ஒரு தொழில் செய்கிறேன் என்று தான் கோருவார். ஆனால் டி.எம் கிருஷ்ணா இசையை தன் பண்பாட்டுக்கான ஒரு குறியீடாகவும் தான் மறைமுகமாய் கோருகிறார். அதன் மூலம் தன் சமூக மேன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறார். இது தான் சிக்கலானது.

இதை மேலோட்டமாய் கவனித்தால் நமக்கு ஒரு முற்போக்கான செயலாக படலாம். அதாவது நாளை தலித்துகளுக்கு இலவசமாய் சம்ஸ்கிருத சுலோகங்கள் சொல்லித் தந்து அவர்களையும் பூஜை செய்ய அனுமதிக்கப் போகிறோம் என சிலர் கிளம்பினால் அதுவும் புரட்சியாக தோன்றலாம். ஆனால் அது உண்மையில் முற்போக்கு செயல் அல்ல. அது இந்து மதத்தின் அதிகார மையத்தை வலுப்படுத்தும் அரசியல் மட்டுமே. இதையே சமிஸ்கிருதமயமாக்கல் என்கிறார்கள்.

இதையே காந்தி தலித்துகளை ஹரிஜனம் என அழைத்து அவர்களை அனைத்து சமூகங்களும் பரிவுடன் கனிவுடன் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட போது செய்தார்.

என் நண்பர் ஒருவர் ஒரு பிராமண சமூகத்து பெண்ணை மணம் செய்தார். அப்பெண்ணின் பெற்றோர் ஒருமுறை பேச்சின் இடையே “உங்களுக்கு நாங்கள் பூணூல் அணிவித்து ஒரு சடங்கு செய்ய விரும்புகிறோம்” என்றார்கள். நண்பர் உடனே அதை மறுத்து விட்டார். ஏனென்றால் அந்த விருப்பம் பெயரளவில் முற்போக்காய் தோன்றினாலும் அது உள்ளார்ந்த ஆபத்தை கொண்டது. அதை ஏற்றதும் நீங்கள் மறுக்க முடியாதபடி பூணூல் ஒரு உயர் கலாச்சார குறியீடு என ஏற்றுக் கொள்வீர்கள்.

டி.எம் கிருஷ்ணா வெறுமனே இசைக்கச்சேரியை எங்கு வேண்டுமானாலும் நடத்தட்டும். பிரச்சனையில்லை. ஆனால் அதை ஒரு சமூக புரட்சியாக, சேவையாக கோரும்போது அவர் இப்படியான ஒரு “பூணூலைத்” தான் அணிவிக்க முயல்கிறார்.


கருத்துகள்

magudi இவ்வாறு கூறியுள்ளார்…
by talking about டி.எம் கிருஷ்ணா வெறுமனே இசைக்கச்சேரியை எங்கு வேண்டுமானாலும் நடத்தட்டும். பிரச்சனையில்லை. ஆனால் அதை ஒரு சமூக புரட்சியாக, சேவையாக கோரும்போது ," and " “எங்கள் இசை உயர்வானது; அதனால் நாங்களும் உயர்வானவர்கள்” எனும் கோரிக்கை இதன் பின்னால் உள்ளது."-- you are actually doing gross injustice to the villagers/slums who organized such an event in their village. Carnatic music was one of the events along with other folk art presentations. They organized and invited TMK to be part of it.They did it because they encourages all art forms.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...