Skip to main content

மொழித் திணிப்பு 2

இதுவரை இந்தி திணிப்பு பற்றி பேசினோம்.
இனி தமிழுக்கு வருவோம். ஐம்பதுகளுக்குப் பிறகு திராவிட கட்சிகள் தமிழ் தேசிய அலையை பரவலாக்கினார்கள். அதை அரசியல் வெற்றி சூத்திரமாக்கினார்கள். தமிழுணர்வை நம் ரத்தத்தில் கலந்தார்கள். ஆனால் தமிழ்ப்பற்று, தமிழார்வம் எத்தனை பேருக்கு இங்கு உண்டு? உண்மையை சொன்னால், வடக்கத்திய அரசு இந்தியை திணிப்பது போலத் தான் தமிழக அரசு தமிழை நம் மீது திணித்தது.

 நம் திராவிட கட்சிகளுக்கு தமிழ் என்றால் செவ்வியல் தமிழ் மட்டுமே. ஆக அவர்கள் பத்து வயதுக் குழந்தையை திருக்குறள் மனனம் செய்ய வைத்தார்கள். இந்த குழந்தைகளுக்கு இன்று புழக்கத்தில் இல்லாத பல சொற்கள் எப்படி புரியும், பள்ளியில் படிக்கும் தமிழ் அந்நியமாய் இராதா என யோசிக்கவில்லை. உதாரணமாய், பேஸ்புக்கில் புழங்கும் இன்றைய ஒரு 13 வயது பையனுக்கு திருவாசகம் கற்க வேண்டிய தேவை என்ன? அந்த தமிழ் அவனுக்கு சமிஸ்கிருதம் போலத் தோன்றாதா? நான் பள்ளி மாணவனாய் இருக்கையில் திருக்குறளை கடுமையாய் வெறுத்தேன். ஏனென்றால் எனக்கு அந்நியமான “மொழியில்” அது இருந்தது. “துப்பார்க்கு துப்பாய” என குறள் எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஏன் இதையெல்லாம் படிக்க வேண்டும் என புரியவில்லை.
 இன்றும் பல தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கடுமையான ஒரு பாடமாய் உள்ளது. எந்த பெற்றோரிடம் விசாரித்தாலும் இதை புரிந்து கொள்ளலாம். தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண்கள் அதிகம் பெற நம் மாணவர்கள் திணறுகிறார்கள். ஏனென்றால் இன்று புழக்கத்தில் இல்லாத ஒரு தமிழ் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது.
ஒரு பள்ளி மாணவனாய் நான் துணைப்பாடத்தை மட்டுமே நேசித்தேன். நான் மட்டுமல்ல என் சகமாணவர்களும் தான். ஏனெனில் அதில் சிறுகதைகள் இருந்தன. அன்று நாங்கள் கதைப்புத்தகங்களை ஒளித்து வகுப்புக்கு கொண்டு வந்து படிப்போம். ஆசிரியர்கள் கண்டால் பிரம்பால் அடிப்பார்கள். இது என்ன அநியாயம்? நாம் காமிக்ஸ் மூலம் என் தமிழை கற்கக் கூடாதா? கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல் எனக்கு தமிழை அறிமுகம் செய்யாதா? தேவாரமும், தேம்பாவணியும் மூலம் தான் கற்க வேண்டுமா? இது ஒரு தொல் பண்பாட்டு திணிப்பு ஆகாதா?
பதினைந்து வயதுக்கு மேல் தான் எனக்கு மரபுக் கவிதை எழுதுவதிலும், மரபிலக்கியம் படிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அந்த ஆர்வம் ஏற்பட்டது கதைப்புத்தக வாசிப்பினால் தான்; தமிழ் ஐயாக்களின் உரைகளால் அல்ல. நான் விதிவிலக்கு. என்னுடன் படித்தவர்கள் தமிழை சமிஸ்கிருதம் போலத் தான் இன்றும் பார்க்கிறார்கள். “துப்பார்க்க துப்பாயவின்” திகிலை அவர்கள் இன்னும் கடக்க வில்லை.
மரபிலக்கிய அறிமுகம் அவசியம் தான். ஆனால் அது மாணவர்கள் வளர்ந்த பின் நிகழ வேண்டும். அல்லது தேவாரமும் திருவாசகமும் ஓதுவதை கேட்டு வளரும் சுழல் இருக்க வேண்டும். இல்லாத ஒன்றை திணித்தல் ஆகாது. மரபுக் கவிதை மொழியை விட நாம் எளிய உரைநடைக்கு 80% இடம் அளிக்க வேண்டும். வகுப்பில் நாடகம் போடுவது, கதை கூறுவது ஆகியவை ஊக்குவிக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழய்யாக்கள் செந்தமிழில் பேசுவதை நிறுத்த வேண்டும். தமிழ் கற்பதை இயல்பாக, சுவாரஸ்யமாக, எளிதாக ஆக்க வேண்டும். அது மட்டுமல்ல தமிழ்த் தேர்வுகளில் மதிப்பெண்களை சற்று தாராளமாய் வழங்க வேண்டும். இன்று கல்லூரியில் படிக்க வரும் மாணவர்களுக்கு தமிழில் ஒரு வரி தவறில்லாமல், எழுத்துப்பிழை இன்றி எழுதத் தெரியாது. ஏனென்றால் பள்ளியில் உரைநடைத் தமிழ் சரியானபடி கற்றுவிக்கப்படுவதில்லை. சொந்தமாய் எழுதும் பயிற்சிகள் இல்லை. புரியாத தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் மனனம் செய்தே அவர்கள் களைத்து விடுகிறார்கள்.
 ஒரு எளிய கேள்வி: ”இயல்வது கரவேல்”. “கரவேல்” என்ற சொல்லை நீங்கள் எங்காவது தமிழகத்தில் பயன்படுத்த முடியுமா? அதை ஒரு முகநூல் பின்னூட்டத்தில் எழுத முடியுமா? டீக்கடைக்கு சென்று “கரவேல்” என சொன்னால் என்ன கிடைக்கும்? தமிழனுக்கே தெரியாத சொல் தமிழனால் பயன்படுத்த முடியாத சொல் ஏன் அவன் தொண்டையில் திணிக்கப்பட வேண்டும்? ஒரு இந்திச் சொல்லுக்கும் ”கரவேலுக்கும்” என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சின்ன பையனுக்கு ரெண்டும் ஒன்று தான்! மோடி இந்தியை திணித்ததற்கும் நம் திராவிட பிழம்புகள் ”கரவேலை” திணிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


Comments

Unknown said…
டீக்கடைக்குப் போய் பித்தாகோரஸ் தீரத்தைப் பற்றிக் கேட்டாலும் ஒன்றும் தெரியாது என்ற பதில்தான் வரும். அதனால் கணக்குப் பாடத்தில் முக்கால்வாசிப் பாடங்களை நீக்கிவிடலாமே. (மற்ற எல்லாப் பாடங்களுக்கும்கூட டீக்கடையை அளவுகோலாக வைத்தால் இன்னும் நல்லது)

சிறுபிள்ளைத்தனமான வாதத்தை முன் வைக்கிறீர்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...