Skip to main content

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (7)



Related image

(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

14. முற்போக்கான மாநிலமாக அறியப்படும் கேரளாவிலும் கூட சாதிய அபிமானத்துடன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் அங்கு ஒழியவில்லை. எனில், கதாநாயகர்களுக்குச் சாதிய அடையாளங்களுடன் பெயர் வைப்பது தவிர்க்க முடியாதது அல்லவா? இதை எப்படிப் புரிந்து கொள்வது?

ஆர். அபிலாஷ்: கேரளாவில் சாதி படிநிலை பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது இயல்புத்தன்மை கொண்டதால் ஏற்பட்ட நிலை அது. அங்கு ஒருவரை சாதிப்பெயரால் அழைப்பது இழிவு அல்ல. ஆனாலும் ஈழவ மக்களின் அரசியல் எழுச்சி அங்கு சாதி குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் ரவியின்கம்மட்டிப் பாடம்ஒரு நல்ல உதாரணம்.
எது எப்படியோ, சாதியை குறிப்பிடாமல் இருப்பது சாதியை ஒழிப்பது ஆகாது. சாதியை பல விதங்களில் இந்திய சமூகம் சார்ந்திருக்கிறது. நமது குடும்பம், நிலவுடைமை, பெண்களின் மீதான சமூக கட்டுப்பாடு, நமது சுய அடையாளம், அரசியலில் நமது செல்வாக்கு என பல (சமூகக் கேடான) விசயங்கள் சாதியை நம்பி இருக்கின்றன. நீங்கள் சாதிக்கு வெளியே இருந்தால் திருமணம் செய்ய முடியுமா சொல்லுங்கள்? என்னதான் புரட்சித் திருமணம் செய்தாலும் மீள மீள சாதிக்குள் விழுந்தே ஆக வேண்டும்அப்படியான சூழல்கள் சந்தர்பங்கள் வாழ்வில் தோன்றியபடியே இருக்கும்.
ஆகையால், நாம் சாதியை மூடி மறைக்காமல் அது குறித்து சினிமாவில் இன்னும் திறந்த மனத்துடன் பேச வேண்டும் என்பதே என் விருப்பம். உதாரணமாய், “காதல்போன்ற படங்களில் இன்னும் நேரடியாய் சாதி கலவரங்கள், வன்முறை, ஒடுக்குமுறையை குறிப்பிட்டு விவாதிக்கக் கூடிய சூழல் இங்கு தோன்ற வேண்டும். ஒரு விசயத்தை பேசாமல் இருக்கையில் தாம் குரோதம் நொதித்து வன்முறை வளர்ந்து சமூகப் பிரச்சனைகள் வெடிக்கின்றன. ஆனால் பேச பேச நாம் ஒரு புரிந்துணர்வை எட்டி விட முடியும். இமையத்தின்பெத்தவன்கதை ஒரு அருமையான உதாரணம். நமது தணிக்கைத் துறை இவ்விசயத்தில் இன்னும் முற்போக்காய் இருக்க வேண்டும்.
15. மலையாள சினிமாவில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள புதிய அலைக்குப் பிறகான திரைப்படங்களின் போக்கு எப்படி இருக்கிறது?
ஆர். அபிலாஷ்: ஆமாம், வித்தியாசமான மண்ணின் மணம் கொண்ட புது நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் படங்கள் மலையாளத்தில் தற்போது வருகின்றன. பகத் பாஸில், நிவின் பாலி போன்ற நடிக்கத் தெரிந்த நட்சத்திரங்கள் இந்த புது வரவுகளின் மையத்தில் இருக்கிறார்கள். மோகன்லால், மம்முட்டியை தாண்டி நல்ல சினிமா உருவாக முடியும் என மலையாளிகள் தமக்குத் தாமே நிரூபிக்கிறார்கள்.
 மலையாள சினிமாவின் இந்த அலை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு வரை படுமட்டமான படங்களின் தொடர் வருகை, மோகன்லால் போன்ற நட்சத்திரங்களின் படங்களே தோல்வி அடைவது, தமிழ் படங்கள் அங்கே வெளியாகி அமோகமாய் ஓடுவது என மலையாள சினிமா உலகமே கிட்டத்தட்ட தரைமட்டமாகும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் எதிர்பாரா விதத்தில் மலையாள சினிமா மீண்டும் வந்துள்ளது. மோகன்லால்புலிமுருகன்எனும் பெரிய வெற்றிப் படம் கொடுத்தார். இன்னொரு பக்கம் ராஜீவ் ரவி, திலீஷ் போத்தன், ஆஷிக் அபு, சமீர் தஹீர், ரதீஷ் அம்பத் என மாற்றுப்பட / இடைநிலை இயக்குநர்களும் வெற்றி பெறுகிறார்கள். ஆரோக்கியமான சூழல் அங்கு திரும்பி விட்டது.
இங்கு இரண்டு விசயங்களைக் குறிப்பிட வேண்டும்.
1)   என்னதான் வித்தியாசமான அபாரமான படங்களைக் கொடுத்தாலும் மலையாள சினிமாவுக்கு என்று இன்னமும் திரைமொழி உருவாகி வரவில்லை. ராஜீவ் ரவி போன்றோரின் படங்கள் மட்டுமே விதிவிலக்கு. தொழில்நுட்ப ரீதியாக நாம் அவர்களை விட வெகுவாக மேலே இருக்கிறோம்.

2) குறைந்த பட்ஜெட் படங்களை எடுப்பது அவர்களுக்கு எப்போதுமே 
வலிமை. அவர்களால் பரீட்சார்த்த முயற்சிகளை எளிதில் செய்து பார்க்க இயல்கிறது.



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...