Skip to main content

Posts

Showing posts from October, 2020

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரஜினியின் தகிடுதித்தம்

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல. ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும். கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்...

ரஜினி எனும் டுரோஜன் குதிரை

ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை , கட்சியை நிச்சயம் துவங்குவேன் , ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார் . தேர்தலுக்குப் பின் துவங்குவேன் என்றும் சொல்லவில்லை . தன்னை ஒரு நிரந்தர “ எதிர்கால முதல்வர் ” வேட்பாளராக களத்தில் வைத்திருக்க அவர் விரும்புகிறார் அல்லது பாஜக விரும்புகிறது . அதற்கான ஒரு முன்னோட்டம் தான் இந்த மாய மான் அறிக்கை - அதிலுள்ள கருத்துக்கள் எனது , ஆனால் அது எனதல்ல என ஒரு விளக்கத்தை வேறு அண்மையில் கொடுத்திருக்கிறார் . அடுத்தடுத்த ஆண்டுகளில் தமது கூட்டணியில் அரசை அமைக்க முடியாவிடில் பாஜக அரசு ரஜினியை வைத்து ஒரு எதிர்காலக் கனவை தொடர்ந்து தக்க வைக்க விரும்பும் . இந்த தேர்தலுக்கு அடுத்த தேர்தலுக்கு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் இப்போது ரஜினியை வைத்தாடும் சதிராட்டத்தை மீண்டும் பாஜக ஆடும் . அல்லது ஒருவேளை அதிமுக , மூன்றாவது அணிகள் ஓரளவுக்கு இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாகத் தோன்றினால் ,...

குஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்

பாஜக மகளிரணியின் போராட்டத்துக்கு எடப்பாடி அரசு தடை விதித்தது , அடுத்து குஷ்புவை கைது செய்தது . இவையிரணையும் அதிமுக அதே பாஜகவின் அறிவுறுத்தலின் , தூண்டுதலின் பெயரிலே செய்கிற என்பது தான் ஒரு கிரிகாலன் மேஜிக் . ஏன் ? பீகாரின் நிதீஷ்குமாரை வைத்து ஆடும் அதே அரசியல் சதிராட்டத்தைத் தான் பாஜக இங்கும் எடப்பாடியை வைத்து ஆடுகிறது : பீகாரில் நிதீஷ்குமாருடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவர் தாம் எனும் பிம்பத்தையும் பாஜக தக்க வைக்கிறது . நிதீஷின் பிரதான எதிரிகளில் ஒருவரான சிராக் பாஸ்வானுடன் இத்தேர்தலில் தாம் ஒரு மறைமுகக் கூட்டணியில் உள்ளதாய் நுட்பமாய் உணர்த்துகிறது . இதன் மூலம் நிதீஷ்குமார் ஆட்சி மீது மக்களுக்கு உள்ள கோபம் , அதிருதியின் பலன்கள் தேஜஸ்வி யாதவுக்கு வாக்குகளாக மாறி விடக் கூடாது என திட்டமிடுகிறது . அதாவது ஆளும் கூட்டணியில் இருந்தாலும் அது தம் கூட்டணி அல்ல என உணர்த்துகிற பார்ப்பனிய தந்திரம் ஒரு பக்கம் , ஆளுங்கட்சி கூட்டணி மீதான அந்த அதிருப்தி வாக்குகளை மடைமாற்றி தம்முடன் எதிர்கால...

பாண்டே போன்ற சங்கிகளின் தகிடுதித்தங்கள்

ரங்கராஜ் பாண்டே ஒரு திறமையான பேட்டியாளர் , செய்தியாளர் , ஆனால் காட்சி ஊடகத்தில் இருந்து விலகிய பின் அவருடைய ஒரு முக்கிய குறை வெளிப்படுகிறது - அவருக்கு பதில் அளிக்கத் தெரியாது . அவர் சுயவிளக்கம் கொடுத்து எதைப் பற்றியாவது வாதிடுகிற நிலை ஏற்பட்டால் ஒரு அறிவுஜீவிப் பட்டத்தை சுமக்கு கோமாளியைப் போன்று பரிதாபமாகத் தோன்றுகிறார் . நேற்று மனுதர்மத்தை நியாயப்படுத்தி அவர் வெளியிட்ட யுடியூப் காணொலியைப் பார்த்த போது இந்த எண்ணம் உறுதிப்பட்டது . அப்படியே தமிழகத்தில் உள்ள விளக்கெண்ணெய் சங்கிகளின் கருத்துக்களை அங்கங்கே சில புத்தக மேற்கோள்களைக் காட்டி நிரூபிக்க முயன்று பரிதாபமாய் தோற்கிறார் : பாண்டேவின் கேள்வி : பழமைவாதம் , ஆணாதிக்கம் , பொதுவான நம்பிக்கைகள் அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கும் மனு தர்மத்திற்கும் என்ன சம்பந்தம் ? உலகம் முழுக்க இந்த பிரச்சனைகள் இல்லையா ? கிறித்துவத்தில் இல்லையா , இஸ்லாத்தில் இல்லையா ? ஆணாதிக்கம் என்ன இந்துக்கள் கண்டுபிடித்ததா அல்லது அது மனுதர்மத்தால் உருவாக்கப்பட்டதா ? நம் பதில் : அடப் பதரே , அத...