முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்




பாஜக மகளிரணியின் போராட்டத்துக்கு எடப்பாடி அரசு தடை விதித்தது, அடுத்து குஷ்புவை கைது செய்தது. இவையிரணையும் அதிமுக அதே பாஜகவின் அறிவுறுத்தலின், தூண்டுதலின் பெயரிலே செய்கிற என்பது தான் ஒரு கிரிகாலன் மேஜிக். ஏன்?


பீகாரின் நிதீஷ்குமாரை வைத்து ஆடும் அதே அரசியல் சதிராட்டத்தைத் தான் பாஜக இங்கும் எடப்பாடியை வைத்து ஆடுகிறது:


பீகாரில் நிதீஷ்குமாருடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவர் தாம் எனும் பிம்பத்தையும் பாஜக தக்க வைக்கிறது. நிதீஷின் பிரதான எதிரிகளில் ஒருவரான சிராக் பாஸ்வானுடன் இத்தேர்தலில் தாம் ஒரு மறைமுகக் கூட்டணியில் உள்ளதாய் நுட்பமாய் உணர்த்துகிறது. இதன் மூலம் நிதீஷ்குமார் ஆட்சி மீது மக்களுக்கு உள்ள கோபம், அதிருதியின் பலன்கள் தேஜஸ்வி யாதவுக்கு வாக்குகளாக மாறி விடக் கூடாது என திட்டமிடுகிறது. அதாவது ஆளும் கூட்டணியில் இருந்தாலும் அது தம் கூட்டணி அல்ல என உணர்த்துகிற பார்ப்பனிய தந்திரம் ஒரு பக்கம், ஆளுங்கட்சி கூட்டணி மீதான அந்த அதிருப்தி வாக்குகளை மடைமாற்றி தம்முடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கப் போகிற மூன்றாவது (பாஸ்வான்) அணிக்கு செல்ல வழிவகுக்கிற சூழ்ச்சி இன்னொரு பக்கம்


தமிழகத்திலும் அதே தோளில் இருந்தபடியே நண்பனைத் தின்னுகிற பார்ப்பனிய வியூகம் தான் பாஜகவுக்கு - வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி அரசு மீதான மக்களின் கோபம் மோசமாக பிரதிபலிக்கும் என பாஜகவினர் அறிவார்கள். ஆகையால் அக்கோபம் தம் மீது திரும்பக் கூடாது என ஒரு திட்டம் வகுக்கிறது. இதன்படி தாம் கூட்டணியில் இருந்தாலும் ஒரு அதிருப்தி தம் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையில் உள்ளதாக கடந்த சில மாதங்களில் தொடர்ந்து ஊடகங்களில் செய்திகளை வரவழைத்தார்கள். அற்பமான இந்த கிசுகிசுக்களை விவாதிப்பதற்காக நமது டிவி சேனல்கள் பிரைம் டைம் விவாத மேடைகளை ஒதுக்கினார்கள். அநேகமாய் தினமும் இந்த கற்பனையான முரணைப் பற்றி பேசிப் பேசி (இந்த வாதங்களின் போது அதிமுகவினர் பாஜவைனரை தழுவி முத்தமிட்டு கன்னத்தை எச்சிலாக்கும் ஆபாசங்களும் நடக்கும்) ஒருவழியாய் இரு கட்சிகளும் ஒரே மேடையில் தோள் மேல் தோள் சாய்ந்து நின்றாலும்இதயத்தில்தாம் வேறு வேறு எனும் சித்திரத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த நாடகத்தின் ஒரு காட்சி மட்டுமே குஷ்புவின் கைது.


திருமா மீது பாஜவினரின் சார்பாக அதிமுக அரசு அவசரப்பட்டு ஏன் வழக்குகளை பதிவு செய்தது என கேள்வி எழுந்ததும், அதிகம் பதறியது பாஜகவாகத் தான் இருக்கும். அதிமுகவுக்கு (எப்படியும் இழக்கப் போகிற) இத்தேர்தலில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பாஜகவுக்கு அப்படியல்ல. எப்படியாவது சற்று மேம்பட்ட தேர்தல் பலன்களை இம்முறை அடைய வேண்டும் என அக்கட்சி தவிக்கிறது. ஆகையால் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்துவதாக, அதை குஷ்பு தலைமை தாங்கும் போது கைது செய்யப்பட்டு ஒரு ஓட்டலில் சிறைவைக்கப்படுவதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. குஷ்பு ஏறிப் போன வாகனமே போலீஸ் வேன் என்பதைத் தவிர வேறெந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை. போராட்டத்தில் தலைமை தாங்கி தாங்கி விட்டு அப்படியே ஓட்டலுக்கு சென்று ஏஸி அறையில் உணவருந்தி ஓய்வெடுக்கப் போகிறார். ஆனால் அதிமுக அரசு திராவிட கட்சிகளின் சார்பில் இந்துக்களை ஒடுக்குகிறது என ஒரு பொய்ப்பிரச்சாரத்தை சங்கிகள் முன்னெடுக்க இது உதவும்.


இதற்குப் பதிலாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை கைது செய்திருக்கலாமே? அப்படி செய்தால், பாஜகவும் அதிமுகவும் நேரடியாய் மோதுவதாய் ஒரு சித்திரம் மக்களிடத்து ஏற்பட்டு விடும். அதையும் பாஜக விரும்பவில்லை. அது இரண்டு முகாம்களிலும் நண்பனாகவும் எதிரியாகவும் இருந்து சாதிக்க விரும்புகிறது. அதுதான் பார்ப்பனிய சாணக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...