முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்




பாஜக மகளிரணியின் போராட்டத்துக்கு எடப்பாடி அரசு தடை விதித்தது, அடுத்து குஷ்புவை கைது செய்தது. இவையிரணையும் அதிமுக அதே பாஜகவின் அறிவுறுத்தலின், தூண்டுதலின் பெயரிலே செய்கிற என்பது தான் ஒரு கிரிகாலன் மேஜிக். ஏன்?


பீகாரின் நிதீஷ்குமாரை வைத்து ஆடும் அதே அரசியல் சதிராட்டத்தைத் தான் பாஜக இங்கும் எடப்பாடியை வைத்து ஆடுகிறது:


பீகாரில் நிதீஷ்குமாருடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவர் தாம் எனும் பிம்பத்தையும் பாஜக தக்க வைக்கிறது. நிதீஷின் பிரதான எதிரிகளில் ஒருவரான சிராக் பாஸ்வானுடன் இத்தேர்தலில் தாம் ஒரு மறைமுகக் கூட்டணியில் உள்ளதாய் நுட்பமாய் உணர்த்துகிறது. இதன் மூலம் நிதீஷ்குமார் ஆட்சி மீது மக்களுக்கு உள்ள கோபம், அதிருதியின் பலன்கள் தேஜஸ்வி யாதவுக்கு வாக்குகளாக மாறி விடக் கூடாது என திட்டமிடுகிறது. அதாவது ஆளும் கூட்டணியில் இருந்தாலும் அது தம் கூட்டணி அல்ல என உணர்த்துகிற பார்ப்பனிய தந்திரம் ஒரு பக்கம், ஆளுங்கட்சி கூட்டணி மீதான அந்த அதிருப்தி வாக்குகளை மடைமாற்றி தம்முடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கப் போகிற மூன்றாவது (பாஸ்வான்) அணிக்கு செல்ல வழிவகுக்கிற சூழ்ச்சி இன்னொரு பக்கம்


தமிழகத்திலும் அதே தோளில் இருந்தபடியே நண்பனைத் தின்னுகிற பார்ப்பனிய வியூகம் தான் பாஜகவுக்கு - வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி அரசு மீதான மக்களின் கோபம் மோசமாக பிரதிபலிக்கும் என பாஜகவினர் அறிவார்கள். ஆகையால் அக்கோபம் தம் மீது திரும்பக் கூடாது என ஒரு திட்டம் வகுக்கிறது. இதன்படி தாம் கூட்டணியில் இருந்தாலும் ஒரு அதிருப்தி தம் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையில் உள்ளதாக கடந்த சில மாதங்களில் தொடர்ந்து ஊடகங்களில் செய்திகளை வரவழைத்தார்கள். அற்பமான இந்த கிசுகிசுக்களை விவாதிப்பதற்காக நமது டிவி சேனல்கள் பிரைம் டைம் விவாத மேடைகளை ஒதுக்கினார்கள். அநேகமாய் தினமும் இந்த கற்பனையான முரணைப் பற்றி பேசிப் பேசி (இந்த வாதங்களின் போது அதிமுகவினர் பாஜவைனரை தழுவி முத்தமிட்டு கன்னத்தை எச்சிலாக்கும் ஆபாசங்களும் நடக்கும்) ஒருவழியாய் இரு கட்சிகளும் ஒரே மேடையில் தோள் மேல் தோள் சாய்ந்து நின்றாலும்இதயத்தில்தாம் வேறு வேறு எனும் சித்திரத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த நாடகத்தின் ஒரு காட்சி மட்டுமே குஷ்புவின் கைது.


திருமா மீது பாஜவினரின் சார்பாக அதிமுக அரசு அவசரப்பட்டு ஏன் வழக்குகளை பதிவு செய்தது என கேள்வி எழுந்ததும், அதிகம் பதறியது பாஜகவாகத் தான் இருக்கும். அதிமுகவுக்கு (எப்படியும் இழக்கப் போகிற) இத்தேர்தலில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பாஜகவுக்கு அப்படியல்ல. எப்படியாவது சற்று மேம்பட்ட தேர்தல் பலன்களை இம்முறை அடைய வேண்டும் என அக்கட்சி தவிக்கிறது. ஆகையால் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்துவதாக, அதை குஷ்பு தலைமை தாங்கும் போது கைது செய்யப்பட்டு ஒரு ஓட்டலில் சிறைவைக்கப்படுவதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. குஷ்பு ஏறிப் போன வாகனமே போலீஸ் வேன் என்பதைத் தவிர வேறெந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை. போராட்டத்தில் தலைமை தாங்கி தாங்கி விட்டு அப்படியே ஓட்டலுக்கு சென்று ஏஸி அறையில் உணவருந்தி ஓய்வெடுக்கப் போகிறார். ஆனால் அதிமுக அரசு திராவிட கட்சிகளின் சார்பில் இந்துக்களை ஒடுக்குகிறது என ஒரு பொய்ப்பிரச்சாரத்தை சங்கிகள் முன்னெடுக்க இது உதவும்.


இதற்குப் பதிலாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை கைது செய்திருக்கலாமே? அப்படி செய்தால், பாஜகவும் அதிமுகவும் நேரடியாய் மோதுவதாய் ஒரு சித்திரம் மக்களிடத்து ஏற்பட்டு விடும். அதையும் பாஜக விரும்பவில்லை. அது இரண்டு முகாம்களிலும் நண்பனாகவும் எதிரியாகவும் இருந்து சாதிக்க விரும்புகிறது. அதுதான் பார்ப்பனிய சாணக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...