Skip to main content

Posts

Showing posts from December, 2023

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

விஜயகாந்த்

எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் கம்பீரமான அழகான ஆண்மை மிக்க நாயகர்கள் தோன்றினார்கள். சரத்குமார், நெப்போலியன், விஜய்காந்த் போல. எனக்கு இவர்களில் விஜயகாந்தே குழந்தைப்பருவத்தில் மிகவும் பிடித்தமானவராக இருந்தார். அவரது ஆக்‌ஷன் படங்களின் ரசிகனாக இருந்தேன், அவர் சண்டையிடும் போது நானும் இருந்த இடத்திலே சண்டையிடுவேன். அவரது எகத்தாளம், எடுத்தெறிந்து பேசும் பாணி, குரல், அந்த பழுத்த குண்டுக் கண்கள், அழுந்த வாராத முள்ளம்பன்றி முடி, குண்டுக் கன்னங்கள், அழகான கறுப்பு, இப்படித்தான் நடப்பேன் என்பதைப் போன்ற நடை. குறிப்பாக, எடுத்ததுமே எதிரியில் முகத்தில் குத்தும், திரும்பி நின்று எத்தும் (புரூஸ் லீயை மோசமாக காப்பியடித்து ஒரு கட்டத்தில் தன்னுடையதாக மாற்றிக்கொண்ட) பாணி; அடிக்கும் போது அவரது உடம்பின் கனம் எதிரியை வந்து கும்மென வீழ்த்துவதாகத் தோன்றும். ஏனோ எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அந்த காலத்தில் அளித்தது. வளர்ந்த பின்னர் குறிப்பாக பதின்பருவத்தில் எனக்கு விஜயகாந்தைப் பிடிக்காமல் போய்விட்டது. நான் கல்லூரியில் படிக்கையில் நண்பர்கள் குழு என்னை வற்புறுத்தி ஒரு படத்துக்கு அழைத்துப் போனார்கள். “வானத...

ராபின் மின்ஸும் சமீர் ரிஸ்வியும்

ஐ.பி.எல் ஏலம் வந்த பிறகு வறிய எளிய சூழலில் இருந்து வரும் இளம் வீரர்களின் நிலை ஒரே நாளில் வானுக்கு ஏவப்பட்ட ஏவுகணையைப் போல் ஆகிறது. இம்முறை ஏலத்தில் எந்த வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு அதிகம் என கிரிக் இன்போ தளத்தில் ஒரு கட்டுரையில் பட்டியலொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த வீரர்களின் ஆட்டத்தையும் வேறு விபரங்களையும் தேடிப் பார்த்தேன். ஒரு சில ஆல்ரவுண்டர்கள் எடுக்கப்படவில்லை, ஆனால் இரண்டு கீப்பர் மட்டையாளர்கள் எடுக்கப்பட்டார்கள். ஒருவர் ராபின் மின்ஸ் (குஜராத் லயன்ஸ்). மற்றொருவர் சமீர் ரிஸ்வி (சென்னை சூப்பர் கிங்ஸ்). எனக்கு இருவரில் ரிஸ்வியே மேலான மட்டையாளர் எனத் தோன்றுகிறது. அவரது ஆட்டத்தில் ஒரு முழுமை உள்ளது. ஆக்ரோஷமானவர். எல்லா திசைகளிலும் அடிக்கக் கூடியவர். கீப்பிங்கும் நன்றாக உள்ளது. அதனால் எட்டரை கோடி சரியான தொகை தான். நம்மூர் பட்லர் (இங்கிலாந்து அணி) போல இருப்பார். அதுவும் சுழலை நன்றாக அடிப்பவர் என்பதால் சென்னை ஆடுதளங்களுக்கு ஏற்றவர். அடுத்து ராபின் மின்ஸ். இவர் ஐ.பி.எல்லில் எடுக்கப்படும் முதல் பழங்குடி வீரர் எனும் அளவில் பரவலான கவனத்தை ஊடகங்களில் பெற்றார். எனக்கு இவரது ஆட்டம் கிறிஸ்...

எழுத்து எனும் சண்டைக் கலை

நேற்றைய அபுனைவு வகுப்பே இறுதியானது. அதில் எப்படி மூன்றே படிகளில் ஒரு வலுவான வாதத்தை, கட்டுரையின் கட்டுமானத்தை உருவாக்கலாம் என்று சசியிடம் செய்து காட்டினேன். அவரையே சொல்ல வைத்து ஐந்து நிமிடங்களில் அது ஒரு முழுமையான கட்டுரையாவது நிகழ்த்தியே பார்த்தோம். அப்போது அவர் சொன்னார், "நாம் வாசகர்களை செட்டிங் பண்றோம்" என்று. ஆம், முழுக்க உண்மையே. வாசகர்கள் வேறு எங்கும் நழுவி விடாமல் நாம் வரைந்த கோட்டுக்குள் நிறுத்தி பூட்டுவதே கட்டுரை எழுத்தின் அடிப்படை. அவர்கள் எங்கெல்லாம் பழுதுகளைக் கண்டுபிடிப்பார்கள் என உணர்ந்து அதற்கான இடைவெளிகளையும் தர்க்கம் வழியாக மூடி விட வேண்டும். அவ்விதத்தில் இது குத்துச்சண்டை, சிலம்பம், களரியைப் போன்றது. கட்டுரைக்குள் நாமும் எதிராளியும் எப்போதுமே இருக்கிறோம். அவர் அசையும் முன்பே நாம் அசைவதாலே, அவரை நம் அடவுகளால் கட்டுப்படுத்துவதாலே நாம் எழுத்தாளர். கட்டுரையில் ஒரு கட்டத்தில் எதிர்பாராத ஒரு எதிர்பாரா கோணத்திற்கு நம் விவாதங்கள் பயணிக்கும். இதை நான் திட்டமிடவே இல்லையே என வியப்போம். அது அந்த எதிராளி முழுக்க மறைந்து நாம் அவரது கோணத்தில் சிந்தித்து அதற்கு ஏற்ப சிந்தனை...

தேவிபாரதிக்கு வாழ்த்துகள்

 தன் "நீர்வழிப் படூஉம்" நாவலுக்காக இவ்வாண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதைப் பெறும் தேவிபாரதிக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!

விருதுக்காக வேலை செய்வது நம் வேலையா?

  அ . ராமசாமி சாகித்ய அகாடெமி விருதைப் பெறுவதற்கு எழுத்தாளர்களோ அவர்களுடைய நண்பர்களோ பின்பற்ற வேண்டிய நடைமுறை நுணுக்கங்கள் , வித்தைகள் , முயற்சிகள் பற்றியெல்லாம் ( புத்தகப் பரிந்துரை அனுப்புவது , வாதிடத் தெரிந்த நண்பர்கள் வழியாக நூல்களை இறுதிப்பட்டியலில் இருந்து விருதுக்கு நகர்த்துவது ) பேஸ்புக்கில் எழுதியிருந்தார் . இது ஓரளவுக்கு பெரிய விருதுகளுக்கு எல்லாம் பொருந்தும் என நினைக்கிறேன் . குழுக்களால் அல்லது தனிநபரால் தேர்வு செய்யப்படும் விருதுகளே விதிவிலக்கு ( விஷ்ணுபுரம் விருது ). அ . ராமசாமி   ஒரு வேடிக்கைக்காத தான் சொல்கிறார் என்றாலும் அவர்  சொல்வதைப் போல விருது பெறுவதற்கான அடிப்படைகளை சொல்லித் தரும் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதை நான்   மறுக்கவில்லை . அதே நேரம் இன்னொரு சிக்கலும் உளது . எல்லாரிடமும் இந்த இலக்கிய சமூகமாக்கல் , மனிதவள மேலாண்மை ஆகிய இயல்புகள் இருப்பதில்லை , அவர்கள் இத்திறன்களை வளர்த்து சுலபத்தில் ஜொலிக்க இயலாது .  சாகித்ய அகாடெமி பிரதான விருதைப் ...