முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராபின் மின்ஸும் சமீர் ரிஸ்வியும்




ஐ.பி.எல் ஏலம் வந்த பிறகு வறிய எளிய சூழலில் இருந்து வரும் இளம் வீரர்களின் நிலை ஒரே நாளில் வானுக்கு ஏவப்பட்ட ஏவுகணையைப் போல் ஆகிறது. இம்முறை ஏலத்தில் எந்த வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு அதிகம் என கிரிக் இன்போ தளத்தில் ஒரு கட்டுரையில் பட்டியலொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த வீரர்களின் ஆட்டத்தையும் வேறு விபரங்களையும் தேடிப் பார்த்தேன். ஒரு சில ஆல்ரவுண்டர்கள் எடுக்கப்படவில்லை, ஆனால் இரண்டு கீப்பர் மட்டையாளர்கள் எடுக்கப்பட்டார்கள். ஒருவர் ராபின் மின்ஸ் (குஜராத் லயன்ஸ்). மற்றொருவர் சமீர் ரிஸ்வி (சென்னை சூப்பர் கிங்ஸ்).
எனக்கு இருவரில் ரிஸ்வியே மேலான மட்டையாளர் எனத் தோன்றுகிறது. அவரது ஆட்டத்தில் ஒரு முழுமை உள்ளது. ஆக்ரோஷமானவர். எல்லா திசைகளிலும் அடிக்கக் கூடியவர். கீப்பிங்கும் நன்றாக உள்ளது. அதனால் எட்டரை கோடி சரியான தொகை தான். நம்மூர் பட்லர் (இங்கிலாந்து அணி) போல இருப்பார். அதுவும் சுழலை நன்றாக அடிப்பவர் என்பதால் சென்னை ஆடுதளங்களுக்கு ஏற்றவர்.
அடுத்து ராபின் மின்ஸ். இவர் ஐ.பி.எல்லில் எடுக்கப்படும் முதல் பழங்குடி வீரர் எனும் அளவில் பரவலான கவனத்தை ஊடகங்களில் பெற்றார். எனக்கு இவரது ஆட்டம் கிறிஸ் கெயிலை அல்ல, வினோத் காம்பிளியையே நினைவுபடுத்தியது. அடுத்து ஹெட்மெயிரையும் நினைவுபடுத்தினார். மரண அடி. எந்த பந்து முழுநீளத்தில் விழுந்தாலும் மிட் விக்கெட், லாங் ஆன் பகுதிகளில் கொலைவெறியில் அடிக்கிறார். பட்டாலே சிக்ஸர் தான். செமையான தோள் பலம். இடுப்பில் இருந்து கைகளுக்கு ஆற்றல் செல்லும்படியான ஸ்விங்கும், உடல் அசைவுகளும். ஆனால் இவருக்கு முக்கியமான பலவீனம் உண்டு - எக்ஸ்டிரா கவருக்கு மேல் பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அடிப்பதைத் தவிர ஆப் சைடில் ஷாட்கள் அதிகமாக இல்லை. பந்து கொஞ்சம் வெளியே திரும்பினாலோ மெதுவான ஆடுதளங்களில் நின்று வந்தாலோ பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து வைடாக வெளியே மெதுப்பந்தைகளை சுற்றி விட்டாலோ சிக்கிக் கொள்வார். மிட் விக்கெட், லாங் ஆபில் கேட்ச்கள் கொடுப்பார். இதனால் தான் ஏலத்தில் ஒரு அளவுக்கு மேல் பணம் கொடுத்து இவரை எடுக்க சென்னை அணி நிர்வாகம் தலைப்படவில்லை.
ஒருவேளை நேராக அடிக்கவும், ஆப் பக்கத்தில் டிரைவ், கட் செய்யவும் திறன்களை வளர்த்துக் கொண்டு கொஞ்சம் பொறுமையாக நின்று ஆட முயன்றால் இரண்டே ஆண்டுகளில் இந்திய டி20 அணியில் இடம்பெறுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...