முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விருதுக்காக வேலை செய்வது நம் வேலையா?

 . ராமசாமி சாகித்ய அகாடெமி விருதைப் பெறுவதற்கு எழுத்தாளர்களோ அவர்களுடைய நண்பர்களோ பின்பற்ற வேண்டிய நடைமுறை நுணுக்கங்கள், வித்தைகள், முயற்சிகள் பற்றியெல்லாம் (புத்தகப் பரிந்துரை அனுப்புவது, வாதிடத் தெரிந்த நண்பர்கள் வழியாக நூல்களை இறுதிப்பட்டியலில் இருந்து விருதுக்கு நகர்த்துவது) பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இது ஓரளவுக்கு பெரிய விருதுகளுக்கு எல்லாம் பொருந்தும் என நினைக்கிறேன். குழுக்களால் அல்லது தனிநபரால் தேர்வு செய்யப்படும் விருதுகளே விதிவிலக்கு (விஷ்ணுபுரம் விருது). . ராமசாமி ஒரு வேடிக்கைக்காத தான் சொல்கிறார் என்றாலும் அவர் சொல்வதைப் போல விருது பெறுவதற்கான அடிப்படைகளை சொல்லித் தரும் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரம் இன்னொரு சிக்கலும் உளது. எல்லாரிடமும் இந்த இலக்கிய சமூகமாக்கல், மனிதவள மேலாண்மை ஆகிய இயல்புகள் இருப்பதில்லை, அவர்கள் இத்திறன்களை வளர்த்து சுலபத்தில் ஜொலிக்க இயலாது


சாகித்ய அகாடெமி பிரதான விருதைப் பற்றித் தெரியவில்லை, ஆனால் யுவ புரஸ்காரைப் பொறுத்த வரையில் விருதாளர்கள் சிலருக்கு அப்படி ஒரு விருது எப்படி முடிவு செய்யப்படுகிறது, பெரும்பட்டியல், குறும்பட்டியல் என ஒன்றுமே தெரியாது என்பதை அவர்களுடன் பேசும்போது உணர்ந்திருக்கிறேன். தம்மை அதற்குத் தகுதியானவர்கள் எனக் கருதி முயன்றவர்களும் அல்லர் அவர்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னுடைய நூலை ஒரு பிரதியைப் பெற்று விபரப்பட்டியலுடன் தில்லிக்கு அனுப்பும்படி போன் அழைப்பு வந்த போது தான் தெரியவே வந்தது என் பெயர் இறுதிப்பட்டியலுக்குப் போயிருக்கிறது என. யார் எப்படி அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. பின்னர் விருது முடிவான செய்தி கசிந்து வந்தது. என்னிடம் அமைதியாக இருக்கும்படி ஒரு எழுத்தாளர் நண்பர் சொன்னார். நான் அவ்வாறே இருந்தேன். கடைசி வரை எனக்கு என்ன நடக்கிறதென்பதே புரியவில்லை. அறிவிப்பு வந்த பின் கோலாகாலம் தான். இதற்கு இடையே ஒரு நண்பர் என்னை போனில் அழைத்து எனக்காக விருதுக்குழுவில் இருந்த மூத்த படைப்பாளி ஒருவர் சண்டை போட்டதாலே எனக்கு கிடைத்தது என்று அந்த எழுத்தாளரிடம் பேச சொன்னார். அப்படி அழைத்து நன்றி தெரிவிப்பது தவறாக இருக்குமென, அதை அவரே அவமானமாக நினைப்பார் என எண்ணி நான் அப்போது அதைச் செய்யவில்லை. இப்போதெனில் செய்திருப்பேன். அந்நண்பர் இன்னொரு செய்தியும் சொன்னார் - பின்னர் வெற்றி இயக்குநராகி விட்ட ஒரு படைப்பாளியின் பெயரைக் குறிப்பிட்டுஅவருக்கும் உனக்கும் தான் போட்டி, அவருக்காக இன்னொரு பெயர் பெற்ற இயக்குநர் மற்றொரு பெயர் பெற்ற மூத்த எழுத்தாளரிடம் பரிந்துரைத்து வேண்டிக் கேட்டதால் கடுமையாக கருத்து மோதல் இருந்தது, கடைசியில் உன் தரப்பே வென்றதுஎன்றார். அந்த இருவருமே எனக்கு நண்பர்கள் தாம். என்று கேட்டுவிட்டு அதை விட்டுவிட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும் - விருது கிடைக்காவிடினும் எனக்கு நஷ்டமில்லை, என் இடத்தை விருது தீர்மானிப்பதில்லை, விருதினால் என்வாசகர் படைஅதிகரிக்கப்போவதில்லை என்று. விருது என்பது ஊரில் சாமிக்கு பாயசம் படைதோ கோழியை பலிகொடுத்தோ படையல் போடுவதைப் போல. படையல் கிடைத்தாலும் இல்லாவிடினும் சாமி சாமி தான்.


என் இலக்கிய நண்பர் ஒருவர் எனக்கு விருது கிடைத்த சில மாதங்களில் நேரடி உரையாடலில் சொன்னார்: “உனக்கு எப்படியோ தெரியாம கொடுத்திட்டாங்க, இனிமே கொடுக்க மாட்டாங்க.” அவர் சொன்னது உண்மையே. நான் முன்பு டமால் டுமீல் என கருத்துக்களை ஏவியபடி இருப்பேன். இப்போது கருத்துக்கள் மீதான என் பிடிப்பு குறைந்துவிட்டது என்றாலும் நான் இப்போதும் கருத்தில்லாதவன் ஆகவில்லை. அகாடெமியின் யுவ புரஸ்காருக்குப் பிறகு பாஷா பரிஷத் கிடைத்தது. ஆனால் அதைக் கடந்து எனக்கு ஒரு விருது கூட கிடைத்ததில்லை. விகடன், உயிர்மை விருதுகள் கூட. என் கூட எழுத வந்தோர் 40-50 விருதுகளாவது - தெருவிளக்கு ரங்கசாமி விருது உள்ளிட்டு - வாங்கிவிட்டனர். எனக்கு இதெல்லாம் கிடைக்காது எனும் யோகநிலையை எட்டிவிட்டேன். சிலருக்கு சில விசயங்கள் வராது. அவர்கள் அப்படி இருந்து விடுவதே நலம்.


இன்னொரு விசயம் - விருதை இலக்காகி எழுதலாமா? கூடாது. விருதை இலக்காகி எழுதாமல் அதற்காக சமூகமாக்கல், அரசியல், முன்னெடுப்பு எல்லாம் செய்ய முடியுமா? முடியாது. செயற்கைத்தனம் வந்துவிடும், பயம் வந்து விடும். மகிழ்ச்சி போய்விடும். நாம் எதற்காக எழுத வந்தோம், விருதுக்காகவா? இல்லை. எழுத்து தரும் மகிழ்ச்சிக்காக, அடையாளத்துக்காக, இடத்துக்காக, உரையாடும் வாய்ப்புக்காக, நம் பண்பாட்டிற்காக, மொழிக்காக. எனில் கடைசி வரை நாம் இவற்றுக்காக மட்டுமே எழுத வேண்டும். அல்லாவிடில் நம் எழுத்து பத்தாயிரம் ரூபாய் ரெட்மி போன் போல ஆகிவிடும், நம் அக விளக்கு அணைந்துவிடும். நம் பாட்டுக்கு எழுதியபடி இருக்க இருட்டான வழியில் தெய்வமோ பேயோ குறுக்கிட்டு விருதைக் கொடுக்க நாம் அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு எழுத்தாணியை கூர்தீட்ட வேண்டும். நாமாகத் தேடிப் போனால் நாம் எழுத்தாளர்கள் அல்லர்.


தனது மற்றொரு பதிவில் . ராமசாமி ஏன் திறனாய்வாளர்கள், விமர்சகர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது தரப்படுவதில்லை எனக் கேட்டிருந்தார். இது முழுக்க நியாயமான கேள்வியே. நான் இதற்கு முன்பும் இதை வலியுறுத்தி இருக்கிறேன். விமர்சகர்களை நாம் ஊக்கப்படுத்தாவிடில் நமது இலக்கியம் கர்ணனின் கைப்பட்டு அறுந்த துரியோதனின் மனைவி பானுமதியின் மேகலையின் மணிகளைப் போல பொலபொலவென உதிர்ந்துவிடும். எடுக்கவும் கோக்கவும் ஆளிருக்க மாட்டார்கள்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...