Skip to main content

விருதுக்காக வேலை செய்வது நம் வேலையா?

 . ராமசாமி சாகித்ய அகாடெமி விருதைப் பெறுவதற்கு எழுத்தாளர்களோ அவர்களுடைய நண்பர்களோ பின்பற்ற வேண்டிய நடைமுறை நுணுக்கங்கள், வித்தைகள், முயற்சிகள் பற்றியெல்லாம் (புத்தகப் பரிந்துரை அனுப்புவது, வாதிடத் தெரிந்த நண்பர்கள் வழியாக நூல்களை இறுதிப்பட்டியலில் இருந்து விருதுக்கு நகர்த்துவது) பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இது ஓரளவுக்கு பெரிய விருதுகளுக்கு எல்லாம் பொருந்தும் என நினைக்கிறேன். குழுக்களால் அல்லது தனிநபரால் தேர்வு செய்யப்படும் விருதுகளே விதிவிலக்கு (விஷ்ணுபுரம் விருது). . ராமசாமி ஒரு வேடிக்கைக்காத தான் சொல்கிறார் என்றாலும் அவர் சொல்வதைப் போல விருது பெறுவதற்கான அடிப்படைகளை சொல்லித் தரும் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரம் இன்னொரு சிக்கலும் உளது. எல்லாரிடமும் இந்த இலக்கிய சமூகமாக்கல், மனிதவள மேலாண்மை ஆகிய இயல்புகள் இருப்பதில்லை, அவர்கள் இத்திறன்களை வளர்த்து சுலபத்தில் ஜொலிக்க இயலாது


சாகித்ய அகாடெமி பிரதான விருதைப் பற்றித் தெரியவில்லை, ஆனால் யுவ புரஸ்காரைப் பொறுத்த வரையில் விருதாளர்கள் சிலருக்கு அப்படி ஒரு விருது எப்படி முடிவு செய்யப்படுகிறது, பெரும்பட்டியல், குறும்பட்டியல் என ஒன்றுமே தெரியாது என்பதை அவர்களுடன் பேசும்போது உணர்ந்திருக்கிறேன். தம்மை அதற்குத் தகுதியானவர்கள் எனக் கருதி முயன்றவர்களும் அல்லர் அவர்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னுடைய நூலை ஒரு பிரதியைப் பெற்று விபரப்பட்டியலுடன் தில்லிக்கு அனுப்பும்படி போன் அழைப்பு வந்த போது தான் தெரியவே வந்தது என் பெயர் இறுதிப்பட்டியலுக்குப் போயிருக்கிறது என. யார் எப்படி அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. பின்னர் விருது முடிவான செய்தி கசிந்து வந்தது. என்னிடம் அமைதியாக இருக்கும்படி ஒரு எழுத்தாளர் நண்பர் சொன்னார். நான் அவ்வாறே இருந்தேன். கடைசி வரை எனக்கு என்ன நடக்கிறதென்பதே புரியவில்லை. அறிவிப்பு வந்த பின் கோலாகாலம் தான். இதற்கு இடையே ஒரு நண்பர் என்னை போனில் அழைத்து எனக்காக விருதுக்குழுவில் இருந்த மூத்த படைப்பாளி ஒருவர் சண்டை போட்டதாலே எனக்கு கிடைத்தது என்று அந்த எழுத்தாளரிடம் பேச சொன்னார். அப்படி அழைத்து நன்றி தெரிவிப்பது தவறாக இருக்குமென, அதை அவரே அவமானமாக நினைப்பார் என எண்ணி நான் அப்போது அதைச் செய்யவில்லை. இப்போதெனில் செய்திருப்பேன். அந்நண்பர் இன்னொரு செய்தியும் சொன்னார் - பின்னர் வெற்றி இயக்குநராகி விட்ட ஒரு படைப்பாளியின் பெயரைக் குறிப்பிட்டுஅவருக்கும் உனக்கும் தான் போட்டி, அவருக்காக இன்னொரு பெயர் பெற்ற இயக்குநர் மற்றொரு பெயர் பெற்ற மூத்த எழுத்தாளரிடம் பரிந்துரைத்து வேண்டிக் கேட்டதால் கடுமையாக கருத்து மோதல் இருந்தது, கடைசியில் உன் தரப்பே வென்றதுஎன்றார். அந்த இருவருமே எனக்கு நண்பர்கள் தாம். என்று கேட்டுவிட்டு அதை விட்டுவிட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும் - விருது கிடைக்காவிடினும் எனக்கு நஷ்டமில்லை, என் இடத்தை விருது தீர்மானிப்பதில்லை, விருதினால் என்வாசகர் படைஅதிகரிக்கப்போவதில்லை என்று. விருது என்பது ஊரில் சாமிக்கு பாயசம் படைதோ கோழியை பலிகொடுத்தோ படையல் போடுவதைப் போல. படையல் கிடைத்தாலும் இல்லாவிடினும் சாமி சாமி தான்.


என் இலக்கிய நண்பர் ஒருவர் எனக்கு விருது கிடைத்த சில மாதங்களில் நேரடி உரையாடலில் சொன்னார்: “உனக்கு எப்படியோ தெரியாம கொடுத்திட்டாங்க, இனிமே கொடுக்க மாட்டாங்க.” அவர் சொன்னது உண்மையே. நான் முன்பு டமால் டுமீல் என கருத்துக்களை ஏவியபடி இருப்பேன். இப்போது கருத்துக்கள் மீதான என் பிடிப்பு குறைந்துவிட்டது என்றாலும் நான் இப்போதும் கருத்தில்லாதவன் ஆகவில்லை. அகாடெமியின் யுவ புரஸ்காருக்குப் பிறகு பாஷா பரிஷத் கிடைத்தது. ஆனால் அதைக் கடந்து எனக்கு ஒரு விருது கூட கிடைத்ததில்லை. விகடன், உயிர்மை விருதுகள் கூட. என் கூட எழுத வந்தோர் 40-50 விருதுகளாவது - தெருவிளக்கு ரங்கசாமி விருது உள்ளிட்டு - வாங்கிவிட்டனர். எனக்கு இதெல்லாம் கிடைக்காது எனும் யோகநிலையை எட்டிவிட்டேன். சிலருக்கு சில விசயங்கள் வராது. அவர்கள் அப்படி இருந்து விடுவதே நலம்.


இன்னொரு விசயம் - விருதை இலக்காகி எழுதலாமா? கூடாது. விருதை இலக்காகி எழுதாமல் அதற்காக சமூகமாக்கல், அரசியல், முன்னெடுப்பு எல்லாம் செய்ய முடியுமா? முடியாது. செயற்கைத்தனம் வந்துவிடும், பயம் வந்து விடும். மகிழ்ச்சி போய்விடும். நாம் எதற்காக எழுத வந்தோம், விருதுக்காகவா? இல்லை. எழுத்து தரும் மகிழ்ச்சிக்காக, அடையாளத்துக்காக, இடத்துக்காக, உரையாடும் வாய்ப்புக்காக, நம் பண்பாட்டிற்காக, மொழிக்காக. எனில் கடைசி வரை நாம் இவற்றுக்காக மட்டுமே எழுத வேண்டும். அல்லாவிடில் நம் எழுத்து பத்தாயிரம் ரூபாய் ரெட்மி போன் போல ஆகிவிடும், நம் அக விளக்கு அணைந்துவிடும். நம் பாட்டுக்கு எழுதியபடி இருக்க இருட்டான வழியில் தெய்வமோ பேயோ குறுக்கிட்டு விருதைக் கொடுக்க நாம் அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு எழுத்தாணியை கூர்தீட்ட வேண்டும். நாமாகத் தேடிப் போனால் நாம் எழுத்தாளர்கள் அல்லர்.


தனது மற்றொரு பதிவில் . ராமசாமி ஏன் திறனாய்வாளர்கள், விமர்சகர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது தரப்படுவதில்லை எனக் கேட்டிருந்தார். இது முழுக்க நியாயமான கேள்வியே. நான் இதற்கு முன்பும் இதை வலியுறுத்தி இருக்கிறேன். விமர்சகர்களை நாம் ஊக்கப்படுத்தாவிடில் நமது இலக்கியம் கர்ணனின் கைப்பட்டு அறுந்த துரியோதனின் மனைவி பானுமதியின் மேகலையின் மணிகளைப் போல பொலபொலவென உதிர்ந்துவிடும். எடுக்கவும் கோக்கவும் ஆளிருக்க மாட்டார்கள்.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...