Skip to main content

இஸ்லாமிய வெறுப்பு என ஒன்று ஏன் இல்லை?

என்னுடைய நண்பர் ஒருவர் பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பரசியலைப் பற்றி பேசும் போது “இவர்களுக்கு இஸ்லாமியர்களிடம் என்னதான் பிரச்சினை?” என உணர்ச்சிவசப்பட்டு கேட்பார். நான் சொல்வேன், “தேர்தல் பரப்புரையில் வெறுப்பரசியல் பேசும் மோடிக்கோ அதையே கொள்கையாக கொண்டுள்ள பாஜகவிடமோ முஸ்லீம் வெறுப்பு துளியும் இல்லை.” “ஏன் அப்படி சொல்கிறாய்?”

நான் விளக்கினேன்.
பாஜகவினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் இஸ்லாமியருடன் கூட்டு சேர்வது, அவர்களுக்கு பல உதவிகளை அளிப்பதை பார்த்திருக்கிறேன். பாஜக கட்சி அரசியலிலும் இஸ்லாமியர் இருக்கிறார்கள். இது அதர்க்கமானது அல்லவா? இதை சந்தர்ப்பவாதம் என்றும் பார்க்க முடியாது. இஸ்லாமிய வாக்குகள் இன்றி ஜெயிக்க முடியும் எனும் போது, இஸ்லாமியரே பாஜகவுக்கு தேவையில்லை எனும் போது என்ன சந்தர்ப்பவாதம்? பல இடங்களில் பாஜக இந்துக்களையே ‘மற்றமையாக’ வைத்துள்ளது. கவனித்துப் பாருங்கள் மோடி அதிகமாக விமர்சித்து தூற்றியுள்ளது இந்துக்களையே. மோடியின் கணிசமான எதிரிகள் இந்துக்களே. அவர்களை கடுமையாக பழித்து சிறையிலும் தள்ளி உள்ளார். இஸ்லாமியர் அரிதாகத் தான் மோடியை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். இது அவர்கள் சிறுபான்மை என்பதால் அல்ல, பாஜகவின் செயல்திட்டம் எல்லா மதத்தினரையும் மாற்றுவதே. மாறத் தலைப்படாதவர்களை மோடியும் அவரது பக்தர்களும் வெறுக்கிறார்கள்.
இந்துக்கள் அனைவரும் தம்மவர், இஸ்லாமியர் மற்றமை என பாஜக எங்கும் கூறியதில்லை. அவர்கள் இந்துக்களையும் இஸ்லாமியரையும் பார்க்கும் விதமே வித்தியாசமானது - கடவுளை நம்பும், மதத்தை பின்பற்றும் ஒரு இந்து முதலில் தன் மதமாக பாஜகவை, தன் கொள்கையாக இந்துத்துவாவை பார்க்க வேண்டும். அடுத்து அவர் தன் தேசத்தை பாஜக சித்தரித்துக்கும் தேசமாக பார்க்க வேண்டும். இத்தேசத்தை கடவுளாகப் பார்க்க வேண்டும். அடுத்து, அவர் மோடியை தேசமாக பார்க்க வேண்டும். கடைசியில் மோடியை தெய்வமாக பார்க்க வேண்டும். கடவுளுக்காக ஊர்வலம் போவது, வழிபாடு நடத்துவது, சடங்குகள் செய்வது, விரதம் அனுஷ்டிப்பது, படையல் செய்வது எல்லாவற்றையும் பிரம்மாண்டமான அளவில் மோடிக்காக செய்ய வேண்டும். எங்கு போனாலும் எதிலும் தெய்வத்தை காண்பதைப் போல மோடியைக் காண வேண்டும். பக்தியில் உள்ள முழுமையான சராணகதியை மோடி மீதான பற்றிலும் காட்ட வேண்டும். அதாவது உணரத் தேவையில்லை, இதையெல்லாம் காட்டினால் போதும். அதாவது, இந்து மதத்தில் அந்தரங்கமாகவே பக்தி வெளிப்படும். கோயிலுக்குப் போவது கட்டாயம் அல்ல. ஆனால் கிறித்துவத்திலும் இஸ்லாத்திலும் அது நிறுவனப்படுத்தப்பட்டு வெளிமுகமாக்கப்படும். மோடி இந்து மதத்தை கிறித்துவம், இஸ்லாம் போன்று மாற்றவும் விரும்புகிறார். அவர் நம்மைப் பார்த்து என் மீது பக்தி கொள்ளுங்கள் எனக் கேட்க மாட்டார், உங்கள் பக்தியை அனுதினமும் பட்டவர்த்தமாக காட்டுங்கள் என்பார். இதைக் கேட்க அப்படியே கிறித்துவப் பிரச்சாரம் போன்றே இல்லை?
யாக்கோபு 2 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்
“ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.”
இஸ்லாமியருக்கு என்ன பிரச்சினை என்றால் அவர்களால் மோடியை ‘அல்லாவாக’ கருத முடியாது. (கிறித்துவர்களாலும் தான் முடியாது.) அதை அவர்களுடைய மார்க்கம் ஏற்காது. இந்து மதம் அந்தளவுக்கு கராறானது இல்லையென்பதால் ஓரளவுக்கு இந்துக்களால் அவ்வாறு ஏற்க முடிகிறது.
இஸ்லாமியர் தினமும் மோடியின் பெயரால் வழிபட்டு பாங்கு விளித்து
“மோடி, அவன் ஏகன்.
மோடி (எவரிடத்தும்) தேவையற்றவன்.
மோடி (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், மோடிக்கு நிகராக எவரும் இல்லை.” என்று தினமும் சத்தமாக சொன்னால் போதும் மோடி பக்தர்கள், பாஜகவினர், மோடி இஸ்லாமியரை அணைத்து முத்தமிடுவார்கள். இஸ்லாமிய வெறுப்பு பேச்சே அதற்கு மேல் இராது. எல்லா இந்துக்களும், கிறித்துவர்களும் இதை செய்தால் இந்துத்துவாவின் செயல்திட்டம் நிறைவேறி விடும்.
உள்ளுக்குள் மோடியும் அவரைப் போன்ற இந்துத்துவர்களும் கடவுளை ஏற்காதவர்கள். மோடி கோயிலுக்குப் போவது எல்லாம் வெறும் நாடகமே. எந்த பிரச்சினை வந்தாலும் இவர்கள் கடவுளை அழைக்கவோ சரணடையவோ மாட்டார்கள். இவர்களுடைய பேட்டிகளை கவனியுங்கள், இவர்களுடன் நேரில் உரையாடிப் பாருங்கள். எளிய பக்தியே இவர்களிடம் இராது. என் தேவையை என்னால் மட்டுமே முயன்று அடைய முடியும், என்னைக் கடந்த ஒரு சக்தியால் தர முடியாது என நம்புகிறார்கள். இவர்கள் கடவுளை தேசமாகவும், தேசத் தலைவரை கடவுளாகவும் காண விரும்புகிறார்கள். பக்தி வேறு, நம்பிக்கை வேறு. தமிழிலும் கணிசமான இந்துத்துவர்களுக்கு பக்தி இல்லை, ஆனால் தீவிர மத நம்பிக்கை உள்ளது.
ஹிட்லரும் இப்படித்தான் - அவர் தீவிரமான நாத்திகவாதி. மெல்ல மெல்ல ஆட்சியைக் கைப்பற்றியதுடன் அவர் தன்னையே தேசத்தின் கடவுளாக மாற்றிக்கொண்டார். அந்த பக்தியை தன் மக்கள் வெளிப்படுத்தி பிரகடனப்படுத்த வேண்டும் என விரும்பினார்.
இஸ்லாமியரை ஒழிப்பதோ வெளியேற்றுவதோ மோடியின், ஆர்.எஸ்எஸ்ஸின் நோக்கமல்ல. அவர்களுடைய பிரச்சினை மக்களின் கடவுள் பக்தி தான். அவர்களுடைய இலக்கு இந்து மதத்தை இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் போல மாற்றி, அவற்றில் இருந்து அல்லாவையும் ஏசுவையும் எல்லா இந்துக் கடவுள்களையும் வெளியேற்றி மோடியை அங்கு வைப்பதுதான். உ.தா., நீங்கள் ஜக்கி எழுப்பிய ஆதியோகி சிலையில் ஜக்கியின் சாயலைப் பார்க்க முடியும். அடுத்த சில தேர்தல்களையும் பெரும்பான்மையுடன் மோடி வென்றுவிட்டால் ராமர் சிலையில் மோடியின் சாயல் வந்துவிடும்.
இந்துத்துவர்கள் தேசத்தை கடவுளாக ஏற்காதவர்களை வெறுக்கிறார்கள். மோடி தன்னைக் கடவுளாக ஏற்காதவர்களை வெறுக்கிறார். பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸுக்குள் மோடியை கடவுளாக பார்க்காதவர்கள் இரு தரப்புகளையும் வெறுக்கிறார்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...