Skip to main content

Posts

Showing posts from August, 2019

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது மட்டுமல்ல

இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது என்னை பெரிதாய் ஆச்சரியப்படுத்துவதில்லை . உங்களையும் தான் .  ஒவ்வொரு இதழ் தொடங்கப்படும் போதும் அதன் நிறுவனர் / ஆசிரியருக்கு ஒரு கணக்கு இருக்கும் , இலக்கு , தேவையின் பொருட்டான கணக்குகள் இருக்கும் . சிற்றிதழென்றால் அது குழுநடவடிக்கையின் நீட்சியாகவே இருக்க முடியும் . குழு நடவடிக்கையென்றால் அரசியல் நடவடிக்கை அல்ல , இலக்கிய ஆர்வம் கொண்டோர் சில கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து இதழ் ஒன்றை நடத்துவது , அதன் வழி நாம் நம்பும் வகையில் இலக்கிய தடமொன்றை அமைக்க முயல்வது . அந்த குழு உடையும் போதோ உறுப்பினர்கள் ஆர்வம் இழக்கும் போதோ இதழ் நின்று போகும் . நானே இரு சிறுபத்திரிகைகளை நண்பர்களுடன் இணைந்து சில மாதங்களில் இருந்து ஒன்றரை வருடம் வரை நடத்தி இருக்கிறேன் . இதைப் படிக்கும் உங்களில் சிலர் கூட செய்திருக்க கூடும் . நீங்கள் இணைய இதழாகவே நடத்தினால் கூட அன்றாட வாழ்க்கையின் கட்டாயங்களுக்கு மத்தியில் அதை செய்வது ஒரு கட்டத்தில் உங்களை சோர்ந்து போகவே செய்யும் . 

ஸ்ரீசாந்த் மீதான தடை விரைவில் நீங்கும்

ஸ்ரீசாந்தின் மீதான தடை விரைவில் முடிவுக்கு வருகிறது. அடுத்த வருடம் அவர் ரஞ்சி ஆடுவார் என தெரிகிறது. அவரது ரசிகனாக இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முகமது அமீரைப...

வி.பி சந்திரசேகருக்கு அஞ்சலி

முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர், இந்திய அணி தேர்வாளர், சமீபம் வரை நெற்றி முழுக்க பட்டையணிந்து சற்று சோர்வாக தமிழ் வர்ணனை வழங்கி வந்த வி.பி சந்திரசேகர் காலமானார் என ...

அவர் எழுதுவதெல்லாம் குப்பைங்க!

கே . என் செந்தில் மீது ஒரு புனைவெழுத்தாளனாக எனக்கு மதிப்பு உண்டு . ஆனால் , அதே நேரம் , ஒரு விமர்சகராக அவர் பிளாஸ்டிக் கூடையுடன் காய்கறிக்கடை முன்பு வெண்டைக்காய் பொறுக்கும் பெண்களைப் போல நடந்து கொள்கிறாரே என எனக்கு வருத்தமும் உண்டு . சமீபமாய் விகடன் தடம் பேட்டியில் அவர் சொல்லி இருந்த கருத்து எஸ் . ராவின் சமீபத்தைய புனைவுகள் நீர்த்துப் போனவை என்பது . குறிப்பாக “ நெடுங்குருதி ” நாவலைத் தவிர அவரது வேறு நாவல்கள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல என்று எவர் பின்னர் முகநூலில் கூறிய கருத்துக்களையும் இங்கு நினைவு கொள்கிறேன் .

இனி நாம் அனைவரும் தேசியவாதிகள்; இனி நாம் அனைவரும் சங்கிகள்

நம் கண்முன்னே நம் நண்பர்கள் , படித்த புத்திசாலிகள் , நேர்மையானவர்கள் , பண்பானவர்கள் இந்த தேசியவாத அலையில் அடித்துச் செல்லப்பட்டு ஒரே நாளில் மறைமுக பாஜக ஆதரவாளர்களாக மாறுவதைக் காண்பது ஒரு பெரிய கொடுமை . அதுவும் எனது கிறித்துவ நண்பர்கள் பலரும் அடுத்த தேர்தலில் பாஜகவுக்கே வாக்களிக்கப் போவதாக சொல்கிறார்கள் . “ பாஜகவின் வேறு கொள்கைகளை நான் ஏற்கவில்லை ; அவர்களின் பல முடிவுகளை மறுக்கிறேன் . ஆனால் காஷ்மீரின் சிறப்புத் தகுதி சட்டப்பிரிவை அவர்கள் நீக்கியதை ஆதரிக்கிறேன் . இதற்காகவே அவர்களுக்கு அடுத்த முறை ஓட்டளிப்பேன் .” என்றார் ஒரு நண்பர் . இது கூட பரவாயில்லை , சிறுபான்மையினரான அவர் காஷ்மீரிகள் இந்தியாவின் பணத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டு ராணுவத்துக்கு எதிராக கல்லெறிகிறார்கள் என ஒரு முழுமையான சங்கியாகவே மாறி பேசிய போது எனக்கு தலை சுற்றி விட்டது .

காஷ்மீரில் வளர்ச்சி எனும் கனவுக்கோட்டை

சிறப்புத் தகுதி ரத்துடன் காஷ்மீரில் தொழில்மயமாக்கம் , அதனாலான வளர்ச்சி , மிகப்பெரிய பொருளாதார எழுச்சி நிகழப் போகிறது என கோட்டை கட்டுபவர்களிடம் நாம் கேட்க வேண்டிய ஒரு அடிப்படையான கேள்வி அத்தகைய வளர்ச்சிப் போக்குகள் ஏன் இந்தியாவின் பிற மாநிலங்களில் மோடியின் ஆட்சியின் கீழ் நிகழவில்லை என்பது .

பேஸ்புக் எனும் சாத்தான் (2)

  மெய்நிகர் உலகம் நமக்கு தரும் நண்பர்களும் அவர்களின் குழாமில் நாம் அடையும் நல்ல அனுபவங்களும் வெறும் மாயையா ? அது மாயை என்பது ஒரு மிகையான ஒழுக்கவாத கூற்றல்லவா ? இன்று நமது கணிசமான நண்பர்கள் , காதலர்கள் ஏன் கணவர் / மனைவியர் கூட மெய்நிகர் உலகில் இருந்து வந்தவர்கள் அல்லவா ? மெய்நிகர் உலகில் இருந்து முழுக்க துண்டித்து விட்ட பிறகு நமது “ நிஜ ” உலகம் எவ்வளவு தட்டையாக , அலுப்பாக , “ டல்லாக ”, நிறமற்றதாக மாறுகிறது ? எவ்வளவு தொடர்புகளை நாம் இழக்க நேர்கிறது ? இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது ? 

பேஸ்புக் எனும் சாத்தான் (1)

பேஸ்புக்கை சாபம் விட்டு நான் ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன் . இதுவும் அப்பட்டியலும் சேருகிறது என்றாலும் என் சமீபத்தைய அனுபவங்கள் தந்த ஊக்கத்தில் கொஞ்சம் அதிக உணர்ச்சிவசத்தில் , கூடுதல் ஆத்மார்த்தமாய் , இம்முறை சாபமிடுகிறேன் . சமகாலத்தின் மிகப்பெரிய உளவியல் நோய் பேஸ்புக்கில் காட்டிக் கொள்வதே , அதனால் அல்லலுற்று பின்னர் டிக்டாக் போன்ற பெரிய கொடூரங்களில் தன்னை இழப்பதே . மேலும் கிட்டத்தட்ட தினமும் டி - ஆக்டிவேட் பண்ணி திரும்ப திரும்ப பேஸ்புக்கில் எட்டிப் பார்த்து இருக்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிப்பது மது / சிகரெட் போதையை விட பேஸ்புக் எவ்வளவு ஆபத்தானது எனக் காட்டுகிறது . பேஸ்புக் தான் நம் யுகத்தின் மிகப்பெரிய சாத்தான் .

370 சட்டப்பிரிவு நீக்கம் - என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்?

காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ஒரு நீண்ட வரலாறு கொண்டது . காஷ்மீர் இந்திய அரசமைப்பில் இணைய மறுத்து , தனி நாடாக பிரிந்து போக எண்ணி சுதந்திரம் கோரிய நாற்பதுகளின் முடிவு மற்றும் ஐம்பதுகளின் துவக்கத்தில் , ஐ . நா இப்பிரச்சனையை ஒரு மனித உரிமை மீறலாக கருதி நடவடிக்கை எடுக்குமோ என அச்சம் தோன்றிய நிலையில் ,  நமது மைய அரசு ஒரு சமரசமாக இந்த சட்டப்பிரிவை ஏற்றுக் கொண்டது . இதன் படி காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கவோ அரசு வேலை பெறவோ முடியாது ( பெண்களின் சொத்துரிமை மட்டுமே இந்த சட்டப்பிரிவில் பிற்போக்கானது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும் ). இது பிற மாநிலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என சிலர் எண்ணினாலும் , காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு நாம் அளித்த மதிப்பின் தூல வடிவமாக இது அமைந்தது . மக்களை பிடிவாதமாக ஒரு ஒற்றை தேசியத்தில் இணைக்கக் கூடாது எனும் நல்லதொரு ஜனநாயக விழுமியத்தை இது கொண்டிருந்தது .