முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காஷ்மீரில் வளர்ச்சி எனும் கனவுக்கோட்டை


சிறப்புத் தகுதி ரத்துடன் காஷ்மீரில் தொழில்மயமாக்கம், அதனாலான வளர்ச்சி, மிகப்பெரிய பொருளாதார எழுச்சி நிகழப் போகிறது என கோட்டை கட்டுபவர்களிடம் நாம் கேட்க வேண்டிய ஒரு அடிப்படையான கேள்வி அத்தகைய வளர்ச்சிப் போக்குகள் ஏன் இந்தியாவின் பிற மாநிலங்களில் மோடியின் ஆட்சியின் கீழ் நிகழவில்லை என்பது.

 கடந்த சில ஆண்டுகளில் நமது பொருளாதாரம் மிகப்பெரிய சரிவையே சந்தித்துள்ளது; விலைவாசி கடுமையாய் உயர்ந்துள்ளது; படித்த இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் தம் தகுதிக்கு குறைவான வேலைகளில் சேர்கிறார்கள்; மேலும் பலர் வேலை கிடைக்கவில்லை என்பதாலே முதுகலை படிப்பில் சேர்கிறார்கள். வணிகம், விவசாயம் ஆகிய துறைகளில் மக்கள் தற்கொலையின் விளிம்புக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். சி.சி.டி சித்தார்த்தாவின் அதிர்ச்சியூட்டிய தற்கொலையை சுலபத்தில் மறந்து விட்டுகாஷ்மீர் மட்டும் சிங்கப்பூர் ஆகி விடும் என நம்மால் எப்படி நம்ப முடியும்
இந்தியாவின் வேறு பகுதிகளில் நிகழ்த்தாத மந்திர விதையை மோடி காஷ்மீரில் மட்டும் நிகழ்த்தி விடுவாரா? காஷ்மீரில் இந்தியாவின் வணிக நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடியை முதலீடு பண்ணப் போகிறார்கள், என்று பண்ணுவார்கள் என்பதற்கான திட்டமோ புள்ளிவிபரமோ இந்த அரசாங்கத்திடம் உண்டா? இந்த வணிக காந்தங்கள் ஏன் சென்னைக்கோ பெங்களூருக்கோ செல்லாமல், எந்த அடிப்படை வசதிகளோ படித்த தகுதியான ஏகப்பட்ட இளைஞர் படையோ இல்லாத காஷ்மீருக்கு செல்ல வேண்டும்? அப்படியே மோடி காஷ்மீரில் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழித்து அதை மேம்படுத்த போகிறார் என்றால் அதை ஏன் பிற மாநிலங்களுக்கு அவர் இது வரை பண்ணவில்லை? இல்லை, அடுத்த தேர்தல் வரை வளர்ச்சி எனும் வடையை அவர் வாயிலே சுட்டுக் கொண்டிருப்பாரா? “காஷ்மீர் மக்களுக்கான பிரதிமந்திரி வேலை வளர்ச்சி திட்டம்என ஒன்றை பிரம்மாண்டமாக அறிவித்து விட்டு அப்படி நைசாக அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வேலை பார்க்க போய் விடுவாரா?

ஒரு அரசின் எதிர்கால செயல்பாட்டை நாம் அதன் இதுவரையிலானசாதனைகளைவைத்து தான் அனுமானிக்க முடியும். காஷ்மீரை இந்த அரசு இனி சொர்க்கபுரியாக்கும் என கூறுபவர்கள் இதுவரையில்அகண்ட பாரதத்துக்கானமோடி அரசின் பொருளாதார திட்டங்களின் / திட்டமின்மையின் படுதோல்வியை கவனிக்கவில்லை என்றே பொருள்.

முன்னாள் இந்திய தூதர் நிருபமா ராவ் (ஹார்வெர்ட்டில் எல்லாம் போய் படித்தவர்) போன்றவர்களே இப்படியான கற்பனைக் கோட்டையை கட்டுவதைப் பார்க்கும் போது (https://timesofindia.indiatimes.com/blogs/toi-edit-page/paradise-lost-or-regained-kashmir-must-be-drawn-away-from-the-precipice-with-humane-and-judicious-calibration/) இவர்கள் எல்லாம் இந்தியாவில் தான் வாழ்கிறார்களா இல்லை நீரோவின் உடன்பிறப்புகளா எனும் குழப்பம் ஏற்படுகிறது. இந்தியாவின் படித்த வர்க்கம் இன்னும் எத்தனைக் காலம் இப்படியான கற்பித பஞ்சுமெத்தைகளில் மல்லாக படுத்தபடி சபாஷ் என மோட்டுவளையை நோக்கி கைதட்டப் போகிறது? மொத்தமாய் தெருவுக்கு வந்த பிறகா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...