முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காஷ்மீரில் வளர்ச்சி எனும் கனவுக்கோட்டை


சிறப்புத் தகுதி ரத்துடன் காஷ்மீரில் தொழில்மயமாக்கம், அதனாலான வளர்ச்சி, மிகப்பெரிய பொருளாதார எழுச்சி நிகழப் போகிறது என கோட்டை கட்டுபவர்களிடம் நாம் கேட்க வேண்டிய ஒரு அடிப்படையான கேள்வி அத்தகைய வளர்ச்சிப் போக்குகள் ஏன் இந்தியாவின் பிற மாநிலங்களில் மோடியின் ஆட்சியின் கீழ் நிகழவில்லை என்பது.

 கடந்த சில ஆண்டுகளில் நமது பொருளாதாரம் மிகப்பெரிய சரிவையே சந்தித்துள்ளது; விலைவாசி கடுமையாய் உயர்ந்துள்ளது; படித்த இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் தம் தகுதிக்கு குறைவான வேலைகளில் சேர்கிறார்கள்; மேலும் பலர் வேலை கிடைக்கவில்லை என்பதாலே முதுகலை படிப்பில் சேர்கிறார்கள். வணிகம், விவசாயம் ஆகிய துறைகளில் மக்கள் தற்கொலையின் விளிம்புக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். சி.சி.டி சித்தார்த்தாவின் அதிர்ச்சியூட்டிய தற்கொலையை சுலபத்தில் மறந்து விட்டுகாஷ்மீர் மட்டும் சிங்கப்பூர் ஆகி விடும் என நம்மால் எப்படி நம்ப முடியும்
இந்தியாவின் வேறு பகுதிகளில் நிகழ்த்தாத மந்திர விதையை மோடி காஷ்மீரில் மட்டும் நிகழ்த்தி விடுவாரா? காஷ்மீரில் இந்தியாவின் வணிக நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடியை முதலீடு பண்ணப் போகிறார்கள், என்று பண்ணுவார்கள் என்பதற்கான திட்டமோ புள்ளிவிபரமோ இந்த அரசாங்கத்திடம் உண்டா? இந்த வணிக காந்தங்கள் ஏன் சென்னைக்கோ பெங்களூருக்கோ செல்லாமல், எந்த அடிப்படை வசதிகளோ படித்த தகுதியான ஏகப்பட்ட இளைஞர் படையோ இல்லாத காஷ்மீருக்கு செல்ல வேண்டும்? அப்படியே மோடி காஷ்மீரில் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழித்து அதை மேம்படுத்த போகிறார் என்றால் அதை ஏன் பிற மாநிலங்களுக்கு அவர் இது வரை பண்ணவில்லை? இல்லை, அடுத்த தேர்தல் வரை வளர்ச்சி எனும் வடையை அவர் வாயிலே சுட்டுக் கொண்டிருப்பாரா? “காஷ்மீர் மக்களுக்கான பிரதிமந்திரி வேலை வளர்ச்சி திட்டம்என ஒன்றை பிரம்மாண்டமாக அறிவித்து விட்டு அப்படி நைசாக அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வேலை பார்க்க போய் விடுவாரா?

ஒரு அரசின் எதிர்கால செயல்பாட்டை நாம் அதன் இதுவரையிலானசாதனைகளைவைத்து தான் அனுமானிக்க முடியும். காஷ்மீரை இந்த அரசு இனி சொர்க்கபுரியாக்கும் என கூறுபவர்கள் இதுவரையில்அகண்ட பாரதத்துக்கானமோடி அரசின் பொருளாதார திட்டங்களின் / திட்டமின்மையின் படுதோல்வியை கவனிக்கவில்லை என்றே பொருள்.

முன்னாள் இந்திய தூதர் நிருபமா ராவ் (ஹார்வெர்ட்டில் எல்லாம் போய் படித்தவர்) போன்றவர்களே இப்படியான கற்பனைக் கோட்டையை கட்டுவதைப் பார்க்கும் போது (https://timesofindia.indiatimes.com/blogs/toi-edit-page/paradise-lost-or-regained-kashmir-must-be-drawn-away-from-the-precipice-with-humane-and-judicious-calibration/) இவர்கள் எல்லாம் இந்தியாவில் தான் வாழ்கிறார்களா இல்லை நீரோவின் உடன்பிறப்புகளா எனும் குழப்பம் ஏற்படுகிறது. இந்தியாவின் படித்த வர்க்கம் இன்னும் எத்தனைக் காலம் இப்படியான கற்பித பஞ்சுமெத்தைகளில் மல்லாக படுத்தபடி சபாஷ் என மோட்டுவளையை நோக்கி கைதட்டப் போகிறது? மொத்தமாய் தெருவுக்கு வந்த பிறகா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...