கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷகிப் அல் ஹசனைத் தெரிந்திருக்கும் - வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ; சூப்பர் ஸ்டார் . நீண்ட காலமாக வங்கதேசத்தை தோளில் சுமப்பவர் . ஐ . பி . எல்லில் சன் ரைஸர்ஸ் அணியில் ஆடுபவர் . அபாரமான பேட்ஸ்மேன் . கட்டுப்பாடான சுழலர் . ஆனால் ஹசன் இப்போது ஐ . சி . சி . சூதாட்ட தடுப்பு அமைப்பால் (Anti-corruption Unit) ஒரு வருடத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளார் - அவர் மீதுள்ள குற்றச்சாட்டு தான் சுவாரஸ்யமானது . கடந்த வருடம் தீபக் அகர்வால் எனும் சூதாட்ட முகவர் இவரை சேட்டில் தொடர்பு கொள்கிறார் . தொடர்ந்து இருவரும் வாட்ஸ் ஆப் பண்ணிக் கொள்கிறார்கள் . அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த தகவல்களைக் கேட்கிறார் . ஹசன் இதற்கு பதில் அளிக்கிறாரா குற்றத்தில் ஈடுபட்டாரா எனத் தெரியவில்லை . அதற்கான ஆதாரம் ஐ . சி . சியிடம் இல்லை என நினைக்கிறேன் . அதனால் சூதாட்ட முகவரிடன் தொடர்பு கொண்டதை தம்மிடம் தெரிவிக்கவில்லை எனும் காரணத்துக்காக அவரை தடை செய்திருக்கிறது . இந்த விதிமுறை பற்றித் தான் நான் ஒரு கேள்வியை ...