Skip to main content

Posts

Showing posts from March, 2020

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது? (2)

                                                   விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1) சரி , நாம் எடுத்துக் கொண்ட நாவலுக்கு வருகிறேன் - மேலே சொன்ன அத்தனை சங்கதிகளும் ( இழப்புணர்வு , மிகுபுனைவு , கவித்துவம் , மனசஞ்சாரம் , இல்லாத மனிதர்கள் இருப்பது , நடக்காத சம்பவங்கள் நடப்பது ) இந்நாவலிலும் உண்டு - ஸ்குரு தஸாகி ஒரு ரயில்நிலைய பொறியாளன் . முராகாமியின் பிற நாயகர்களைப் போல இவனும் எந்த தனித்திறனும் அற்ற , யாரும் பெரிதாய் பொருட்படுத்தாத , அதைக்குறித்த எந்த கவலையும் அற்ற சாதாரணன் ; அன்றாட வாழ்வை எந்திரத்தனமாக வாழ்பவன் . நாவல் துவங்கும் போது அவன் தன்னுடைய தற்கொலை விழைவைப் பற்றி , மரணத்தைக் குறித்து தியானிப்பதைப் பற்றி சொல்கிறான் . அதற்குக் காரணம் அவனது நான்கு நண்பர்கள் - இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் . அவர்கள் அவனை ஒருநாள் அழைத்து நட்பைத் துண்டிக்கிறார்கள் . அவர்கள் இன்றி அவன் தன் வாழ்க்கை...

முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது? (1)

விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1) ஒருநாள் திடீரென “ இன்னிக்கு முராகாமி படிக்கணும் ” எனத் தோன்றியது . காரணமேதும் இல்லை . சும்மா அப்படி ஒரு மனநிலை . அவரது புத்தகங்களை சென்னையிலே விட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது அலமாரியில் தேடிய போது தான் தெரிந்தது . பல்கலைக்கழக நூலகத்தில் தேடினால் கிடைத்தது Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage நாவல் மட்டுமே . 2012 இல் ஜப்பானிய மொழியில் வெளியான இந்நாவல் ஒரே மாதத்தில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது . 2014 இல் ஆங்கிலத்தில் வெளியானது . படித்த மூன்று நாட்களில் இந்நாவல் என்னை மற்றொரு உலகுக்கு மந்திரக்கம்பாளம் போல தூக்கிச் சென்றது . இந்த விடுமுறை வாசிப்புக் குறிப்புகளில் முதலில் இந்த புத்தகம் பற்றி பேசுகிறேன் . முதலில் இது என்ன ஒரு சாதாரணத் தலைப்பு என நினைத்தேன் . ஆனால் வசித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான அழகான தலைப்பு எனத் தோன்றியது : Colorless Tsukuru Tazaki எனும் தலைப்பிலேயே நாவலின் plotline வந்து விடுகிறது . அது என்ன என அடுத்து சொல்கி...

கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் - “ நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க ” என கையை உதறும் டாக்டர்களைப் போல அன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார் . பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாக கொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர் . அவரிடம் சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பல கேட்டார்கள் . அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது . அதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது : 1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல . Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே (70 வருடங்களாக ) மனிதர்களிடம் இருந்து வரும் கொரோனாவின் ஒரு புதிய ஜென்மம் மட்டுமே . இது நுரையீரலை பாதிக்கும் ; அதனால் சளி , ஜுரம் போன்ற நோய்க்குறிகள் ஏற்படும் . இதே காரணத்தாலே இது பரவுவது எளிது . கொரோனாவின் ஒரே ஆபத்து அது சுலபத்தில் வேகமாய் பரவும் என்பது மட்டுமே . அதைத் தாண்டிப் பார்த்தால் அது மற்றொரு சளி / ஜுரம் ஏற்படுத்தும்...

தொகுப்பாளர்கள்

டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை கவனித்திருப்பீர்கள் - அவர்களுக்கு எதைப் பற்றியும் ஒரு கருத்திருப்பதாய் காட்டிக் கொள்ள மாட்டார்கள் ; எப்போதுமே ஒரு மிகையாக உற்சாகம் , மிகையான நம்பிக்கை , மிகையான அறிமுகம் , விவரிப்பு ... அதில் உள்ள செயற்கைத்தனம் அது ஒரு ‘ நிகழ்ச்சி ’ எனும் தோரணையை கொடுக்க உதவுகிறது . சூப்பர் சிங்ஙர் நிகழ்ச்சி தொகுப்பாளினி கீழ்ஸ்தாயில் பேசினால் “ பாடகர்கள் யாராவது இறந்து விட்டார்களா ?” என நாம் பதறிப் போவோம் . அவர்கள் கொண்டு வரும் தொனி , பிம்பம் , மிகை எல்லாம் ஒருவித மனநிலையை வெளிப்படுத்துகிறது ; அவர்களின் பேச்சு என்பது சாரமற்றது ; அது அமேசான குரியர் பேக்கிங்கைப் போன்றது . அல்லது ஆப்பிள் கணினியுடன் வரும் பேக்கிங்கைப் போன்றது . தொகுப்புரையில் சொல்லப்படும் எதற்கும் நேரடியான அர்த்தமோ மதிப்போ இல்லை ; ஆனால் ஒரு பேக்கிங்கைத் திறக்கையில் நமக்குக் கிடைக்கும் மனநிலையை இவர்கள் தருகிறார்கள் . அதற்கு மேல் எதையும் உணர்த்த முயலக் கூடாது என்பதே அவர்களுக்குக் கிடைக்கும் பயிற்சி . அவர்கள் சாதாரணமா...

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் விடாது கறுப்பு

நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல ; கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது , ஒரே துண்டை பலர் பயன்படுத்தாமல் இருப்பது , வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பொதுவாக நல்லதே . ஆனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மாதக்கணக்கில் இருந்தாக வேண்டும் என நமது மருத்துவர்கள் சிலர் பரிந்துரைப்பது சுத்த பேத்தல் என்பேன் .   ஒன்று இது நடைமுறையில் ஏற்புடையது அல்ல . மக்கள் பரஸ்பரம் சந்திக்காமல் பேசாமல் நீண்ட நாட்கள் இருந்தால் அது கடுமையான உளச்சிக்கல்களை ஏற்படுத்தும் . சமூக இணக்கத்தை ஒழிக்கும் . அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் . அடுத்து , எந்த ரத்த பரிசோதனையும் செய்யாமல் ஒருவேளை யாருக்கு வேண்டுமெனிலும் கொரோனா தொற்று இருக்கலாம் எனும் கற்பனையின் அடிப்படையில் இந்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோருவது ராத்திரியானால் ரத்தக்காட்டேரி உலவுகிறது , அதனால் பன்னிரெண்டு மணிக்கு மேல் வெளியே வராதீர்கள் என சில கிராமங்களில் நிலவு...

செக்‌ஷன் 375

“ செக்‌ஷன் 375” கடந்த வருடம் வெளியான மிகச்சிறந்த இந்திப் படங்களில் ஒன்று . இதை வழக்காடு மன்ற கருத்துமோதல் படம் (courtroom drama) என வகைப்படுத்தலாம் . தொண்ணூறுகள் வரை இத்தகைய படங்களுக்கு தனி மார்க்கெட் இருந்தது . இப்படங்களுக்கு என ஒரு டெம்பிளேட் உண்டு - ஒரு பரபரப்பான குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதாவார் . அவர் தான் அந்த குற்றத்தை செய்ததாய் பலத்த ஆதாரம் இருக்கும் . முதல் அரைமணிநேரம் நமக்கே இவர் தான் குற்றவாளி எனத் தோன்றும் . அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனும் நிலை . நமக்கு சற்றே அவர் மீது பரிதாபம் ஏற்படும் . அப்போது ஒரு வழக்கறிஞர் தோன்றுவார் ; அவர் இந்த வழக்கில் ஆபத்பாந்தனாக ஆஜராகி யார் எதிர்பாராத கோணத்தில் குற்ற விசாரணையை அலசுவார் ; விசாரணையிலும் அரசுத்தரப்பின் வாதங்களிலும் பிழைகளைக் கண்டறிவார் . வழக்கை முற்றிலும் ஒரு மாறுப்பட கோணத்தில் காட்டி நிஜக்குற்றவாளியை அம்பலப்படுத்துவார் .