Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது? (1)

விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1)


ஒருநாள் திடீரெனஇன்னிக்கு முராகாமி படிக்கணும்எனத் தோன்றியது. காரணமேதும் இல்லை. சும்மா அப்படி ஒரு மனநிலை. அவரது புத்தகங்களை சென்னையிலே விட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது அலமாரியில் தேடிய போது தான் தெரிந்தது. பல்கலைக்கழக நூலகத்தில் தேடினால் கிடைத்தது Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage நாவல் மட்டுமே. 2012இல் ஜப்பானிய மொழியில் வெளியான இந்நாவல் ஒரே மாதத்தில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது. 2014இல் ஆங்கிலத்தில் வெளியானது.

படித்த மூன்று நாட்களில் இந்நாவல் என்னை மற்றொரு உலகுக்கு மந்திரக்கம்பாளம் போல தூக்கிச் சென்றது. இந்த விடுமுறை வாசிப்புக் குறிப்புகளில் முதலில் இந்த புத்தகம் பற்றி பேசுகிறேன்.

முதலில் இது என்ன ஒரு சாதாரணத் தலைப்பு என நினைத்தேன். ஆனால் வசித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான அழகான தலைப்பு எனத் தோன்றியது: Colorless Tsukuru Tazaki எனும் தலைப்பிலேயே நாவலின் plotline வந்து விடுகிறது. அது என்ன என அடுத்து சொல்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த தலைப்பு தான்.


முராகாமியின் நாவல்களுக்கு ஒரு டெம்பிளேட் உண்டு - ஒரு இனம்புரியாத இழப்புணர்வு, அது நாயகன் அல்லது நாயகியை செலுத்தும்; பல வினோத சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்டு அவனை ஒரு சுழலுக்குள் இழுத்து செல்லும். கதை முடியும் போது அவன் தெளிவடைந்திருப்பான், கூடவே நாமும். முராகாமியை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்ற Norwegian Wood தவிர பெரும்பாலான நாவல்கள் மாய எதார்த்த கதைகளே. மாய எதார்த்தம் நாவலுக்கான எழுத்துமுறை அல்ல என எனக்குத் தோன்றும். அது சிறுகதைக்கு ஏற்றது. குறுநாவல்களில் கூட எடுபடும். ஆனால் நீண்ட நாவல்களில் மாய எதார்த்தத்தைக் கையாண்டால் கண்ணைக் கட்டி விட்டது போல ஆகும். மார்க்வெஸைப் போன்ற சாதனையாளர்கள் மாய எதார்த்தத்தை வரலாற்றுடன் பிணைத்து வரலாறும் எதார்த்தமும் வெறும் புனைவுகளே, புனைவுகள் மட்டுமே உண்மை எனக் காட்டுவார்கள். வரலாறும் லத்தீன் அமெரிக்க சமூக அரசியல் சூழலும் மார்க்வெஸுக்கு பெரிய பலம். முராகாமிக்கு அப்படி அல்ல. அவர் தனது நாவல்களில் ஐம்பது, அறுபதுகளின் ஜப்பானையோ இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் ஜப்பானையோ பின்னணியாக கையாண்டாலும் கூட அவரது கதைகள் தனிமனிதர்களின், வரலாற்றில் இருந்து வெளியே நிற்கும், உளவியல் கதைகளே.
 முராகாமியின் நாயகர்கள் நான் ஏற்கனவே சொன்னதைப் போல முழுமையற்றவர்கள்; அவர்கள் அதை உணரும்படி ஒரு காதலி மறைந்து போகலாம், மனைவி விலகி செல்லலாம், பூனையொன்று காணாமல் போகலாம் (Wind-up Bird Chronicle), சொந்த அப்பாவை மகன் கொல்ல நேரலாம், ஒரு விபத்தில் தன் புத்திசாலித்தனத்தை இழந்து பேதையாகிப் போன ஒருவன் தான் நிஜத்தில் பேதை அல்ல, மாறாக அப்படி ஆக்கப்பட்டதாய் உணர்ந்துகொள்ள நேரலாம் (Kafka on the Shore) ... இப்படி எது வேண்டுமெனிலும் நடக்கலாம். இதன் பிறகு முராகாமி இந்த இழப்புணர்வை கவித்துவமான ஒரு சாகசப்பயணமாக மாற்றுவார், நாயகனின் குழப்பங்கள், சிக்கல்களை நம்முடைய குழப்பங்கள், சிக்கல்களாகவே உணரச் செய்வார். ஒரு பாத்திரத்தை, அவனது வினோதச் செயல்களை உருவகமாக்குவார். ஹெமிங்வே, கார்வரின் மினிமலிச எதார்த்தத்தை லத்தீன் அமெரிக்க நாவல்களின் மாய எதார்த்தத்தோடு கலந்து, ஜப்பானிய தொல்கதைகளை குறிப்புணர்த்தி, ஒரு தனி கலவையாக, ரசனையான மொழியில் எழுதுவார் (தன்னுடைய மொழியைக் கண்டடைய அவர் முதலில் ஆங்கிலத்தில் எழுதி அதை ஜப்பானில் மொழியாக்கியதாக ஒரு கதை உண்டு). இப்படியான கதையமைப்புகள் சிரசாசனம் பழகியபடி காதலிக்கு உதட்டு முத்தம் கொடுப்பதைப் போல - எல்லாம் சரியாக அமைந்து வரவேண்டும்.

 South of the Border, West of the Sun நாவலை இதற்கு உதாரணம் காட்டலாம் - அந்நாவல் முழுக்கவே இல்லாத ஒரு பெண்ணைப் பற்றியது, அவளுடன் நாயகன் கொள்ளும் நடக்காத கள்ள உறவைப் பற்றியது; கொஞ்சம் பிசகினால் மொத்த நாவலும் அபத்தம் எனப்படும். மேலும், இப்படியான ஒரு நாவலில் முழுக்க மனப்பிராந்திகளைப் பற்றி கவித்துவமான தீவிரமான தொனியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு செல்ல முடியாது; திகட்டி / அலுத்து விடும். முராகாமி இந்த கவித்துவத்தை அன்றாட வாழ்வின் சாதாரணத்துவத்துடன் பின்னியெடுத்துச் செல்லும் பாங்கினால் இப்பிரச்சனையை வெற்றிகரமாக கடந்து செல்கிறார்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...