Skip to main content

Posts

Showing posts from January, 2021

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நிலைகள் குறித்த விசாரணை - 5

5. “These give rise to those, So these are called conditions. As long as those do not come from these,  why are these non-conditions?” “ இவை அவற்றை தோற்றுவிக்கின்றன , அதனால் இவை நிலைகளாய் அறியப்படுகின்றன [ என்கிறார்கள் ]. அவை இவற்றில் இருந்து அவை தோன்றாத வரையில் , இவை ஏன் அ - நிலைகள் அல்ல ?”   இந்த ஸ்லோகம் நிச்சயம் குழப்பமானதாகத் தெரியும் படி எழுதப்பட்டிருக்கிறது . இருந்தாலும் இது ஒரு சுவாரஸ்யமான வாதம் , ஒருவித தலைகீழ் பின்னோக்கு வாதம் . முதல் இரு வரிகள் நாகார்ஜுனரின் எதிரணியினர் எழுப்புவன - “ ஒரு விசயத்தை அதன் நிலைகள் தோற்றுவிக்கின்றன , அதனாலே அவை நிலைகள் ” என அவர்கள் சொல்லுகிறார்கள் . ஆமாம் , அதுக்கென்ன என நீங்கள் நினைக்கலாம் . ஆனால் உற்று நோக்கினாலே இதிலுள்ள விஷமத்தனம் புரியும் - ஒன்று மற்றொன்றின் நிலையாக இருப்பதானாலே அது தன்னளவில் சாராம்சமான ‘ நிலை ’ ஆவதில்லை . ஹைடெக்கர் இருத்தல் (being) பற்றி சொல்லும் போது சுத்தியலை உதாரணமாகக் காட்டுகிறார் . சுத்தியலால் ஒருவன் ஆணியை சுவற்றில் அடிக்கிறான் . அந்த தருணத்தில்...

நிலைகள் குறித்த விசாரணை - 4

  4.   Power to act does not have conditions. There is no power to act without conditions There are no conditions without power to act. Nor do any have the power to act. “ ஒன்றை செயல்படுத்தும் ஆற்றலுக்கு நிலைகள் அவசியமில்லை [ எனப்படுகிறது ]. [ ஆனால் ] நிலைகள் இன்றி செயல்படுத்தும் ஆற்றலே இல்லை . செயல்படுத்தும் ஆற்றல் இல்லாத நிலைகளே இல்லை . அதேநேரம் செயல்படுத்தும் அதிகாரம் அவற்றுக்கு இல்லையும் தான் .” கொஞ்சம் குழப்பமாகத் தெரியும் , ஜாங்கிரி சுற்றுகிற ஸ்லோகம் இது என்றாலும் இதன் வாதம் எளிதானது , வலுவானது . ஒரு விசயத்தை நிகழ்த்துவதற்கான ஆற்றல் அதிலேயே உள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது . ஒரு தேர்தலின் போது செலுத்தப்படும் வாக்கை எடுத்துக் கொள்வோம் . மக்களின் வாக்குக்கு நாட்டின் அதிகாரத்தை மாற்றும் சக்தி உண்டு எனப்படுகிறது . ஆனால் அந்த ஆற்றல் வாக்குச்சீட்டின் ஆற்றல் அல்ல . வாக்கின் ஆற்றல் அதை பதிவு செய்வதில் மட்டுமே உள்ளது . அதைக் கடந்து நிகழ்கிற செயல்கள் தம்மளவில் அதிகாரம் பெற்றவை அல்ல . அவை பல உபநிலைகளை ச...

மோடி எதிர்ப்பலை எனும் மாயை

இந்த பாஜக எதிர்ப்பலை மாயையைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன் . இடமே இல்லாத போது எப்படி எதிர்ப்பலை வர முடியும் என்பதே என் கேள்வி . தமிழக மக்கள் தம்மை இந்திய தேசியத்துக்கு எதிராக கற்பிக்க சில சூழ்நிலைகளில் மட்டும் தான் முடியும் - முன்பு இந்தி எதிர்ப்பு , பின்னர் ஜல்லிக்கட்டு , இடையே நீட் எதிர்ப்பு . ஆனால் நிரந்தரமாக அது இங்கிருந்ததில்லை , ஏனென்றால் அதற்கான அவசியம் தமிழர்களுக்கு இல்லை . அவர்கள் தம்மை தம்மளவில் ஒரு தேசிய இனமாக கருதுகிறார்கள் . மேலும் , தமிழர்கள் தமது இருப்புக்கு மத்திய அரசால் நிரந்தர ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நம்புவதில்லை . அப்படி ஒரு கசப்பு இருந்தாலும் ஆளும் மத்திய அரசை எதிர்க்கும் நோக்கில் மட்டுமே மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளது இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளதா ? சரி அப்படியே வாக்களித்தாலும் பாஜகவின் நிரந்தர எதிரிகளான கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை ? ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகம...

“தான் அழிதல்” எனும் சூனியம்

இதன் முடிவில் வரும் ஹபீபின் பதிவு முக்கியமானது . அதற்கு முன் நான் சொல்வதை ஒருமுறை படித்து விடுங்கள் . ராதகிருஷ்ணா ஹபீபிடம் எழுப்பும் கேள்வியை இப்படி புரிந்து கொள்ளலாம் : வைதீகம் , குறிப்பாக அத்வைதம் , சொல்லும் பிரம்மத்துக்கும் நாகார்ஜுனரின் சூனியத்துக்கும் என்ன வித்தியாசம் ? அல்லது இரண்டுமே ஒன்றா ?  அத்வைதத்தை எதிர்கொள்ளும் பலருக்கும் இக்கேள்வி எழும் . ஒரு உதாரணத்துக்கு , “ பகவத் கீதை ” எனும் அந்த அற்புதமான ( அதே நேரம் பிற்போக்கான ) தத்துவ பிரதியில் கிருஷ்ணர் தான் யாரென அர்ஜுனனுக்கு விளக்குகிறார் . நான் இதுதான் , இவர் தான் என்று அல்லாமல் அவர் பின்னோக்குவாத அல்லது மறுப்புவாத முறைமையை பயன்படுத்துகிறார் . நான் வான் அல்ல , நான் உலகம் அல்ல , நான் மரம் அல்ல , நான் கொடி அல்ல என வரிசையாக இது செல்லும் . எந்த இடத்திலும் தான் இதுதான் என கிருஷ்ணர் சொல்ல மாட்டார் . இறுதியில் அனைத்தும் மறுக்கப்பட்ட ஒரு இடத்தில் எது தோன்றுகிறதோ அதுவே தான் என்கிறார் . வைதீக சிந்தனையில் இந்த பாணியிலான அறிதலை “ நேதி நேதி ” என்...