முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலைகள் குறித்த விசாரணை - 4

 4. 

Power to act does not have conditions.

There is no power to act without conditions

There are no conditions without power to act.

Nor do any have the power to act.


ஒன்றை செயல்படுத்தும் ஆற்றலுக்கு நிலைகள் அவசியமில்லை [எனப்படுகிறது].

[ஆனால்] நிலைகள் இன்றி செயல்படுத்தும் ஆற்றலே இல்லை.

செயல்படுத்தும் ஆற்றல் இல்லாத நிலைகளே இல்லை.

அதேநேரம் செயல்படுத்தும் அதிகாரம் அவற்றுக்கு இல்லையும் தான்.”





கொஞ்சம் குழப்பமாகத் தெரியும், ஜாங்கிரி சுற்றுகிற ஸ்லோகம் இது என்றாலும் இதன் வாதம் எளிதானது, வலுவானது.

ஒரு விசயத்தை நிகழ்த்துவதற்கான ஆற்றல் அதிலேயே உள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஒரு தேர்தலின் போது செலுத்தப்படும் வாக்கை எடுத்துக் கொள்வோம். மக்களின் வாக்குக்கு நாட்டின் அதிகாரத்தை மாற்றும் சக்தி உண்டு எனப்படுகிறது. ஆனால் அந்த ஆற்றல் வாக்குச்சீட்டின் ஆற்றல் அல்ல. வாக்கின் ஆற்றல் அதை பதிவு செய்வதில் மட்டுமே உள்ளது. அதைக் கடந்து நிகழ்கிற செயல்கள் தம்மளவில் அதிகாரம் பெற்றவை அல்ல. அவை பல உபநிலைகளை சார்ந்து ஆற்றல் பெறுபவை. ஒரு வாக்கு அதன் ஆற்றலைப் பெற அதை செலுத்துகிறவரின் அடையாளம், அவர் வசிக்கிற பகுதி, அவர் வாக்கை செலுத்துகிற காலம், அவர் வாக்கை சரியாக செலுத்துகிற பாங்கு, அவ்வாக்கு எந்திரத்தில் சரியாக பதிவாகி எந்த தில்லுமுல்லும் நடக்காதிருப்பது, மற்ற வாக்குகளின் ஆற்றல்கள், அதற்கும் பின்னால் மற்ற நேரங்களில் சாமான்ய அடையாளம் (வாக்களிக்காதவராக) பூணும் அவர் அப்போது தன்னை வாக்காளராக உணர்வது, வாக்கு செலுத்த வேண்டும் எனும் விருப்பத்தை அவர் கொள்வது பல நிலைகள் பின்னிருந்து இயக்கி அந்த அதிகாரத்தை தோன்ற செய்கின்றன. அதனாலே இரண்டாவது வரி ‘நிலைகளே நிகழ்த்தும் ஆற்றலின் காரணம் ஆகின்றன’ என்கிறது.


இந்த நிலைகளும் ஆற்றல் இன்றி வெற்றாய் இருப்பதில்லை. ஆனால் அதன் பொருள் இந்த நிலைகள் தம்மளவில் ஒன்றை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்பதல்ல. அவை நிலைகளாக செயலைத் தூண்டுவதற்கு பல உபநிலைகள் பின்னிருந்து இயக்கியாகி வேண்டும். அதனாலே அவற்றுக்கு ஆற்றல் உண்டு, ஆனால ஆற்றல் இல்லை என முரணாகத் தோன்றுகிற இறுதி வரிகளை நாகார்ஜுனர் எழுதுகிறார் - அவரது அக்கறையெல்லாம் இந்த நிலைகளுக்கு தனிப்பெரும் முழுமுதல் ஆற்றல் உண்டு என எதிர்முகாமினர் புதிய கதையை கட்டக் கூடாது என அதற்கும் அவர் இங்கு ஒரு தடுப்பை வைக்கிறார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.