முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலைகள் குறித்த விசாரணை - 4

 4. 

Power to act does not have conditions.

There is no power to act without conditions

There are no conditions without power to act.

Nor do any have the power to act.


ஒன்றை செயல்படுத்தும் ஆற்றலுக்கு நிலைகள் அவசியமில்லை [எனப்படுகிறது].

[ஆனால்] நிலைகள் இன்றி செயல்படுத்தும் ஆற்றலே இல்லை.

செயல்படுத்தும் ஆற்றல் இல்லாத நிலைகளே இல்லை.

அதேநேரம் செயல்படுத்தும் அதிகாரம் அவற்றுக்கு இல்லையும் தான்.”





கொஞ்சம் குழப்பமாகத் தெரியும், ஜாங்கிரி சுற்றுகிற ஸ்லோகம் இது என்றாலும் இதன் வாதம் எளிதானது, வலுவானது.

ஒரு விசயத்தை நிகழ்த்துவதற்கான ஆற்றல் அதிலேயே உள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஒரு தேர்தலின் போது செலுத்தப்படும் வாக்கை எடுத்துக் கொள்வோம். மக்களின் வாக்குக்கு நாட்டின் அதிகாரத்தை மாற்றும் சக்தி உண்டு எனப்படுகிறது. ஆனால் அந்த ஆற்றல் வாக்குச்சீட்டின் ஆற்றல் அல்ல. வாக்கின் ஆற்றல் அதை பதிவு செய்வதில் மட்டுமே உள்ளது. அதைக் கடந்து நிகழ்கிற செயல்கள் தம்மளவில் அதிகாரம் பெற்றவை அல்ல. அவை பல உபநிலைகளை சார்ந்து ஆற்றல் பெறுபவை. ஒரு வாக்கு அதன் ஆற்றலைப் பெற அதை செலுத்துகிறவரின் அடையாளம், அவர் வசிக்கிற பகுதி, அவர் வாக்கை செலுத்துகிற காலம், அவர் வாக்கை சரியாக செலுத்துகிற பாங்கு, அவ்வாக்கு எந்திரத்தில் சரியாக பதிவாகி எந்த தில்லுமுல்லும் நடக்காதிருப்பது, மற்ற வாக்குகளின் ஆற்றல்கள், அதற்கும் பின்னால் மற்ற நேரங்களில் சாமான்ய அடையாளம் (வாக்களிக்காதவராக) பூணும் அவர் அப்போது தன்னை வாக்காளராக உணர்வது, வாக்கு செலுத்த வேண்டும் எனும் விருப்பத்தை அவர் கொள்வது பல நிலைகள் பின்னிருந்து இயக்கி அந்த அதிகாரத்தை தோன்ற செய்கின்றன. அதனாலே இரண்டாவது வரி ‘நிலைகளே நிகழ்த்தும் ஆற்றலின் காரணம் ஆகின்றன’ என்கிறது.


இந்த நிலைகளும் ஆற்றல் இன்றி வெற்றாய் இருப்பதில்லை. ஆனால் அதன் பொருள் இந்த நிலைகள் தம்மளவில் ஒன்றை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்பதல்ல. அவை நிலைகளாக செயலைத் தூண்டுவதற்கு பல உபநிலைகள் பின்னிருந்து இயக்கியாகி வேண்டும். அதனாலே அவற்றுக்கு ஆற்றல் உண்டு, ஆனால ஆற்றல் இல்லை என முரணாகத் தோன்றுகிற இறுதி வரிகளை நாகார்ஜுனர் எழுதுகிறார் - அவரது அக்கறையெல்லாம் இந்த நிலைகளுக்கு தனிப்பெரும் முழுமுதல் ஆற்றல் உண்டு என எதிர்முகாமினர் புதிய கதையை கட்டக் கூடாது என அதற்கும் அவர் இங்கு ஒரு தடுப்பை வைக்கிறார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...