முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“தான் அழிதல்” எனும் சூனியம்





இதன் முடிவில் வரும் ஹபீபின் பதிவு முக்கியமானது. அதற்கு முன் நான் சொல்வதை ஒருமுறை படித்து விடுங்கள்.


ராதகிருஷ்ணா ஹபீபிடம் எழுப்பும் கேள்வியை இப்படி புரிந்து கொள்ளலாம்: வைதீகம், குறிப்பாக அத்வைதம், சொல்லும் பிரம்மத்துக்கும் நாகார்ஜுனரின் சூனியத்துக்கும் என்ன வித்தியாசம்? அல்லது இரண்டுமே ஒன்றா


அத்வைதத்தை எதிர்கொள்ளும் பலருக்கும் இக்கேள்வி எழும். ஒரு உதாரணத்துக்கு, “பகவத் கீதைஎனும் அந்த அற்புதமான (அதே நேரம் பிற்போக்கான) தத்துவ பிரதியில் கிருஷ்ணர் தான் யாரென அர்ஜுனனுக்கு விளக்குகிறார். நான் இதுதான், இவர் தான் என்று அல்லாமல் அவர் பின்னோக்குவாத அல்லது மறுப்புவாத முறைமையை பயன்படுத்துகிறார். நான் வான் அல்ல, நான் உலகம் அல்ல, நான் மரம் அல்ல, நான் கொடி அல்ல என வரிசையாக இது செல்லும். எந்த இடத்திலும் தான் இதுதான் என கிருஷ்ணர் சொல்ல மாட்டார். இறுதியில் அனைத்தும் மறுக்கப்பட்ட ஒரு இடத்தில் எது தோன்றுகிறதோ அதுவே தான் என்கிறார். வைதீக சிந்தனையில் இந்த பாணியிலான அறிதலைநேதி நேதிஎன்கிறார்கள். வேள்வித்தீயில் ஒவ்வொன்றாக போடும் போது இவ்வாறு இதை காட்சிப்படுத்த முயல்கிறார்கள். இந்த மறுப்புவாதம் வாழ்தலுக்கு எதிராக, துறவாக போய் விடக் கூடாது எனும் அக்கறை அத்வைதிகளுக்கு உண்டு. அதனாலேகீதையில்தன்னை நேரடியாக மறுக்காமல் செயலில் தன்னை இழப்பதை கிருஷ்ணன் பரிந்துரைக்கிறார். போர் உன் வேலையென்றால் சரி-தவறு குறித்த பாகுபாடுகள், இருமைகள், மதிப்பீடுகள் இன்றி தன்னை அதில் கரைத்துக் கொண்டு செயல்படு என்கிறார். இது அறம், நீதி குறித்த கேள்விகளை எழுப்பும் என்பதால் கிருஷ்ணர் அதற்கும் ஒரு தீர்வளிக்கிறார். அறம் என்பது ஒரு சமூகத்துக்கு ஒரு கட்டத்தில் அவசியப்படும் நீதிக்கு ஏற்ப, ஒரு தனிமனிதன் தனக்கு சமூகத்தால் அளிக்கப்பட்டுள்ள கடமைக்கு ஏற்ப, ஒரு சந்தர்பத்தின் அவசியத்துக்கு ஏற்ப முடிவெடுப்பது, ஆனால் அதை விட முக்கியமாய், முடிவு செய்து செயலை ஆரம்பித்த பின் அங்கு செயலே அறம் என்கிறார்


இங்கிருந்து நாம் இவர்கள் சொல்லும் பிரம்மம் என்பதை புரிந்து கொள்ள முயல வேண்டும். அத்வைதம் பிரம்மத்தை ஒரு முதல்முழு இருப்பாக கருதினாலும் அதே வேளை மனிதனால் பிரம்மத்தை தன் செயல்கள் வழி அனுபவித்து வெளிப்படுத்த முடியும் என்கிறது. இதனாலே கிருஷ்ணர் மனிதராகவும் கடவுளாகவும் ஒரே சமயம் இருக்கிறார். இந்துக் கடவுளர் குறித்த பல கதைகளிலும் (“திருவிளையாடல்”) இந்த இரண்டறக் கலந்த கடவுள் நிலையைக் காண முடியும். அதில் ஒருவர் தன் மனித நிலையையும் கடவுள் நிலையையும் ஒரே சமயம் கடக்கும் போது அவர் கடவுளாகிறார். அப்படி கடக்கும் பொருட்டே இறைவனின் இருப்பானது ஒரு விளையாட்டாகிறது. சிவபெருமான், கிருஷ்ணர் இருவருக்கும் இந்த விளையாட்டு எனும் செயல்முறை அளிக்கப்பட்டு அவர்களை அத்வைதிகள் மறுவரை பண்ணினார்கள் என நினைக்கிறேன். இங்கிருந்து மீண்டும் இறைநிலை என்றால், முக்தி என்றால் என்னவென விசாரித்தால் பதில் கிடைக்கும் - தங்குதடையற்ற வாழ்தல் மூலம் இருமையைக் கடத்தல், இருமையற்ற நிலையே அனுபூதியாக, முக்தியாக அத்வைதத்தில் கருதப்படுகிறது


நாகார்ஜுனரை வாசிப்போர் இதன் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இது ஒருசமரசப் புள்ளிமட்டுமே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது ஏன் சமரசம் ஆகிறது? இருமை - இருமையின்மை என்பதே ஒரு இருமை தானே. அதுவே ஒரு சாராம்சப்படுத்தல் தானே. அதுவே ஒரு லட்சியவாதம் தானே.


நேற்று நானும் நண்பர்களும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் Limits of Knowledge எனும் நூலைப் படித்துக் கொண்டிருந்தோம். இந்நூலானது கிருஷ்ணமூர்த்திக்கும் டேவிட் புரோம் எனும் விஞ்ஞானிக்கும் இடையிலான உரையாடலின் பதிவு. இதில் ஜெ.கெ இந்த உலகமானது, பிரபஞ்சமானது அதனளவில் ஒரு பூரணமான ஒழுங்கை, இருமையற்ற ஒரு ஒழுக்கை கொண்டது, மனித சுயத்தின் இடையூறு இதில் ஒரு ஒழுங்கின்மையை, குழப்பத்தை, சிக்கலை உண்டு பண்ணுகிறது. இது ஆத்திரத்துக்கு, ஏமாற்றங்கள், பதற்றத்துக்கு வழிவகுக்கிறது. நாம் மதம் அளிக்கிற பயிற்சிகளை, முறைமைகளை பின்பற்றி ஒரு ஒழுங்கைக் கொண்டு வரும் போது அங்கு மேலும் ஒழுங்கின்மை தோன்றி சுயத்தின் இருப்பு வலுப்படுகிறது என்கிறது. இதுவும் அத்வைத நோக்கே. இந்த நோக்கை ஒருவித கடப்புநிலைவாதம் (transcendentalism) எனலாம். ஆசிய தத்துவத்தின் தாக்கம் பெற்ற ஜெர்மானிய (continental) தத்துவ மரபிலும், ஆதி கிரேக்க மரபிலும் இதை நாம் அதிகமாகப் பார்க்கிறோம் (நீட்சே, சாக்ரடீஸ், காண்ட்). சமகால பின்நவீன சிந்தனையிலும் இது ஓரளவுக்கு தாக்கம் செலுத்துகிறது

இந்த கடப்புவாதத்தின் சிக்கல் என்னவென்றால் அது ஒரு லட்சியவாதத்துக்கு, கருத்துமுதல்வாதத்துக்கு இட்டு செல்கிறது. என்னதான்கீதையில்கிருஷ்ணர் தன்னை இழந்து, வாழ்தல் ஈடுபடக் கூறினாலும் அந்த அதி உன்னத நிலை ஒரு கருத்தாகவே நிலைப்பெறுகிறது. அந்த நிலை ஒரு கடவுளாகி ஒரு புதிய கட்டமைப்பை தோற்றுவிக்கிறது. நுட்பமாக நோக்கினால் இது ஆபத்தானது எனப் புரியும். ஏனென்றால் தன்னை இழக்கிற இடத்தில்தன்னை இழந்த ஒரு பிரக்ஞைதோன்றி விடுகிறது. இதை பிரம்மமாக்குகிறார்கள். இது ஒரு சாராம்சமானது என்பதால் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது


நாகார்ஜுனர் இங்கு தான் முக்கியமாகிறார் - “மூலமத்யமகாகாரிகையில்ஒரு முக்கியமான அத்தியாயம்ததாகதர் [புத்தர்] குறித்த விசாரணை”. இதில் ததாதகர் எனும் சூனிய நிலையே (அதாவது வைதீகத்தின் முக்தி நிலை, பிரம்மம்) சூனியமானது தான் என நாகார்ஜுனர் நிறுவுகிறார். அதாவது புத்தரையே மறுக்கிறார். எந்த இடத்திலும் நாம் ஒரு நிலையை உன்னதமாக்கி, சாராம்சமாக்கி, தெய்வமாக்கி விடக் கூடாது (reification) என்று நாகார்ஜுனர் மிகுந்த அக்கறை காட்டுகிறார். புத்தரையே சாராம்சமற்ற, சார்புநிலைகளால் தோன்றுகிற ஒரு இருப்பு என அவர் காட்டுகிறார்


அத்வைதத்தினால் இப்படியான முழுமையான சாராம்ச மறுப்புக்கு செல்ல முடியாது, [மகாயான] பௌத்ததால் முடியும். அதுவே நாகார்ஜுனரின் சிறப்பு.


இனி ராதாகிருஷ்ணா மற்றும் ஹபீபின் வாதங்களைப் பாருங்கள்!



“THE KNOWLEDGE OF "I" IS SOUL


The ultimate knowledge of all Vedas and scriptures is, "I am the Soul". When the ego is destroyed, what remains? It is the Soul. It is Vacuum. Who will know the Vacuum? The understanding of the Vacuum is Soul. "I”, Soul and the Universe are all one and the same. This is what all scriptures say as a final statement.


வணக்கம், ஹபீப். மேலுள்ள மேற்கோளில், ரமண மஹரிஷி, Vacuum என்று சொல்கிறார். இது நாகார்ஜுனர் சொல்லியுள்ள சூன்யம் எனக் கொள்ளலாமா? நன்றி.”


Radhakrishna


நாகார்ஜுனர் எதிர்க்கும் சூன்யம் என்று சொல்லலாம். ஏனென்றால், நான் வாசித்தவரை நாகர்ஜுனர் வைதீகத்தின் த்வைத, அத்வைத தத்துவத்தை எதிர்த்த பார்வை தான் இருந்திருக்கிறது. அதைத்தான் இந்திய தத்துவம் பிரம்மம் என்று சொல்கிறது. அந்நிலையை யோகத்தின் மூலம் அடையமுடியும் என்பது கருத்து. ரமண மகரிஷி ஓர் ஞானயோகி. நான் ரமண மகரிஷி அவர்கள் சொன்ன கருத்துக்கள் அதிகம் படித்ததில்லை. அவர் ஞானயோகத்தின் அக்ரம முக்தி(an unexpected happening) நிலையடைந்ததாக படித்திருக்கிறேன். மரண நிலை அனுபவம் பெற்றிருக்கிறார். அப்போது அவருக்குள் ஆவேசமான மின்சாரம் போன்றதொரு ஆற்றலை உணர்ந்ததாகவும் தானே அதுவாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார். அவருடைய உபதேசங்கள் அத்வைத்தை மையமாக கொண்டது. WHO AM I? என்ற கேள்வி தான் அவரின் சாரமான உபதேசம். மேலும் நீங்கள் அனுப்பிய ஆங்கில மேற்கோளை அத்வைத கருத்தின் பொருளோடு தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த vacuum concept நவீன அறிவியலிலும் உள்ளது. Vacuum energy, Zero point energy என்று சொல்வார்கள். இதனை சாராம்சப்படுத்துவதால் ஒன்றிமில்லாதலிருந்து உருவானது என்ற கருத்து உருவாகிறது. இதைத்தான் நாகர்ஜுனர் எதிர்க்கிறார். அவர் முக்கியமாக எதிர்ப்பது essentialityயே. பொருளோடு தொடர்புடைய Substantiality யும் நாகர்ஜுனரின் "சூன்யதா" மறுக்கிறது. அடிப்படை துகள் (fundamental Particle) தான் காரணம் என்ற கருத்து கூட அர்த்தமற்று போகிறது. எதுவானாலும் அது இயல்பாகவே இருக்கிறது. மேலும் அவை சொல்லப்பட்ட நான்கு நிலைகளில் செயல்படுகிறது என்பது கருத்து. "ஸ்வபவ" என்று சொல்கிறார். அதேபோல், விவாதம், கருத்துப்பரிமாற்றம் என்று வரும்போது சூன்யம் என்ற கருத்தாக்கத்தை ஆன்மீக ரீதியாக அணுகும்போது ஏற்படும் புரிதலும், மெய்யியல் ரீதியாக ஏற்படும் புரிதலும் வெவ்வேறானவை.


நகர்ஜுனரின் வரிகளைப் பகிர்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்


All is possible when emptiness is possible.

Nothing is possible when emptiness is impossible.


எனக்கும் புரியவில்லை.”


- ஹபீப் ஹாதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...