முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலைகள் குறித்த விசாரணை - 5

5.

“These give rise to those,

So these are called conditions.

As long as those do not come from these,

 why are these non-conditions?”


இவை அவற்றை தோற்றுவிக்கின்றன,

அதனால் இவை நிலைகளாய் அறியப்படுகின்றன [என்கிறார்கள்].

அவை இவற்றில் இருந்து அவை தோன்றாத வரையில்,

இவை ஏன் -நிலைகள் அல்ல?”





 இந்த ஸ்லோகம் நிச்சயம் குழப்பமானதாகத் தெரியும் படி எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும்

இது ஒரு சுவாரஸ்யமான வாதம், ஒருவித தலைகீழ் பின்னோக்கு வாதம். முதல் இரு வரிகள் நாகார்ஜுனரின் எதிரணியினர் எழுப்புவன - “ஒரு விசயத்தை அதன் நிலைகள் தோற்றுவிக்கின்றன, அதனாலே அவை நிலைகள்என அவர்கள் சொல்லுகிறார்கள். ஆமாம், அதுக்கென்ன என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உற்று நோக்கினாலே இதிலுள்ள விஷமத்தனம் புரியும் - ஒன்று மற்றொன்றின் நிலையாக இருப்பதானாலே அது தன்னளவில் சாராம்சமானநிலைஆவதில்லை. ஹைடெக்கர் இருத்தல் (being) பற்றி சொல்லும் போது சுத்தியலை உதாரணமாகக் காட்டுகிறார். சுத்தியலால் ஒருவன் ஆணியை சுவற்றில் அடிக்கிறான். அந்த தருணத்தில் சுத்தியல், அதைக் கைக்கொண்டிருக்கும் அவன், அவனது கரம், அடிக்கப்படும் ஆணி, அது இறங்கும் சுவர் எல்லாம் ஒரே புள்ளியில் இணைகின்றன. இவற்றில் ஏதோ ஒன்று தனித்து பார்க்கப்பட்டால் சுத்தியலால் அறைவதே சாத்தியமில்லை. சுத்தியல் அப்போது அவனது கரத்தின் நீட்சியாக, ஆணி அந்த சுத்தியலின் மற்றொரு பாகமாக, அது துளைக்கும் சுவரின் அதன் நீட்சியாக மாறுகிறது. இதனாலே ஒருவன் சுத்தியலால் ஒரு பெண்ணின் தலையில் அடித்துக் கொன்றால் செய்தியில் he hammered her to death என வருகிறது என ஹைடெக்கர் கூறுகிறார். இங்கு சுத்தியல் அறையப்படுவதற்கு அதை ஓங்கி செலுத்துகிற அசைவிலிருந்து, அசைய வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து, தான் சுத்தியலால் அறைகிறோம் எனும் எண்ணம், அதனால் தான் சுத்தியலை அறைகிறவர் ஆகிறோம் எனும் பார்வை அவனுக்குள் தோன்றுகிறது, அவன் பார்க்கிறவனாகவும் பார்க்கப்படுகிறவனாகவும் ஆகிறான், இப்படி பல நிலைகள் அவனை சுத்தியலைக் கொண்டு அறையச் செய்கின்றன. ஆனால் அதனாலே சுத்தியலை எடுத்து அறைகிற அந்த (செயலூக்க நிலை) அசைவானது அந்த செயலை தானாக நிகழ்த்துவதில்லை. அவனுக்கு உடம்பில் அதற்கான வலு இருக்க வேண்டும், அது இருந்தாலும் அந்த சூழல் அதற்கு சாதகமாக இருக்க வேண்டும், அங்கு சுவர் இருக்க வேண்டும், சுவர் ஆணியால் அறையப்பட தோதாக இருக்க வேண்டும் ... இப்படி பல நிலைகள் இந்த நிலைகளுக்கு பின்னுன்று செலுத்துவதைப் பார்க்கிறோம்

அடுத்து இங்கு காலம் குறித்த ஒரு சிக்கல் வருவதையும் நாகார்ஜுனர் உணர்த்துகிறார். சுத்தியலால் அறைய வேண்டும் எனும் நோக்கம் அது ஏற்படும் முன்பு என்னவாக இருக்கிறது? சுத்தியலை வீசும் அசைவாகிய அந்த செயலூக்க நிலை அதற்கு முன்பு என்னவாக இருக்கிறது? இப்போது அது நிலை என்றால் அப்போது அது -நிலையா என நாகார்ஜுனர் கிண்டலாக வினவுகிறார். ஏனென்றால் ஒன்றைக்கொண்டு அதை சாராம்சமான நிலையாக நாம் கட்டமைக்கும் போது அது காலத்தில் முன்னோ பின்னோ மற்றொன்றாக இருக்கையில் அது -நிலையாகவே இருந்தாக வேண்டும். ஆனால் ஒன்று சாராம்சமற்று ஒன்றை தோற்றுவிக்கும் போது மட்டுமே நிலையாக இருக்கிறது என நாம் சொல்லும் போது இச்சிக்கலோ அபத்தமோ ஏற்படுவதில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...