Skip to main content

நிலைகள் குறித்த விசாரணை - 5

5.

“These give rise to those,

So these are called conditions.

As long as those do not come from these,

 why are these non-conditions?”


இவை அவற்றை தோற்றுவிக்கின்றன,

அதனால் இவை நிலைகளாய் அறியப்படுகின்றன [என்கிறார்கள்].

அவை இவற்றில் இருந்து அவை தோன்றாத வரையில்,

இவை ஏன் -நிலைகள் அல்ல?”





 இந்த ஸ்லோகம் நிச்சயம் குழப்பமானதாகத் தெரியும் படி எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும்

இது ஒரு சுவாரஸ்யமான வாதம், ஒருவித தலைகீழ் பின்னோக்கு வாதம். முதல் இரு வரிகள் நாகார்ஜுனரின் எதிரணியினர் எழுப்புவன - “ஒரு விசயத்தை அதன் நிலைகள் தோற்றுவிக்கின்றன, அதனாலே அவை நிலைகள்என அவர்கள் சொல்லுகிறார்கள். ஆமாம், அதுக்கென்ன என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உற்று நோக்கினாலே இதிலுள்ள விஷமத்தனம் புரியும் - ஒன்று மற்றொன்றின் நிலையாக இருப்பதானாலே அது தன்னளவில் சாராம்சமானநிலைஆவதில்லை. ஹைடெக்கர் இருத்தல் (being) பற்றி சொல்லும் போது சுத்தியலை உதாரணமாகக் காட்டுகிறார். சுத்தியலால் ஒருவன் ஆணியை சுவற்றில் அடிக்கிறான். அந்த தருணத்தில் சுத்தியல், அதைக் கைக்கொண்டிருக்கும் அவன், அவனது கரம், அடிக்கப்படும் ஆணி, அது இறங்கும் சுவர் எல்லாம் ஒரே புள்ளியில் இணைகின்றன. இவற்றில் ஏதோ ஒன்று தனித்து பார்க்கப்பட்டால் சுத்தியலால் அறைவதே சாத்தியமில்லை. சுத்தியல் அப்போது அவனது கரத்தின் நீட்சியாக, ஆணி அந்த சுத்தியலின் மற்றொரு பாகமாக, அது துளைக்கும் சுவரின் அதன் நீட்சியாக மாறுகிறது. இதனாலே ஒருவன் சுத்தியலால் ஒரு பெண்ணின் தலையில் அடித்துக் கொன்றால் செய்தியில் he hammered her to death என வருகிறது என ஹைடெக்கர் கூறுகிறார். இங்கு சுத்தியல் அறையப்படுவதற்கு அதை ஓங்கி செலுத்துகிற அசைவிலிருந்து, அசைய வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து, தான் சுத்தியலால் அறைகிறோம் எனும் எண்ணம், அதனால் தான் சுத்தியலை அறைகிறவர் ஆகிறோம் எனும் பார்வை அவனுக்குள் தோன்றுகிறது, அவன் பார்க்கிறவனாகவும் பார்க்கப்படுகிறவனாகவும் ஆகிறான், இப்படி பல நிலைகள் அவனை சுத்தியலைக் கொண்டு அறையச் செய்கின்றன. ஆனால் அதனாலே சுத்தியலை எடுத்து அறைகிற அந்த (செயலூக்க நிலை) அசைவானது அந்த செயலை தானாக நிகழ்த்துவதில்லை. அவனுக்கு உடம்பில் அதற்கான வலு இருக்க வேண்டும், அது இருந்தாலும் அந்த சூழல் அதற்கு சாதகமாக இருக்க வேண்டும், அங்கு சுவர் இருக்க வேண்டும், சுவர் ஆணியால் அறையப்பட தோதாக இருக்க வேண்டும் ... இப்படி பல நிலைகள் இந்த நிலைகளுக்கு பின்னுன்று செலுத்துவதைப் பார்க்கிறோம்

அடுத்து இங்கு காலம் குறித்த ஒரு சிக்கல் வருவதையும் நாகார்ஜுனர் உணர்த்துகிறார். சுத்தியலால் அறைய வேண்டும் எனும் நோக்கம் அது ஏற்படும் முன்பு என்னவாக இருக்கிறது? சுத்தியலை வீசும் அசைவாகிய அந்த செயலூக்க நிலை அதற்கு முன்பு என்னவாக இருக்கிறது? இப்போது அது நிலை என்றால் அப்போது அது -நிலையா என நாகார்ஜுனர் கிண்டலாக வினவுகிறார். ஏனென்றால் ஒன்றைக்கொண்டு அதை சாராம்சமான நிலையாக நாம் கட்டமைக்கும் போது அது காலத்தில் முன்னோ பின்னோ மற்றொன்றாக இருக்கையில் அது -நிலையாகவே இருந்தாக வேண்டும். ஆனால் ஒன்று சாராம்சமற்று ஒன்றை தோற்றுவிக்கும் போது மட்டுமே நிலையாக இருக்கிறது என நாம் சொல்லும் போது இச்சிக்கலோ அபத்தமோ ஏற்படுவதில்லை

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...