Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மோடி எதிர்ப்பலை எனும் மாயை



இந்த பாஜக எதிர்ப்பலை மாயையைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இடமே இல்லாத போது எப்படி எதிர்ப்பலை வர முடியும் என்பதே என் கேள்வி. தமிழக மக்கள் தம்மை இந்திய தேசியத்துக்கு எதிராக கற்பிக்க சில சூழ்நிலைகளில் மட்டும் தான் முடியும் - முன்பு இந்தி எதிர்ப்பு, பின்னர் ஜல்லிக்கட்டு, இடையே நீட் எதிர்ப்பு. ஆனால் நிரந்தரமாக அது இங்கிருந்ததில்லை, ஏனென்றால் அதற்கான அவசியம் தமிழர்களுக்கு இல்லை. அவர்கள் தம்மை தம்மளவில் ஒரு தேசிய இனமாக கருதுகிறார்கள். மேலும், தமிழர்கள் தமது இருப்புக்கு மத்திய அரசால் நிரந்தர ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நம்புவதில்லை. அப்படி ஒரு கசப்பு இருந்தாலும் ஆளும் மத்திய அரசை எதிர்க்கும் நோக்கில் மட்டுமே மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளது இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளதா? சரி அப்படியே வாக்களித்தாலும் பாஜகவின் நிரந்தர எதிரிகளான கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை? ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகமாய் தோல்வியடைந்தார்கள்? அவர்களை விட வெளிப்படையாக யார் பாஜகவை எதிர்க்கிறார்கள்? இது அடிப்படையில் ஒரு மாயை


யாரோ இப்படி ஒரு எதிர்ப்பலை இருப்பதாக தில்லி பாஜகவுக்கு நம்ப வைத்து விட்டார்கள். அவர்களுடைய ஈகோவை இது தடவி விடுவதாலோ என்னவோ வில்லனாக தம்மை கற்பித்து அடுத்தடுத்த காய்களை நகர்த்த தொடங்கி விட்டார்கள். அமமுக வாக்குகள் பாஜக எதிர்ப்பு வாக்குகள் எனச் சொல்லி அதிமுக-அமமுக இணைப்பை தடுத்தார்கள். அடுத்து, சவுக்கு சங்கரில் இருந்து சீமான் வரை பாஜக-திமுக ரகசிய கூட்டணி என பேசுகிறார்கள். இதுவும்பாஜக எதிர்ப்பலையைதிமுக பயன்படுத்தக் கூடாது எனும் நோக்கில் தான். பழைய 2-ஜி வழக்கை பாஜக திரும்ப எடுக்கிறது என்பது முதல் ஸ்டாலின் வேலை வைத்திருந்த புகைப்படம் வரை இதற்கு ஆதாரமாகக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் ஒரு ஆதாரமாடா? நாளை காங்கிரஸுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை எடுத்து வைத்து பாஜகவும் காங்கிரஸும் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளது என சொல்லலாமே. ராகுல் ஒரு கோயிலுக்குப் போனதைக் காட்டி ராகுல் ஆர்.எஸ்.ஸின் பிடியில் உள்ளதாய் கொதிக்கலாமே. பைத்தியங்கள் மட்டுமே இதையெல்லாம் நம்புவார்கள்.


 என்னைப் பொறுத்தமட்டில் இந்த அவசரகதி குற்றச்சாட்டுகளே இவர்களை அம்பலப்படுத்தி விடுகின்றன. மேலும் அரசியலில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதால் மக்களும் அதைக் கணக்கில் கொண்டே வாக்களிக்கப் போகிறார்கள். நாளை ஒருவேளை பாஜகவுடன் திமுக இணங்குவதாகத் தெரிந்தால் முற்போக்காளர்கள் மட்டுமே ஏமாற்றமடைவார்கள், ஒட்டுமொத்த ஜனங்களும் அல்ல. தமிழகத்துக்கு இது ஒரு பிரச்சனையே அல்ல. (ஏன் என வரும் பத்திக்கு அடுத்த பத்தியில் சொல்கிறேன்) வரும் போது பார்த்துக் கொள்கிறோம். இப்பவே ஏன் நரம்பு புடைக்க கதறுகிறீர்கள் நீங்கள்?


இப்போதைக்கு அதிமுகவுக்கு நான்கே பிரச்சனைகள் தாம்.


தமிழக அரசியலில் தலைவர்களை மையமிட்டுத் தான் இயக்கங்கள் தோன்றுகின்றன. அதிமுகவின் முதல் பிரச்சனை அதற்கு ஒரு உறுதியான நிலையான தலைமை இல்லாதது


அடுத்த பிரச்சனை அடுத்த முறை ஆட்சிக்கு வர மாட்டோம் எனும் ஆவேசத்தில், அவநம்பிக்கையில் கட்டுப்பாடின்றி ஊழல் செய்து பணத்தை அவர்கள் வெளிப்படையாகவே குவிப்பது.


 மூன்றாவதாக, அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆள்வதால் இயல்பாகவே தோன்றுகிற அதிகாரக் களைப்பு, அதிகாரம் நோக்கிய அலுப்புணர்வு (anti-incumbency).


 நான்காவதாக, அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜக அதை உடைக்க, பலவீனப்படுத்த தொடர்ந்து முயல்வது.


மற்றபடி என்னதான் பாஜகவால் வழிநடத்தப்பட்டாலும் எடப்பாடி அரசு தன்னை முழுமையாக தமிழக விரோத அரசாக காட்சிக் கொள்ளவில்லை. வேல் யாத்திரையை அது கையாண்ட விதம் ஒரு உதாரணம். அண்மையில் கர்நாடகாவில் நடந்த மதரீதியான மோதல்கள், மாட்டுக்கறி தடை போன்றவை, .பியில் அரங்கேறுகிற அப்பட்டமான மதவாத சட்டங்கள், மாற்றங்கள் இங்கு நிகழ்ந்தனவா? இல்லையே. என்னதான் இது பினாமி ஆட்சியென்றாலும், ஓரளவுக்கு மேல் (நீட், புதிய கல்வித்திட்டம், சி.., வேளாண் சட்டங்கள் போன்ற விசயங்களில்ல்) தமிழக நலனுக்காக நிற்க இந்த அரசால் முடியவில்லை என்றாலும், இது இன்றும் அதிமுக ஆட்சியே, பாஜக ஆட்சி அல்ல.

இந்த காரணங்களால் தான் இத்தேர்தலில் பாஜக vs திமுக என்றொரு எதிரிணை இல்லை என்கிறேன். எப்போதுமே இக்களம் அதிமுக vs திமுக என்றே இருக்கும். இதை எடுத்து சொல்லும் முதுகெலும்பு நம் ஊடகங்களுக்கு இல்லை என்பதே அவலம்!  

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...