Skip to main content

Posts

Showing posts from March, 2022

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நம்பியார்

நம்பியாரின் உடல்மொழியும் குரலும் மிகிக்றி கலைஞர்களால் அவ்வப்போது பகடி செய்யப்படுவது . ஏனென்றால் அது தனித்துவமானது .  தனது பாணியை திரும்பத் திரும்ப போலச்செய்து தேய்வழக்காக்கினார் . அதே நேரம் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை அவரது கறுப்பு காலத்துப் படங்களில் இருந்து “ ஜெண்டில்மேன் ” வரை கவனிக்கையில் புரிகிறது . எம் . ஜி . ஆர் தனது “ நான் ஏன் பிறந்தேன் ?” நூலின் இரண்டாம் பாகத்தில் நம்பியார் பற்றி சில சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்து கொள்கிறார் . அவற்றில் இரண்டு அவதானிப்புகள் முக்கியமானவை . நம்பியார் நாடக மேடையிலோ , படக்காட்சியிலோ ஒரு பாத்திரத்தைத் திரும்பி நோக்கும் போது கழுத்தை மட்டும் திருப்புவதில்லை , மொத்த உடலையும் இடுப்பில் இருந்து திருப்பிப் பார்ப்பார் . இது வேறு நடிகர்கள் செய்யாதது என்பதுடன் இது அவரது பாத்திரத்தின் தீமையான இயல்பை சித்தரிக்க உதவியது என்கிறார் . இது ஏன் என்று யோசித்தேன் . எவ்வளவு யோசித்தும் புரியவில்லை . ஆனால் எம் . ஜி . ஆர் சொல்வதில் உண்மையும் உண்டு தான் . இன்று காலையில் என்னுடைய ...

சல்யூட்

  ரோஷன் ஆண்டிரூஸின் “ மும்பைப் போலீஸ் ” எனக்குப் பிடிக்கும் . குறிப்பாக அதன் கிளைமேக்ஸை அமைத்திருந்த விதம் . ரோஷன் ஆண்டிரூஸுக்கு ஒரு புலனாய்வாளனின் பிறழ்வு , அதனால் அவன் செய்யும் குற்றம் , அதனால் அவனுக்குள் நேரும் உள்போராட்டம் என்பதைப் பேச விருப்பம் அதிகம் என நினைக்கிறேன் . அண்மையில் வந்துள்ள “ சல்யூட்டும் ” அப்படியானதே . போலீஸார் தாம் சரி என நம்பும் ஒன்றுக்காகவும் , அரசியல் அழுத்தத்துக்காகவும் ஆதாரங்களை ‘ விதைத்து ’ ஒருவரைக் குற்றவாளி ஆக்குவதே கதைக்களம் . இந்த குழுவில் ஒரு இளம் அதிகாரி , நியாய தர்மத்தை நம்புகிறவர் இருக்கிறார் ( துல்கர் சல்மான் ), அவருக்கும் சக போலிஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படும் மோதலே படம் . கூடவே “ தங்கப் பதக்கம் ” பாணியில் குடும்பத்துக்கும் லட்சியத்துக்குமான உணர்ச்சி மோதலும் ( அப்பா vs மகனுக்குப் பதில் தம்பி vs அண்ணன் ) வருகிறது . இது கதையை சிக்கலாக்குகிறது ; நல்ல டிராமாவுக்கு வழிவகுக்கிறது . உண்மை நிலைநாட்டப்படுகிறதா இல்லையா என்பதை ஒரு திரில்லர் பாணியில் பரபரப்பாக இறுதிக் காட்சி வரை கொண்...

ஒருநாள் மாறும்

  நீங்கள் வேலையில்லாமல் இருக்கலாம் , தொடர் தோல்விகளால் துவண்டிருக்கலாம் , ஒரு மோசமான உறவில் மாட்டிக் கொண்டிருக்கலாம் , முதுமையின் கடலை எப்படி நீந்திக் கடப்பது என தெரியாமல் தவிக்கலாம் , அல்லது இப்போது நான் அனுபவிப்பதைப் போல நீதிமன்ற வழக்கொன்றில் சிக்கி வருடக்கணக்காக அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம் . எப்படியாயினும் நமக்கெல்லாம் ஒரே ஆறுதல் துன்பம் சூழ்நிலைகளிலிருந்தே வருகிறது , நம்மிலோ பிறரிலோ இருந்தல்ல என்பது . ஒரு ஸ்விட்சைப் போட்டது போல சூழல் ஒரு நாள் மாறும் , அன்று வெளிச்சம் எங்கும் நிறையும் , மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும் . அதுவரை அமைதியாக சகித்துக் கொள்வதே நம்மிடம் உள்ள சிறந்த தீர்வு . அதே நேரம் அநீதி நடந்தால் பொறுக்காமல் எதிர்த்துப் போராடுவதும் அவசியம் . ஆனால் ஒரு போது நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என பிடிவாதமாக நம்புதல் கூடாது . அது நம்மை கடுமையான அழுத்தத்துக்குள் தள்ளி விடும் . காலம் தானே கனியட்டும் என பொறுமை காத்திடல் வேண்டும் . புரூஸ் லீ மூங்கில் மரங்களைப் ...

ஒரு விருப்பம்

உலகில் நான் கடுமையாக வெறுக்கக் கூடியது மோசமான வேலையோ , காதல் முறிவோ , வியாதியோ , மரணமோ அல்ல . அது பயணம் .   ஏனென்றால் என்னிடம் கார் இல்லை . நான் சென்னைக்கோ அதைப் போன்ற பிற இடங்களுக்கோ பயணத்திற்கு பேருந்துகளையே நம்பி இருக்கிறேன் . ரயில் நிலையம் என் வீட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறது . அதில் டிக்கெட் எடுப்பதற்கும் நீண்ட   நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும் . அப்படியே கிடைத்து விட்டாலும் ரயில் நிலையத்தில் நிறைய சிரமப்படே என் வண்டி நிற்கும் இடத்திற்கு நான் போக முடியும் . அந்த வழியில் படிக்கடுகள் உள்ளிட்ட பல தடைகள் இருக்கும் . விமானம் என்றால் அதன் கட்டணத்திலே என் பாதி சம்பளம் போய் விடும் என்பதால் சாத்தியமில்லை .   இந்த பேருந்துகள் விசித்திரமாக அமைக்கப்பட்டவை - பெரிய உயரமான படிக்கட்டுகளைக் கொண்டவை . என்னால் ஒரு எட்டில் ஒரு படிக்கட்டில் ஏற முடியாது . நான் பெரும்பாலும் உட்கார்ந்து உட்கார்ந்து ஊர்ந்து தான் ஏற வேண்டும் . அதுவும் படிக்கட்டு முடிந்து பேருந்தின் உள்வாயில் இருக்கிறதே...