முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒருநாள் மாறும்

 

நீங்கள் வேலையில்லாமல் இருக்கலாம், தொடர் தோல்விகளால் துவண்டிருக்கலாம், ஒரு மோசமான உறவில் மாட்டிக் கொண்டிருக்கலாம், முதுமையின் கடலை எப்படி நீந்திக் கடப்பது என தெரியாமல் தவிக்கலாம், அல்லது இப்போது நான் அனுபவிப்பதைப் போல நீதிமன்ற வழக்கொன்றில் சிக்கி வருடக்கணக்காக அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். எப்படியாயினும் நமக்கெல்லாம் ஒரே ஆறுதல் துன்பம் சூழ்நிலைகளிலிருந்தே வருகிறது, நம்மிலோ பிறரிலோ இருந்தல்ல என்பது. ஒரு ஸ்விட்சைப் போட்டது போல சூழல் ஒரு நாள் மாறும், அன்று வெளிச்சம் எங்கும் நிறையும், மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும். அதுவரை அமைதியாக சகித்துக் கொள்வதே நம்மிடம் உள்ள சிறந்த தீர்வு. அதே நேரம் அநீதி நடந்தால் பொறுக்காமல் எதிர்த்துப் போராடுவதும் அவசியம். ஆனால் ஒரு போது நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என பிடிவாதமாக நம்புதல் கூடாது. அது நம்மை கடுமையான அழுத்தத்துக்குள் தள்ளி விடும். காலம் தானே கனியட்டும் என பொறுமை காத்திடல் வேண்டும். புரூஸ் லீ மூங்கில் மரங்களைப் பற்றி சொல்லுவார் - “எவ்வளவு பெரும் புயல் வீசினாலும் அதை எதிர்த்து நிற்கும் மரங்கள் உடைந்து விடும், வேரோடு பிடுங்கி வீசப்படும், ஆனால் மூங்கிலோ வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்ளும். மனிதன் தேவையான போது மூங்கிலைப் போல இருக்க வேண்டும்.” நம்பிக்கை என்பது நம்மால் முடியும் என்பதல்ல, பெரும்பாலான நேரங்களில் நம்மால் எதுவும் முடிவதில்லை. நம்பிக்கை என்பது நம்மால் தாங்கிக் கொள்ள முடியும் என்பதே.


இதற்கு விதிவிலக்கு நோய் உள்ளிட்ட உடற் பிரச்சனைகள் மட்டுமே. அவற்றை நாமே முயன்று சரி செய்ய வேண்டும்


மாற்றம் என்பது நாம் மாறுவதல்ல, மாற்றம் என்பது காலம் மாறுகையில் அதனோடு சூழலும் மாறுவதே. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் அந்த மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தகவமைப்பது மட்டுமே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...