Skip to main content

சல்யூட்

 





ரோஷன் ஆண்டிரூஸின்மும்பைப் போலீஸ்எனக்குப் பிடிக்கும். குறிப்பாக அதன் கிளைமேக்ஸை அமைத்திருந்த விதம். ரோஷன் ஆண்டிரூஸுக்கு ஒரு புலனாய்வாளனின் பிறழ்வு, அதனால் அவன் செய்யும் குற்றம், அதனால் அவனுக்குள் நேரும் உள்போராட்டம் என்பதைப் பேச விருப்பம் அதிகம் என நினைக்கிறேன். அண்மையில் வந்துள்ளசல்யூட்டும்அப்படியானதே. போலீஸார் தாம் சரி என நம்பும் ஒன்றுக்காகவும், அரசியல் அழுத்தத்துக்காகவும் ஆதாரங்களைவிதைத்துஒருவரைக் குற்றவாளி ஆக்குவதே கதைக்களம். இந்த குழுவில் ஒரு இளம் அதிகாரி, நியாய தர்மத்தை நம்புகிறவர் இருக்கிறார் (துல்கர் சல்மான்), அவருக்கும் சக போலிஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படும் மோதலே படம். கூடவேதங்கப் பதக்கம்பாணியில் குடும்பத்துக்கும் லட்சியத்துக்குமான உணர்ச்சி மோதலும் (அப்பா vs மகனுக்குப் பதில் தம்பி vs அண்ணன்) வருகிறது. இது கதையை சிக்கலாக்குகிறது; நல்ல டிராமாவுக்கு வழிவகுக்கிறது. உண்மை நிலைநாட்டப்படுகிறதா இல்லையா என்பதை ஒரு திரில்லர் பாணியில் பரபரப்பாக இறுதிக் காட்சி வரை கொண்டு செல்கிறார்கள். இது வெகுவாக மெச்சத்தக்கது. ஆனால் படம் இறுதியில் அதிருப்தியளிக்கிறது. இரு தவறுகள் அதற்குக் காரணம்:


  1. யார் ஹீரோ, யார் வில்லன் என்பது இது போன்ற கதைகளில் தெளிவாக இருக்க வேண்டும். நாயகனை ஒரு துன்பியல் நாயகனாகக் கட்டமைத்தால் அவன் தன் பிழைகளால் சீரழிந்து மனம் அவதிப்பட்டு குற்றவுணர்வு கொண்டு அழிவதாகவோ தண்டனை பெறுவதாகவோ அமைக்க வேண்டும். அல்லது அவன் நல்லவனாகவே இருக்க வேண்டும். இப்படத்தில் துல்கரின் பாத்திரம் இரண்டும் கெட்டானாக இருக்கிறது. அது நம்மை அவரிடத்து அன்பும் இரக்கமும் கொள்வதைத் தடுக்கிறது. (ஆனால்மும்பை போலீஸில்இப்பிரச்சனை இல்லை.) ஒருவேளை அந்த அண்ணனின் பாத்திரத்தைக் கொண்டு வராமல் விட்டிருந்தால், நாயகனே பழியை ஏற்று அதனுடன் மோதி மெல்ல மெல்ல மீண்டும் வந்து நீதியை நிலைநாட்டுவதாக கதை அதன் பாட்டுக்கு ஒரு ஒழுங்கைப் பெற்றிருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் துல்கரின் ஆல்டர் ஈகோவாக அவரது அண்ணனைப் படைத்து, அண்ணனைத் தீமையில் இருந்து காப்பற்ற முயன்று துல்கர் இறுதியில் அவரை பலிகொடுப்பதாகக் கொண்டு வந்திருக்கலாம். இந்த பாணியை மிஷ்கின்அஞ்சாதேவில்சரியாகக் கையாண்டிருப்பார். ரோஷன் ஆண்டிரூஸுக்கு இதை ஏன் யாரும் கதை விவாதத்தின் போது எடுத்துச் செல்லவில்லை
  2. ஒரு குற்றப்புலனாய்வு கதையின் முடிவில் பார்வையாளர்களுக்குத் திருப்தியளிக்கும் ஒரு விழுமியம், புரிதல் (சினிமா மொழியில்மெஸேக்’) வேண்டும். இதில்லாத படம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மீண்டும் மிஷ்கினுக்கே வருகிறேன் - அவரதுயுத்தம் செய்யின்மையம் கண்காணிப்பின் அதிகாரம் மனிதர்களிடையே எப்படி தீமையை உண்டு பண்ணுகிறது என்பதே. படம் முடியும் போது ஒவ்வொரு மனித உடலாக மீட்கப்படுகிறது. அதன் நீதியே படத்தின் விழுமியம். அகிர குரசாவோவின் Stray Dog படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஶ்ரீகணேஷின்எட்டுத் தோட்டாக்களும்ஒரு நல்ல உதாரணம். அமைப்பின் மீது இரு தரப்பான ஆட்கள் கோபம் கொள்ளுகிறார்கள். ஒருவர் (வில்லன்) வன்முறையாக, அபத்தமாக எதிர்வினையாற்ற மற்றொருவரோ (ஹீரோ) அமைப்பு கோரும் ஒழுக்கத்துடன் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும், பொறுமை வேண்டும் எனக் கோருகிறார் (பேட்மேன் vs ஜோக்கர் பாணியில்). இதுஎட்டுத்தோட்டாக்கள்என்றால்ஸ்டிரே டாக்ஒரு இருத்தலிய கோணத்தில் மனிதனின் தேர்வுகளை அலசுகிறது. எந்த முடிவும் சரியே எனும் இடத்தில் இருக்கிறவரிடம் போலீஸின் துப்பாக்கி மாட்டினால் என்னவாகும் என்பதே ஒற்றை வரி. அது எந்த துப்பாக்கியானாலும் அதே கதை தான், ஆனால் போலீஸ் என்பதால் அது துப்பறியும் கோணத்தைப் பெறுகிறது. படத்தின் முடிவில் குரசாவோ கடைசி வரை நாம் எடுக்கும் முடிவுகளை உறுதியாக நம்பி அதனை சார்ந்து போராடுவதே நம் வாழ்வுக்கு அர்த்தமளிக்கிறது என்கிறார். இது அப்படத்தை சுவாரஸ்யமாகவும் அர்த்தம் பொருந்தியதாகவும் ஆகிறது. இன்று திரில்லர் படமெடுக்கும் பலர் இந்தஅர்த்தத்தைத்தான் தவற விடுகிறார்கள். ரோஷன் ஆண்டிரூஸும் இதே பிழையை செய்திருக்கிறார். படம் முடியும் போது பரிசு வெல்லாத லாட்டரி சீட்டை வாங்கிய உணர்வே நமக்குக் கிடைக்கிறது

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...