Skip to main content

Posts

Showing posts from April, 2022

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எழுத்தாளனை காதலிப்பது

ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன்.  இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன.  எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருடங்களில் அவனது படைப்புகளை பொருட்படுத்த மாட்டார்கள், ஆனால் பேச்சை, நடவடிக்கைகளை, ஆளுமையை மட்டும் ரசிப்பார்கள். அப்படியே நகர்ந்து நகர்ந்து அவன் வெறும் ஆணாகவும் அவள் வெறும் பெண்ணாகவும் எஞ்சுவார்கள் என நினைக்கிறேன். (விதிவிலக்குகளும் உண்டு.) இதில் கவிஞர்கள் ஒரு தனிவகை - ஓரளவுக்கு சமூகமாக்கல் செய்பவர்கள் எனில் வருடத்திற்கு சில காதல்களாவது வெற்றிகரமாக அவர்களுக்கு நிகழும். ஒரு கவிஞருக்கு மாதம் சில...

ஜெ.மோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

ஒரு வாசகன் என்பதை விட அதிகமாக சகஎழுத்தாளனாகவே இவ்வாழ்த்தை தெரிவிக்க விரும்புகிறேன். ஜெயமோகனிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு - சம்பாதிக்கும் வேலையில் ஒரு படைப்பாளி தன்னை தொலைத்து விடாமல் இருப்பது, பல சிக்கல்கள் கொண்ட கொந்தளிக்கும் மனத்தைக் கொண்டிருந்தாலும் அதை எழுத்தில் உலவ விட முடிந்தாலும் எழுத்தாளனாக நீடிக்க அம்மனத்தை கட்டுக்குள் வைத்திருப்பது, அதற்காக அன்றாட வாழ்க்கையை ஒரு ஒழுக்கத்துக்குள் வைத்திருப்பது, இலக்கியத்தில் நாம் நம்புவதை துணிந்து செயல்படுத்துவது, எதையும் மறைக்காமல் பேசுவது, ஒரு பிரதியை சிறப்பாகக் கொண்டு வர கடுமையாக உழைப்பது என... ஜெ.மோவிடம் உள்ள இன்னொரு பாராட்ட்டத்தக்க இயல்பு தன்னை ஏற்காத படைப்பாளிக்கும் துன்பம் வரும் போத உதவ முன்வருதல். அதையும் நாம் பின்பற்ற வேண்டும். ஜெயமோகனின் சீடர்கள் அவரை பிரதியெடுக்காமல் மேற்சொன்ன இயல்பை பின்பற்றி இருந்தால் அவருடன் முரண்பட்டு மற்றொரு இடத்துக்கு சென்றிருப்பார்கள். துரதிஷ்டவடமாக அது நடக்கவில்லை. ஒருவரை நாம் நேசிப்பதை விட அவரை சரியாகப் பின்பற்றுவது முக்கியம். அதனால் ஜெமோவை சதா பழிக்காமல் அவரிடம் இருந்து எழுத்து வாழ்வை...

வெட்கமாக இல்லையா?

இளையராஜாவுக்கு எதிராகப் பேசுவோரின் கோபத்தை நான் புரிந்து கொள்கிறேன் . அதே நேரம் ரஜினியும் கமலும் ஓட்டுபிரிக்கும் அரசியலில் கடந்த ஆண்டு முழுக்க ஈடுபட்ட போது , பாஜகவின் நேரடி , மறைமுக பிரச்சார படைகளாக அவர்கள் செயல்பட்ட போது அவர்களும் விமர்சிக்கப்பட்டார்கள் , ஆனால் எந்த பத்திரிகையாளரும் அரசியல்வாதியும் “ நீ ”, “ வா ”, “ போ ” என ஒருமையில் அவர்களை அழைத்து சாடவில்லை . ஆனால் இளையராஜா என்றதும் சவுக்கு சங்கர் , பத்திரிகையாளர் மணியில் இருந்து இ . வி . கி . எஸ் இளங்கோவன் வரை பொதுமேடை மாண்பின்றி அவரை ஒருமையில் அழைத்து ஏசுவதை எப்படி நாம் புரிந்து கொள்வது ? கேட்டால் “ தார்மீகக் கோபம் ”, “ இது தான் தமிழக மேடைக் கலாச்சாரம் ” என சமாளிக்க வேண்டியது ? நம்மிடையே எவ்வளவு சாக்கடைகள் ஓடுகின்றன என கண்டுகொண்ட தருணமாக இது அமைந்து விட்டது . இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது . மணியின் பேட்டி சற்று வேடிக்கையாகவே இருந்தது - “ மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவதற்கு இளையராஜாவுக்கு அத்தனை உரிமைகளும் உண்டு . ஆனால் அவரை கடுமையாக விமர்சிக...

இளையராஜாவின் அரசியல்

  இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதிய பாராட்டுரையைப் பார்த்து பேஸ்புக்கர்கள் பொங்கோ பொங்கென்று பொங்குவதைப் பார்த்தால் எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது . நாம் ஏன் கலைஞர்களை எப்போதும் சமூகத்தின் மனசாட்சியாகப் பார்க்கிறோம் ? நமது அரசியல் நம்பிக்கைகளுடன் அவர்கள் உடன்படவில்லை என்றால் மனம் உடைந்து போகிறோம் , கொந்தளிக்கிறோம் , சபிக்கிறோம் ? இந்த கலைஞர்கள் எப்போதாவது “ நான் உங்களுடைய சிந்தனைகளை வழிநடத்துகிறேன் , உங்கள் மனசாட்சியின் குரலாக இருக்கிறேன் ” என்று கோரியிருக்கிறார்களா ? இல்லையே . பின் எதற்கு ?  இன்னொரு கேள்வி : அவர்களுடைய அரசியல் தரப்பை வெளிப்படுத்தும் போது புண்படும் நாம் அதை அவர்கள் செய்யாத போது என்றாவது உங்கள் அரசியல் என்ன என்று கேட்டிருக்கிறோமா ? இல்லையே . சொல்லாமல் இருந்தால் சரி , சொன்னால் பிரச்சனையா ? தமிழில் , இந்திய மொழிகளில் மட்டுமல்ல , உலக அளவில் கூட பல கலைஞர்களின் அரசியல் நம்பிக்கைகளை , பண்பாட்டு அவதானிப்புகளை , தனிப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி படித்து நான் அதிர்ந்திருக்கிறேன் ....

காதல் - ஆர். அபிலாஷ்

காதல் ஒரு கிளர்ச்சியான பொய் அதில் உண்மையை தேடினால் காதல் மறைந்து விடும். காதல் ஒரு கொண்டாட்டமான நாடகம்  துவக்கம் முதல் கிளைமேக்ஸ் வரை  திட்டவட்டமான விதிமுறைகள் கொண்டது  இவ்விதிகளை ஏற்று விட்டால்  ஒரு மகத்தான காவிய உணர்வு  கிட்டும். காதலுக்கு உள்ளே வர  கதவு உள்ளதைப் போன்றே வெளியேறவும் உண்டு. அதை உணர்ந்து கொண்டால் மனம் புண்படாமல் இருக்கலாம். காதல் ஒரு வாடகை வீடு கிளம்பும் வரை,  பணம் தீரும் வரை  அது  நம் சொந்த வீடே தான் காதல் காலாவதி தேதி கொண்ட பண்டம்  அதை ஒருமுறை  மனதில் ஏற்றி விட்டால் அது காலாதீதமானது எனும்  உணர்வு ஏற்படும்.  காதலில் தன்னலம் முக்கியம் அப்போதே பேரன்பை, தியாகத்தை காட்ட இயலும். தன்னலமற்ற அன்பு காதலர்களை அச்சமூட்டும் ஒன்று. காதல் ஒரு வங்கி இருப்புத் தொகை அதற்கு ஏடிஎம் அட்டை, கடன் அட்டை, வட்டி எல்லாம் உண்டு வரவு செலவு கணக்கு உண்டு. எப்படி செலவழித்தே ஆக வேண்டும் எனும் கட்டாயம் கொண்டது பணமோ தீர்ந்தே ஆக வேண்டும் எனும் நிர்பந்தம் கொண்டது காதல். இரண்டுக்கும் நீங்கள் எங்காவது வேலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். வாழ்...

எழுத்தாளர்கள் ‘கௌரவிக்கப்படும்’ அவலம்

எனக்கு இந்த எழுத்தாளர் கௌரவிக்கப்படும் ஏற்பாட்டில் உடன்பாடில்லை . ஏன் என்று சொல்கிறேன் . முதலில் , நாம் ஒரு கூட்டத்தின் முன் அமர்ந்திருக்கிறோம் . யாரோ நம்மைப் பற்றி சில சொற்களைக் கூறுகிறார்கள் , பொன்னாடை அணிவிக்கிறார்கள் , நம்மையும் பேசச் சொல்கிறார்கள் , ஆனால் ஒரு பிரச்சனை நமக்கு முன் அமர்ந்திருக்கும் சில நூறு பேர்களுக்கு நீங்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்றே தெரியாது . இதைப் போன்ற ஒரு அவமானம் எங்காவது உண்டா ? இதற்கு நீங்கள் பேசாமல் உங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் .  இப்போது இன்னொரு சூழலை எண்ணிப் பாருங்கள் : ஆடி நிறுவனம் ஒரு புது காரை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகிறார்கள் . அதை உருவாக்கிய பொறியியலாளர்களின் தலைவர் வந்து மக்களிடம் அந்த காரைப் பற்றி பேச மாட்டார் . அது அவரது வேலை அல்ல . முதலில் அந்த கார் பற்றின விளம்பரங்கள் வரும் . அடுத்து அதைப் பற்றி சமூகவலைதளங்களில் பேசுவார்கள் . இறுதியாக மக்கள் அந்த காரைத் தேடி வாங்குவார்கள் . எந்த இடத்திலும் உருவாக்கியவரோ முதலீடு செய்தவரோ வந்து “ ஹி ஹி ந...