Skip to main content

Posts

Showing posts from September, 2025

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆவண அரசியல் 3

  நம்மூரில் தரப்படும் அடையாள அட்டைகளில் பெரும் வேடிக்கை பெயர் பதியப்படும் விதம். என் வாக்காளர் அட்டையில் முதற் பெயர், குடும்பப் பெயர் ஒட்டியிருக்கிறது, ஆதாரில் என் இனிஷியல் முன்னிலையில் இருந்தால் இன்னொரு அட்டையில் கடைசியில் இருக்கிறது. இதில் எந்த முறையையும் நம் அமைப்புகள் பின்பற்றுவதில்லை. கொடுப்பதை தோன்றினபடி பதிவு பண்ணி வைக்கிறார்கள். இவை ஒன்றுபோல இருக்காவிடில் பின்னர் நிராகரித்துவிடுகிறார்கள். MK Stalin என்பது Stalin MK என்றிருந்தால் என்ன தப்பு? அதனால் அவர் இன்னொருவர் ஆகிவிடுவாரா? ஆனால் நம்முர் ஆவணச் சரிபார்ப்பு மண்டைகளுக்கு இருவரும் ஒருவர் அல்லர். எல்லா அட்டைகளிலும் பெயரை ஒரே போல வரவழைத்தாலும் வேறு புதுப் பிரச்சினைகள் புற்றீசல் போல புறப்பட்டு வரும். நான் என் வருங்கால வைப்புநிதிக்காக ஆவணத்தை அளிக்கையில் ஆதாரமாக ஆதாரைக் கொடுத்தேன். அதில் மேற்சொன்ன காரணத்துக்காக என் பெயரை மாற்ற வேண்டி வந்தது - அதாவது இனிஷியலை முன்பிருந்து பின்பாக மாற்றினேன். ஆனால் இணையதளத்தைக் கட்டமைத்தவர்கள் மென்பொருளே தாமாகத் தேடி பெயர் மாற்றங்கள் இருப்பின் தடைசெய்யும்படி அமைத்திருக்கிறார்கள். எனக்கு இது ஆரம்பத்...

ஆவண அரசியல் 2

  கர்நாடக அரசு வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்காக ஒரு சட்ட வரைவைக் கொண்டு வரப்போகிறது. அதன்படி இனி பணியாளர்களை சுத்தம் பண்ணவும் சமைக்கவும் நியமிக்கிறவர்கள் கட்டாயமாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் நிபந்தனைகளை, எதிர்பார்ப்புகளைப் பதிவு பண்ண வேண்டும். வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். பயிற்சியளிக்க வேண்டும். அதன்பிறகுதான் வருகிறது பிரச்சினையே - வருங்கால வைப்புநிதியைப் போல ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். அதற்கு பணி அமர்த்துநர் ஒரு தொகையை (5%) வழங்க வேண்டும். அதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர் வழங்குவதை ஆவணப்படுத்தி அதை ஒரு படிவத்தில் நிரப்பி வருடத்திற்கு ஒருமுறை மொத்தமாகத் தாக்கல் பண்ண வேண்டும். அரசு இந்த அமர்த்துநரின் வருடாந்திர வரவு செலவுக்குள் இந்த பணம் செலுத்துதல் வருகிறதா எனச் சரிபார்க்கும். இல்லாவிட்டால் அபராதம் கட்ட வேண்டும். நோக்கத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு சிறந்த வரைவு. ஆனால் நடைமுறையில் இது பலருக்கும் சிக்கலாகும். வார விடுமுறையை பலரும் ஏற்கப் போவதில்லை. வார இறுதி நாட்களில்தான் வேலைகள் அதிகம் என்பதாலும் அப்போதுதான் அவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதாலும். அட...

ஆவண அரசியல் 1

உலகின் வேறெந்த வரலாற்றுக் கட்டத்திலும் இந்தளவுக்கு அதிகாரத்துவ நடைமுறைகள், அவை சார்ந்த ஆவணமாக்கல் நிகழ்ந்திருக்காது என நினைக்கிறேன் - அதிகாரத்துவ அமைப்புகள் தொடர்ந்து தாம் அளிக்கிற அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களையே சந்தேகம் கொண்டு மறுக்கிற அவலமும் நடக்கிறது, இது ஒரு பின்நவீனத்துவ தன்மை கொண்டது. நான் அன்று ஒரு பட்டியலைப் பார்த்தேன். அதில் எந்தெந்த ஆவணங்களை விண்ணப்பிக்கவும் புதுப்பிக்கவும் அரசு எவ்வகை ஆதாரங்களை ஏற்கும் எனப் போட்டிருந்தார்கள். அடையாள அட்டைக்கு ஏற்கப்படும் ஒன்று முகவரி ஆதாரத்துக்கு ஏற்கப்படாது, அதில் உள்ள ஒன்று இதில் இருக்காது. முக்கியமாக ஆதார் அட்டையையும் வாக்காளர் அடையாள அட்டையையும் பரவலாக ஏற்பதில்லை. இதைவிடக் கொடுமை வங்கி மேலாளர் கொடுக்கிற ஆவணத்தைக் கூட ஏற்கிறார்கள், ஆனால் அரசு தரும் அட்டையை மறுக்கிறார்கள். சில இடங்களில் எம்.பி., எம்.எல்லே, வார்ட் கவுன்சிலரின் கடிதத்தை ஏற்கிறார்கள், ஆனால் அவர்களில் சிலரோ இப்போதெல்லாம் அதிகாரிகள் தம் கடிதத்தையும் மறுப்பதாகக் கூறுகிறார்கள். இந்நிலைக்கு ஒரு காரணம் இந்த அட்டைகளை, ஆவணங்களை வழங்கும்போது அரசியல் தேவைக்காக செய்யப்படும் ஊழல், ...

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (எ)

  15) என் வாழ்க்கையின் ஆகக்கொடுமையான அனுபவங்களில் ஒன்று எனச் சொல்ல மாட்டேன் என்றாலும் அந்த இருட்டில் வண்டியோட்டியது கிலியான அனுபவம்தான் . சுந்தர் சியின் பேய்ப்படங்களைப் போல என் பீதியைக் காண எனக்கே சிரிப்பாகவும் வந்தது . அங்கங்கே கடைகளும் குடியிருப்பும் வருமிடங்களில் விளக்குகள் ஒளிரும் . மீண்டும் கடும் இருட்டு . என்னதான் சாலையின் ஒரு பக்கமாய் அமைக்கப்பட்டிருந்த பிரதிபலிக்கும் அம்பு முனைக் குறியீடுகள் வண்டியை வயலுக்குள்ளோ பாறைகளிலோ பாய்ச்சாமல் தப்பிக்க உதவினாலும் சில இடங்களில் எங்கே சாலை வளைகிறது , எங்கிருந்து வாகனங்கள் வருகின்றன என கணிக்க வேண்டியிருந்தது . பெங்களூர் வந்து பிரதான சாலையை அடையும்வரை ஏதோ முதலிரவில் விளக்கணைத்து நடக்கும் வன்முறை போலத்தான் வண்டியோட்டினேன் .  16) அவெஞ்சரில் ஒரு வினோதப் பிரச்சினை - ஷோரூமில் தந்த சாவி அடிக்கடி வளைந்தது . மாற்றுச் சாவியைச் செய்தால் அதுவும் வளைந்தது . ஒருவேளை பிரச்சினை என்னிடம்தான் இருக்க வேண்டும் . ஆனாலும் சாவி எப்படி வளையலாம் , பஜாஜ் கம்பெனியே நம்மை ...