முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆவண அரசியல் 1

உலகின் வேறெந்த வரலாற்றுக் கட்டத்திலும் இந்தளவுக்கு அதிகாரத்துவ நடைமுறைகள், அவை சார்ந்த ஆவணமாக்கல் நிகழ்ந்திருக்காது என நினைக்கிறேன் - அதிகாரத்துவ அமைப்புகள் தொடர்ந்து தாம் அளிக்கிற அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களையே சந்தேகம் கொண்டு மறுக்கிற அவலமும் நடக்கிறது, இது ஒரு பின்நவீனத்துவ தன்மை கொண்டது.
நான் அன்று ஒரு பட்டியலைப் பார்த்தேன். அதில் எந்தெந்த ஆவணங்களை விண்ணப்பிக்கவும் புதுப்பிக்கவும் அரசு எவ்வகை ஆதாரங்களை ஏற்கும் எனப் போட்டிருந்தார்கள். அடையாள அட்டைக்கு ஏற்கப்படும் ஒன்று முகவரி ஆதாரத்துக்கு ஏற்கப்படாது, அதில் உள்ள ஒன்று இதில் இருக்காது. முக்கியமாக ஆதார் அட்டையையும் வாக்காளர் அடையாள அட்டையையும் பரவலாக ஏற்பதில்லை. இதைவிடக் கொடுமை வங்கி மேலாளர் கொடுக்கிற ஆவணத்தைக் கூட ஏற்கிறார்கள், ஆனால் அரசு தரும் அட்டையை மறுக்கிறார்கள். சில இடங்களில் எம்.பி., எம்.எல்லே, வார்ட் கவுன்சிலரின் கடிதத்தை ஏற்கிறார்கள், ஆனால் அவர்களில் சிலரோ இப்போதெல்லாம் அதிகாரிகள் தம் கடிதத்தையும் மறுப்பதாகக் கூறுகிறார்கள். இந்நிலைக்கு ஒரு காரணம் இந்த அட்டைகளை, ஆவணங்களை வழங்கும்போது அரசியல் தேவைக்காக செய்யப்படும் ஊழல், பின்பற்றப்படும் முறையட்ட நடைமுறைகள். அதாவது ஆளுங்கட்சி ஒரு நோக்கத்துக்காக இதைக் கொண்டு வந்து பின்னர் அரசியலுக்காக, வாக்குகளுக்கு இதை முறையற்று வழங்கி இதன் செல்லுபடியாகும் தன்மையையே ஒழிக்கிறார்கள். மக்கள் தாம் இருக்கிறோமா இல்லையா எனும் பதற்றத்தில் இருப்பதை ஒருவிதத்தில் அதிகாரம் விரும்புகிறது. அப்போதே அவர்களைத் தம் விருப்பப்படி வளைக்க முடியும். பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அழிக்கவும் சேர்க்கவும் முடியும். யாரும் அரசை எதிர்க்க முடியாது. ஒரு மாநிலத்தின் அசலான குடிமக்களின் ஆவணங்கள் போலி ஆவணங்களால் மதிப்பிழக்கும்போது அந்த மக்கள் உண்மையில் தமக்கு அதிகாரம் உண்டா, இடமுண்டா எனக் குழம்புகிறார்கள். இருக்கும்போதே வெளியேற்றப்படுகிறார்கள். அதாவது வாழும் காலத்திலேயே அவர்கள் 'மிதக்கும் சமூகமாகிறார்கள்'.
இது ஏன் நடக்கிறது என்பதற்கு என் பார்வை இதுதான்: நாம் பரஸ்பரம் நம்பிக்கை இழக்கிறோம், ஒரு சமூகமாக உதிரிகளாக உடைகிறோம். அப்போது ஒவ்வொருவரும் மோசடிக்காரரே எனும் எண்ணம் வலுக்கிறது. இதுவே அரசின் தளத்தில், அதிகாரத்துவ மட்டத்தில், ஆவணங்களை வழங்கியும் மறுத்தும் நம்மைக் கட்டுப்படுத்துகிற அரசியலாகிறது. முன்பு சேவை வழங்குகிற, வரி வசூலிக்கிற அமைப்பாக இருந்த அரசு இன்று அதிகாரத்துவ நடைமுறை அரசாகிறது, ஆவணங்களை வழங்குகிற அரசாகிறது. ஆவணங்களை நிராகரிக்கிற அரசாகிறது. ஒப்பந்தங்களைச் சாத்தியமாக்குகிற, உருவாக்குகிற, மத்தியஸ்தம் பண்ணுகிற அரசாகிறது. அரசு மெல்லமெல்ல தம் குடிமக்கள் மீதே நம்பிக்கை இழக்கும்போது யார் வாக்களிக்கலாம், கூடாது என்பதில் குழப்பத்தைக் கொண்டு வருகிறது. அது யாருக்கெல்லாம் நலத்திட்டங்கள் போய்ச் சேர வேண்டும், யாருக்கு கூடாது எனத் தீர்மானிக்கிறது. தாம் எல்லாருக்குமான அரசு அல்ல என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீ இத்தேசத்தின் குடிமகனா என்று உரத்து பலவிதங்களில் கேட்டபடியே இருக்கிறது. இன்று அயல்நாடுகளிலும் குடியேறிகளுக்குள்ள சிக்கல் இதுதான்.
இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது. பரஸ்பரம் வெறுக்காமலும் சந்தேகிக்காமலும் சேர்ந்திருப்பது, துணையிருப்பது, அடையாளங்களுக்கு அப்பால் இணைவது, காலத்தையும் வெளியையும் அரசியலுக்கு அப்பால் நம்பி உறவாடுவது. மக்கள் இப்படித்தான் ஆவணங்களின் ஐயப்பாடுகளுக்கு வெளியே உயிர்த்திருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...