முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆவண அரசியல் 1

உலகின் வேறெந்த வரலாற்றுக் கட்டத்திலும் இந்தளவுக்கு அதிகாரத்துவ நடைமுறைகள், அவை சார்ந்த ஆவணமாக்கல் நிகழ்ந்திருக்காது என நினைக்கிறேன் - அதிகாரத்துவ அமைப்புகள் தொடர்ந்து தாம் அளிக்கிற அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களையே சந்தேகம் கொண்டு மறுக்கிற அவலமும் நடக்கிறது, இது ஒரு பின்நவீனத்துவ தன்மை கொண்டது.
நான் அன்று ஒரு பட்டியலைப் பார்த்தேன். அதில் எந்தெந்த ஆவணங்களை விண்ணப்பிக்கவும் புதுப்பிக்கவும் அரசு எவ்வகை ஆதாரங்களை ஏற்கும் எனப் போட்டிருந்தார்கள். அடையாள அட்டைக்கு ஏற்கப்படும் ஒன்று முகவரி ஆதாரத்துக்கு ஏற்கப்படாது, அதில் உள்ள ஒன்று இதில் இருக்காது. முக்கியமாக ஆதார் அட்டையையும் வாக்காளர் அடையாள அட்டையையும் பரவலாக ஏற்பதில்லை. இதைவிடக் கொடுமை வங்கி மேலாளர் கொடுக்கிற ஆவணத்தைக் கூட ஏற்கிறார்கள், ஆனால் அரசு தரும் அட்டையை மறுக்கிறார்கள். சில இடங்களில் எம்.பி., எம்.எல்லே, வார்ட் கவுன்சிலரின் கடிதத்தை ஏற்கிறார்கள், ஆனால் அவர்களில் சிலரோ இப்போதெல்லாம் அதிகாரிகள் தம் கடிதத்தையும் மறுப்பதாகக் கூறுகிறார்கள். இந்நிலைக்கு ஒரு காரணம் இந்த அட்டைகளை, ஆவணங்களை வழங்கும்போது அரசியல் தேவைக்காக செய்யப்படும் ஊழல், பின்பற்றப்படும் முறையட்ட நடைமுறைகள். அதாவது ஆளுங்கட்சி ஒரு நோக்கத்துக்காக இதைக் கொண்டு வந்து பின்னர் அரசியலுக்காக, வாக்குகளுக்கு இதை முறையற்று வழங்கி இதன் செல்லுபடியாகும் தன்மையையே ஒழிக்கிறார்கள். மக்கள் தாம் இருக்கிறோமா இல்லையா எனும் பதற்றத்தில் இருப்பதை ஒருவிதத்தில் அதிகாரம் விரும்புகிறது. அப்போதே அவர்களைத் தம் விருப்பப்படி வளைக்க முடியும். பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அழிக்கவும் சேர்க்கவும் முடியும். யாரும் அரசை எதிர்க்க முடியாது. ஒரு மாநிலத்தின் அசலான குடிமக்களின் ஆவணங்கள் போலி ஆவணங்களால் மதிப்பிழக்கும்போது அந்த மக்கள் உண்மையில் தமக்கு அதிகாரம் உண்டா, இடமுண்டா எனக் குழம்புகிறார்கள். இருக்கும்போதே வெளியேற்றப்படுகிறார்கள். அதாவது வாழும் காலத்திலேயே அவர்கள் 'மிதக்கும் சமூகமாகிறார்கள்'.
இது ஏன் நடக்கிறது என்பதற்கு என் பார்வை இதுதான்: நாம் பரஸ்பரம் நம்பிக்கை இழக்கிறோம், ஒரு சமூகமாக உதிரிகளாக உடைகிறோம். அப்போது ஒவ்வொருவரும் மோசடிக்காரரே எனும் எண்ணம் வலுக்கிறது. இதுவே அரசின் தளத்தில், அதிகாரத்துவ மட்டத்தில், ஆவணங்களை வழங்கியும் மறுத்தும் நம்மைக் கட்டுப்படுத்துகிற அரசியலாகிறது. முன்பு சேவை வழங்குகிற, வரி வசூலிக்கிற அமைப்பாக இருந்த அரசு இன்று அதிகாரத்துவ நடைமுறை அரசாகிறது, ஆவணங்களை வழங்குகிற அரசாகிறது. ஆவணங்களை நிராகரிக்கிற அரசாகிறது. ஒப்பந்தங்களைச் சாத்தியமாக்குகிற, உருவாக்குகிற, மத்தியஸ்தம் பண்ணுகிற அரசாகிறது. அரசு மெல்லமெல்ல தம் குடிமக்கள் மீதே நம்பிக்கை இழக்கும்போது யார் வாக்களிக்கலாம், கூடாது என்பதில் குழப்பத்தைக் கொண்டு வருகிறது. அது யாருக்கெல்லாம் நலத்திட்டங்கள் போய்ச் சேர வேண்டும், யாருக்கு கூடாது எனத் தீர்மானிக்கிறது. தாம் எல்லாருக்குமான அரசு அல்ல என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீ இத்தேசத்தின் குடிமகனா என்று உரத்து பலவிதங்களில் கேட்டபடியே இருக்கிறது. இன்று அயல்நாடுகளிலும் குடியேறிகளுக்குள்ள சிக்கல் இதுதான்.
இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது. பரஸ்பரம் வெறுக்காமலும் சந்தேகிக்காமலும் சேர்ந்திருப்பது, துணையிருப்பது, அடையாளங்களுக்கு அப்பால் இணைவது, காலத்தையும் வெளியையும் அரசியலுக்கு அப்பால் நம்பி உறவாடுவது. மக்கள் இப்படித்தான் ஆவணங்களின் ஐயப்பாடுகளுக்கு வெளியே உயிர்த்திருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...