முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (எ)

 

15) என் வாழ்க்கையின் ஆகக்கொடுமையான அனுபவங்களில் ஒன்று எனச் சொல்ல மாட்டேன் என்றாலும் அந்த இருட்டில் வண்டியோட்டியது கிலியான அனுபவம்தான். சுந்தர் சியின் பேய்ப்படங்களைப் போல என் பீதியைக் காண எனக்கே சிரிப்பாகவும் வந்தது. அங்கங்கே கடைகளும் குடியிருப்பும் வருமிடங்களில் விளக்குகள் ஒளிரும். மீண்டும் கடும் இருட்டு. என்னதான் சாலையின் ஒரு பக்கமாய் அமைக்கப்பட்டிருந்த பிரதிபலிக்கும் அம்பு முனைக் குறியீடுகள் வண்டியை வயலுக்குள்ளோ பாறைகளிலோ பாய்ச்சாமல் தப்பிக்க உதவினாலும் சில இடங்களில் எங்கே சாலை வளைகிறது, எங்கிருந்து வாகனங்கள் வருகின்றன என கணிக்க வேண்டியிருந்தது. பெங்களூர் வந்து பிரதான சாலையை அடையும்வரை ஏதோ முதலிரவில் விளக்கணைத்து நடக்கும் வன்முறை போலத்தான் வண்டியோட்டினேன்


16) அவெஞ்சரில் ஒரு வினோதப் பிரச்சினை - ஷோரூமில் தந்த சாவி அடிக்கடி வளைந்தது. மாற்றுச் சாவியைச் செய்தால் அதுவும் வளைந்தது. ஒருவேளை பிரச்சினை என்னிடம்தான் இருக்க வேண்டும். ஆனாலும் சாவி எப்படி வளையலாம், பஜாஜ் கம்பெனியே நம்மை ஏமாற்றுகிறது, வழக்குத் தொடுக்க வேண்டும், சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் என டொனால்ட் டிரம்பைப் போல பல்லவி கொதித்துக் கொண்டிருந்தாள். போல்ட் லூசாக இருந்ததும் அவளைத் தூண்டிவிட்டது. வண்டி ஒழுங்காக ஓடினால் போதும் என்பது, சாவி என் தவறாகவும் இருக்கலாம் என் நிலைப்பாடு. ஷோரூமில் இருந்து வண்டியை எடுக்கும்போது சில நேரங்களில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வருமென்பதும் என் அனுபவம். ஆனாலும் அவள் சொன்னதில் ஒரு விசயத்தை ஒப்புக்கொண்டேன் - சுமோ மல்யுத்த வீரனைப் போல ஒரு பைக்கைக் கொடுத்துவிட்டு அதன் பிரதானமான உறுப்பை மட்டும் இவ்வளவு சின்னதாக, மெல்லியதாக, வளையக் கூடியதாக கொடுத்திருக்கக் கூடாது. அதன் வடிவத்தாலும் கனத்தாலும் வண்டியை அசைப்பதும், திருப்புவதும் கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை இயக்குவதையும், லாக் செய்வதையும் முத்தம் கொடுப்பதைப் போல வலிக்காமல் பண்ண வேண்டியது என பஜாஜ் நிறுவனம் சொல்லக் கூடும். “கன்னிப் பொண்ணா நினைச்சு காரைத் தொடணும்என்று வாலி சொன்னது காருக்கு மட்டுமல்ல பைக்குக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். முதல் சர்வீஸுக்கு விடும்போது இப்பிரச்சினைகளைக் குறிப்பிட்டேன். சர்வீஸ் பொறுப்பாளர் இதெல்லாம் பிரச்சினையே இல்லையென்பதைப் போல ஒரு அட்டைக் காகிதத்தில் குறித்துக்கொண்டார். முதல் சர்வீஸுக்குப் பின்பு வண்டி இன்னும் சுமூகமாக, வெண்ணெய் போல ஓடும் என்கிறார்கள். மைலேஜும் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம்.


17) சர்வீஸுக்குப் பின் வண்டியின் பிக் அப்பும், வேகமும் நன்றாகவே உள்ளன. ஆனால் பூட்டு மட்டும் அதிமுக தலைவர்களின் தலையை வருடிக் கொடுக்கும் மோடியைப் போல உள்ளது. ஒருநாள் திறக்கிறது, இன்னொரு நாள் அசைய மறுக்கிறது. சர்வீஸ் செண்டரில் கேட்டாலும் புதுசு அப்படித்தான், போகப்போக பழகிரும் என்கிறார்கள். நேற்று ஒரு ஆட்டோக்காரரிடம் இதைப் பற்றிப் பேசினேன்: அவர் தன் வண்டிச் சாவியைக் காட்டி இப்போது வரும் வாகனங்களின் சாவிகள் பலவீனமாக உள்ளதாகவும், அதற்கு கம்பெனிக்காரர்கள் கொண்டு வந்துள்ள தொழில்நுட்ப மாற்றங்களே காரணம் என்றார். அவெஞ்சரின் சாவிப் பிரச்சினையைப் பற்றி யுடியூபில் காணொளிகளும் உள்ளன. நம் ஆட்கள் என்ன சீர்திருத்தம், மாற்றம் கொண்டு வந்தாலும் அது புதுப் பிரச்சினைகளையும் கைப்பிடித்து அழைத்து வருகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...