Skip to main content

Posts

Showing posts from February, 2017

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்துமதம் தாக்கப்படுகிறதா?

ஜெயமோகனின் ஜக்கி கட்டுரைகளுடன் எனக்கு பெரும்பாலும் உடன்பாடே. கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகி வந்ததன் வரலாற்றுவாத காரணங்களை சொல்கிறார். அவர்கள் சாமியார்கள் அல்ல, நவீன, எளிய உளவியலாளர்கள், ஒரு கலாச்சார தேவையை நிறைவேற்றுகிறாரக்ள் என்கிறார். அத்தகைய சாமியார்கள் ஏன் தனிப்பட்ட முறையில் தான் ஏற்பதில்லை என்பதையும் கடைசியில் சொல்கிறார். நான் இதை ஏற்கிறேன். ஏற்க முடியாதவை இவை: சூழலியல் குற்றச்சாட்டுகள் முக்கியமானவை என்று விட்டு அக்குற்றங்களை அரசியல் தலைவர்களும் கல்லூரி முதலாளிகளும் செய்யவில்லையா, அவர்கள் ஏன் நீங்கள் விமர்சிப்பதில்லை என கேட்கிறார். ஒரு குற்றத்தை எப்படி இன்னொரு குற்றம் நியாயமாக்கும்? மேலும் மீடியாவில் எப்போதும் ஒட்டுமொத்தமாய் எல்லாரது குற்றங்களையும் பேச இயலாது. ஒரு சந்தர்ப்பம் உருவாகும் போது தான் பேச இயலும்.

கௌதம் மேனனின் படங்களில் ஆண்மை

  ஜெஸ்ஸி: “நான் வருவேன், உனக்காக.” கார்த்திக்: “நீ வருவே எனக்காக? உல்டாவா நான் சொல்ல வேண்டியத நீ சொல்றே?” -     விண்ணைத் தாண்டி வருவாயா , கௌதம் மேனன்

ஸ்டாலினின் முதல் அதிரடி

சில அரசு அலுவலகங்களில் எதைக் கேட்டுப் போனாலும் ”விண்ணப்படிவம் நிரப்பிக் கொடுங்கள். அதன் பிறகு அதோ அங்கே வரிசையில் காத்து நில்லுங்கள்” என்பார்கள். ஒன்றுக்கு போக வேண்டும் என்றாலும் விண்ணப்பட்ட படிவம் தான். சாகும் தறுவாயில் ஸ்டிரெச்சரில் தூக்கி வந்தாலும் விண்ணப்படிவம் தான். ஸ்டாலினின் அரசியல் கிட்டத்தட்ட இது போன்றது. அவர் எதையும் நிதானமாய் திட்டமிட்டு சீராய் செய்ய விரும்புகிறவர். நாடகீயமான அடாவடித்தமான (கேஜ்ரிவால் பாணி) அரசியல் அவர் இயல்பு அல்ல. ஆனால் அரசியலில் நாடகம், கண்ணீர், ஆவேசம், கோபம் ஆகியவற்றுக்கும் முக்கிய இடம். ஒரு தலைவன் சரியான வேளையில் தெருவில் இறங்கி நின்ற குரல் கொடுத்தால் மொத்த சமூகமும் செவி மடுக்கும். அப்படியான சில நல்ல சந்தர்பங்களை ஸ்டாலின் இதற்கு முன் தனது மடிப்பு கலையாத அரசியல் காரண்மாய் தவற விட்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை அவர் கண் முன்னாலேயே தவற விட்டார்: அப்போராட்டத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்களுக்கு பின்னால் லட்சக்கணக்கான பொதுமக்கள், அதன் பிறகு மெ 17 இயக்கத்தினர், ஒ.பி.எஸ் என பலரும் முன்னெடுத்து சமூகத்தை உணர்ச்சி அலையில் மிதக்க வைத்தார்கள். மொத்த த...

பா.ஜ.கவின் பிளவுபடுத்தி ஆளும் காலனிய சூழ்ச்சி

பா.ஜ.க இவ்வளவு விரைவில் ஒ.பி.எஸ்ஸை கைவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவருக்கும் மத்திய அரசுக்குமான உறவில் ஏதோ ஒரு பிசகு நேர்ந்திருக்கிறது. ஒ.பி.எஸ்ஸின் புகழ் ஒரு பக்கம் உயரும் போது பா.ஜ.கவினர் தீபாவை முறுக்கேற்றி முன்னுக்கு கொண்டு வர துவங்கினர். அப்போதே பா.ஜ.கவின் பிளவு படுத்தி ஆளும் காலனிய உத்தியை கவனித்தேன். ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் அவரை தெருவில் விடுவார்கள் என நான் நினைக்கவில்லை.

தீபாவை ஏன் பா.ஜ.க முன்னிறுத்துகிறது?

சில நண்பர்கள் இது பா.ஜ.கவின் பார்ப்பனிய சதி என்கிறார்கள். ஆனால் எனக்கு பா.ஜ.கவின் நோக்கம் வேறு என படுகிறது. அதிமுகவில் தீபாவுக்கான இடத்தை பா.ஜ.க ஆரம்பத்திலேயே சின்னதாய் கோடிட்டு உருவாக்கி விட்டார்கள். அவரை தயாராக்கி இப்போது சரியான சந்தர்பத்தில் கொணர்ந்திருக்கிறார்கள். முக்கியமான காரணம் கடந்த சில நாட்களில் ஒ.பி.எஸ் பெற்றுள்ள பரவலான மக்கள் ஆதரவு. அவரை எதிர்க்கிறவர்கள் கிட்டத்தட்ட யாரும் இல்லை எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தி.மு.க கூட ஒ.பி.எஸ் பக்கம் என்கிறார்கள் (இதை ஸ்டாலின் மறுத்தாலும் கூட). இப்போது சசிகலா ஜெயிலுக்கு போவது உறுதியாகி விட்ட பின், வரும் நாட்களில் கணிசமான எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் அணிக்கு தாவுவார்கள் எனில் அதிமுகவின் ஒரே “சிங்கம்” ஒ.பி.எஸ் தான்.  ஒரு பக்கம் மக்கள் ஆதரவு, மறுபக்கம் கட்சி மீதான முழு அதிகாரம். முன்பில்லாத அளவு அதிகாரமும் மக்கள் ஆதரவும் கொண்ட வேறொரு மனிதர் ஆகி விடுவார் ஒ.பி.எஸ். அவரை இது போல் ஒரு வருடம் ஆளவிட்டால் “அடிமைப்பெண்” எம்.ஜி.ஆர் நிமிர்ந்து நேராக நடக்க கற்றுக் கொண்ட கதையாகி விடும். அதை பா.ஜ.க விரும்பாது. எப்போதும் ஒ.பி.எஸ் தலைக்கு மேல் கத்தி தொங...

சம்பவம் எப்படி கதையாகிறது?

அன்புள்ள அபிலாஷ் ... சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் என்னுடைய சிறுகதையை படிக்க கொடுத்திருந்தேன் . இது சிறுகதையல்ல டைரி குறிப்பிற்க்கு தலைப்பிட்டு கொடுத்திருக்கிறாய் என்றார் . சரி என் டைரி குறிப்பில் என்ன குறை இருக்கிறது ?? என்றேன் . அது ஒரு புனைவாக மாற்றம் அடையவே இல்லை என்றார் . இன்னும் கொஞ்சம் எழுதிப்பார் என்றார் . என் சந்தேகம் ... புனைவு என்றால் என்ன , நான் நேரில் பார்த்த ஒரு சம்பவம் எந்த புள்ளியில் ஒரு புனைவாக மாறுகிறது . சமயமிருப்பின் தெளிவுபடுத்தவும் . நன்றி ரவீந்தர் அன்புள்ள ரவீந்தர் இது ஒரு நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்கு இ.எம் பாஸ்டர் எனும் ஆங்கிலேய நாவலாசிரியர் ஒரு பதில் சொன்னார்.

சமிஸ்கிருதம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

சமிஸ்கிருதம் நேரடி மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. ஆனாலும் அது ஏன் திருமண நிகழ்வுகளில், கோயில் சடங்குகளில் முக்கிய இடம் பெறுகிறது? ஏன் நாம் அதற்கு பதிலாக தமிழை பயன்படுத்துவதில்லை? தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்கள் அடிக்கடி கோபமாய் கேட்கும் கேள்வி இது. சமீபத்தில் “வந்தேறி மாடு” பேஸ்புக் பக்கத்தில் இக்கேள்வி எழுப்பப்பட வழக்கம் போல் கும்மியடித்தார்கள். ஒரு பக்கம் இது வடமாநில சதி என்றும் இன்னொரு பக்கம் சமிஸ்கிருதம் ஒரு சக்தி வாய்ந்த மொழி என்றும் சில வாதிட்டார்கள். இந்த விவாதம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்படி ஒரே தேய்ந்த தடத்தில் செல்வது காண வியப்பாக உள்ளது.

மற்றொரு கடிதம்

சசிகலாவினால் யாருக்கு லாபம்?

சசிகலா முதல்வராவதில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. நேற்று முழுக்க நண்பர்கள் இவ்விசயத்தில் கொந்தளிப்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். சிலர் “நாங்க கேரளா போகிறோம்” என ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள். ஆனால் கேரளாவின் நிலை நம்மை விட மோசம். பினராயி விஜயன் சசிகலாவுக்கு சித்தப்பா. ஆந்திராவுக்கும் போக முடியாது. குளுகுளுவென்ற கர்நாடகாவுக்கும் பெயர முடியாது. எங்குமே ரியல் எஸ்டேட் தாதாக்களின் அட்டகாசம். தமிழகம் எவ்வளவோ மேல்! முக்கியமாக, யார் முதல்வரானாலும் இங்கே ஆட்சி செய்வது அதிகாரிகள் தாம். மாநிலத்தை கொள்ளையடிப்பதில் பங்கை தீர்மானிக்கும் பணி மட்டும் தான் முதல்வருக்கு. மற்றபடி அது ஒரு அலங்கார பதவி. நாம் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம்?