Skip to main content

ஸ்டாலினின் முதல் அதிரடி

Image result for ஸ்டாலின்
சில அரசு அலுவலகங்களில் எதைக் கேட்டுப் போனாலும் ”விண்ணப்படிவம் நிரப்பிக் கொடுங்கள். அதன் பிறகு அதோ அங்கே வரிசையில் காத்து நில்லுங்கள்” என்பார்கள். ஒன்றுக்கு போக வேண்டும் என்றாலும் விண்ணப்பட்ட படிவம் தான். சாகும் தறுவாயில் ஸ்டிரெச்சரில் தூக்கி வந்தாலும் விண்ணப்படிவம் தான். ஸ்டாலினின் அரசியல் கிட்டத்தட்ட இது போன்றது. அவர் எதையும் நிதானமாய் திட்டமிட்டு சீராய் செய்ய விரும்புகிறவர். நாடகீயமான அடாவடித்தமான (கேஜ்ரிவால் பாணி) அரசியல் அவர் இயல்பு அல்ல. ஆனால் அரசியலில் நாடகம், கண்ணீர், ஆவேசம், கோபம் ஆகியவற்றுக்கும் முக்கிய இடம். ஒரு தலைவன் சரியான வேளையில் தெருவில் இறங்கி நின்ற குரல் கொடுத்தால் மொத்த சமூகமும் செவி மடுக்கும். அப்படியான சில நல்ல சந்தர்பங்களை ஸ்டாலின் இதற்கு முன் தனது மடிப்பு கலையாத அரசியல் காரண்மாய் தவற விட்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை அவர் கண் முன்னாலேயே தவற விட்டார்: அப்போராட்டத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்களுக்கு பின்னால் லட்சக்கணக்கான பொதுமக்கள், அதன் பிறகு மெ 17 இயக்கத்தினர், ஒ.பி.எஸ் என பலரும் முன்னெடுத்து சமூகத்தை உணர்ச்சி அலையில் மிதக்க வைத்தார்கள். மொத்த தமிழ் சமூகமும் தன்னை ஒற்றைப் புள்ளியில் ஓர் இனமாக உணர்ந்த அபூர்வமான தருணம் அது. ஸ்டாலின் பந்த், ரயில் மறியல் தாண்டி அது பற்றி யோசிக்கவில்லை.

 அப்போராட்டத்தை திமுக முன்னெடுத்திருந்தால் போலீஸ் நிச்சயம் கையை கட்டி வேடிக்கை பார்த்திருக்காது. ஆனால் நடந்த போராட்டங்களில் பாதி அளவிலாவது திமுகவால் ஒருங்கிணைக்க முடிந்திருந்தால் ஸ்டாலின் மக்கள் உள்ளங்கள் முழுக்க நிறைந்திருப்பார். ஆனால் அவருக்கு பதிலாக ஒ.பி.எஸ் சிறிது காலம் நல்ல பெயர் சம்பாதித்தார். குறிப்பாக, ராஜினாமாவுக்கு பிறகு அவர் சசிகலாவுக்கு எதிராக தன் ”புரட்சியை” துவங்கிய பின் பா.ஜ.கவினருமே பொறாமைப்படும் அளவுக்கு அவர் இமேஜ் வளர்ந்தது.
இதுவரை வேடிக்கை பார்த்திருந்த ஸ்டாலின் முதன்முறையாய் இப்போது அதிமுகவின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விழித்தெழுந்திருக்கிறார். இன்றைய தினம் திமுகவின் சட்டமன்ற அமளி, ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் மீடியாவுக்கு பேட்டி அளித்தது, கவர்னரை சந்தித்தது, மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தது எல்லாமே மாஸ் தான். வரும் மாதங்களில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை ஒட்டி அவர் மாநிலத்தை இது போல் தொடர்ந்து ஸ்தம்பிக்க வைத்தால் கலைஞரே அவரைக் கண்டு பயந்து விடுவார்.
அதேநேரம் ஸ்டாலின் இவ்வளவு ஆவேசமாக போராடியது அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் என்பது நகைமுரண் தான். சசிகலா மீது மக்களில் ஒரு தரப்பினருக்கு உள்ள கோபம் இந்த நகைமுரணை காண விடாமல் தடுக்கிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழுமனதுடன் எடப்பட்டியாரை ஆதரிக்கவில்லை என்பதை அவர்கள் கூறவில்லை. இன்று ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களில் ஒருவரும் கூட “என்னை மிரட்டுகிறாகள்; அடைத்து வைத்திருக்கிறார்கள்” என புகார் கொடுக்கவில்லை. நாளையும் கூறுவார்கள் எனத் தோன்றவில்லை. ஒருவேளை அவர்கள் பல கோடி பணத்தை பெற்று ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் நிச்சயம் வாயே திறக்க மாட்டார்கள். அவர்களுக்கே பிரச்சனை இல்லையென்றால் ஸ்டாலினுக்கு மட்டும் என்ன? ஒ.பி.எஸ் தரப்பும் இன்று அமைதி காத்தது. திமுக மட்டும் ஏன் தன் “எதிர்க்கட்சியின்” உரிமைகளை காப்பாற்ற போராட வேண்டும்? ”நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பதினைந்து நாட்கள் அவகாசம் என்பது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்” என முதலில் கருத்து சொன்ன ஸ்டாலின் ”ஏன் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு அவசரமாய் நடக்க வேண்டும்? அது தான் 15 நாட்கள் அவகாசம் உள்ளதே” என இன்று முரணாக கேட்கிறார். அப்படி என்றால் ஒ.பி.எஸ்ஸும் பா.ஜ.கவும் சேர்ந்து “குதிரை பேரம்” நடத்த வேண்டும் என்கிறாரா?
எடப்பாடியார் அரசை ஆதரிக்க மாட்டோம் என்றார் சரி. அப்படி என்றால் ஒ.பி.எஸ் அரசு அமைக்க திமுக உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்களா? இதற்கு பதில் இல்லை. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஒருவேளை எடப்பாடியார் அரசு கவிழலாம். ஆனால் அடுத்து யார் அரசு அமைக்க முடியும்? 11 பேர் ஆதரவு கொண்ட ஒ.பி.எஸ்ஸா?
ஆக திமுகவின் நோக்கங்கள் இரண்டு.
1)   அதிமுக ஒரு நிலையான அரசை அமைக்க அனுமதிக்க கூடாது. அதன் விளைவாக ஆட்சி கலைந்து தேர்தல் வந்தால் அதன் நற்பலன் திமுகவுக்கே.
2)   எப்படியும் எடப்பாடியார் குழுவினர் வாக்கெடுப்பில் ஜெயித்து விடுவார்கள். ஆனால் எளிதாக அவர்கள் அதை சாதித்து தப்பித்து ஓட விடக் கூடாது. அமளி செய்து போராடி சத்தம் போட்டு ”இது அறமற்ற முறையில் நடந்த வாக்கெடுப்பு” எனும் செய்தியை வலுவாக சமூகத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
இரண்டாவது நோக்கத்தில் திமுக வென்று விட்டது.
திமுக இப்படி ஆட்டத்தை கலைக்க பார்க்கும் என அதிமுக முன்னரே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதனாலே திமுகவினர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து மைக்கை பிடுங்கி உடைத்து மேஜையை கவிழ்த்து, சபாநாயகர் நாற்காலியில் ஏறி அமர்ந்து அதகளம் பண்ணும் போது அதிமுகவினர் அமைதியின் திருவுருவங்களாக நடித்தனர். திமுகவின் அதகளத்தையே ஆதாரமாக காட்டி அத்துமீறலுக்காக அவர்களை வெளியேற்றி, வாக்கெடுப்பு நடத்தலாம் என்பதே அவர்களின் திட்டம். இல்லாவிட்டால் வாக்கெடுப்பில் ஒ.பி.எஸ் தரப்பு எடப்பாடியாருக்கு மிக கடுமையான போட்டி கொடுத்திருக்கும். திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க முடியாமல் போனது ஒருவிதத்தில் எடப்பாடியார் பிரம்மாண்ட வெற்றி பெற்றதாய் தோற்றத்தை கொடுக்க உதவியது. இல்லாவிட்டால் திமுகவும் அதிருப்தி அதிமுகவினரும் ஒரு வலுவான அணியாய் எடப்பாடியார் அணிக்கு எதிராக நிற்கும் ஒரு விசித்திர நிலை ஏற்பட்டிருக்கும். நாளைய பேப்பரில் பார்க்க எடப்பாடியார் மயிரிழையில் தப்பித்த சித்திரம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை.

ஆக இன்றைய ஆட்டம் டிரா:  ஸ்டாலின் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார். எடப்பாடியாருக்கு கொஞ்சம் சேதம் ஏற்பட்டாலும் திமுகவின் ஆயுதத்தையே கொண்டு அவர்களை சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றி சுலபமாய் வாக்கெடுப்பை நடத்திய திருப்தி அவருக்கு இருக்கும். முக்கியமாய் அவர் முதல்வர் ஆகி விட்டார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...