பிக்பாஸிடம் வாக்குமூல அறையில் பேசிய ரித்விகா, இறுதி நாளுக்குப் பின், பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறின பின் தன் (கழுத்தில் மாட்டின) மைக்கை மிகவும் மிஸ் பண்ணப் போவதாய் சொன்னார். “இந்த மைக் என்னோட குழந்தை; இதை பெட்ஷீட் போர்த்தி தூங்கவெல்லாம் வச்சிருக்கேன்” என்றார். திரும்பத் திரும்ப மைக்கையும் பிக்பாஸ் வீட்டையும் பற்றி மிகுந்த ஏக்கத்துடன் பேசிக் கொண்டு போனார். அதன் பிறகு ஐஸ்வர்யா, ஜனனி என ஒவ்வொருவர் உரையாடும் போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேனால் தாம் எவ்வளவு தனிமையாய் உணர்வோம் என விசனப்பட்டார்கள். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மஹத், ஷாரிக், நித்யா போன்றோரும் திரும்ப வந்து சில மணிநேரம் பிக்பாஸ் வீட்டில் கழிக்கையில் (ஒன்று), வெளியே எந்தளவு தனிமையாய் இருந்து பிக்பாஸை மிஸ் பண்ணினோம் என சொல்கிறார்; (இரண்டு) “நாங்க பிக்பாஸ் வீட்டிலேயே இருக்கிறோம்; பிக்பாஸ் எங்களை வெளியேற்றாதீங்க” என கெஞ்சுகிறார்கள். எனக்கு இந்த பார்வையே ரொம்ப விசித்திரமாய் பட்டது.