முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (2)


Image result for குட்டி ரேவதி
குட்டிரேவதியின் கவிதைகளில் பெண் இச்சையுடன் ஒருவித ஆண் நோக்கும் (male gaze) சட்டென தென்படும். அதாவது, அவர் பெண்ணியவாதி என்றாலும், தனக்கான வலுவான கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர் என்றாலும், அவரையும் மீறி கவிதையில் பல சங்கதிகள் வரும்அவர் நம்புவதற்கு நேர்மாறான சேதிகள் வரும். .தா., அவரது காதல் கவிதைகளில் வரும் ஆண் நோக்கு. ஒரே சமயம் ஒரு பெண்ணியவாதியும் பெண்ணியத்தை பொருட்படுத்தாத இச்சையில் தவிக்கும் ஒரு எளிய பெண்ணும் அவர் கவிதைக்குள் குரலெழுப்புவார்கள் (“முலைகள்தொகுப்பு). இப்படியாக (ஒரே சமயம் ஆண் ஆதிக்கத்தை மறுக்கும் அதற்கு இணங்கிப் போகும் முரண் போக்குகளை வெளிப்படுத்தும்) உடைந்த சிதறுண்ட பெண் மனத்தை நாம் மாலதி மைத்ரியின் கவிதைகளிலும் காணலாம். இந்த கட்டற்ற பாய்ச்சல் இவ்விரு கவிகளின் மொழியின் ஒரு தனிச்சிறப்பு. மாலதி மைத்ரி பின்நவீனத்துவத்தில் இருந்து இந்த சிதறுண்ட போக்கை பெற்றிருக்கலாம். தேவதேவனில் இருந்து இதை குட்டிரேவதி பெற்றிருக்கலாம் (அல்லது தன்னியல்பாகவும் தோன்றியிருக்கலாம்).

முக்கியமாய் இங்கு குறிப்பிட வேண்டிய சேதி இந்த பெண் கவிகள் மொழியை தர்க்க ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த எத்தனிக்கவில்லை என்பது. தாபத்திலும் சினத்திலும் ஆவேசத்திலும் நிலைகொள்ளாது தவிக்கும் உடலைப் போன்றே இவர்களின் மொழியும் நொதிக்கிறது.
ஆனால் ஆண் கவிகள் இதே நீர்மையை, தர்க்கத்தை கடந்த பாய்ச்சலை கவிதையில் அடைய இசைத்தன்மையை, மிகையான சொற்களை பயன்படுத்தினர். ஒரே நோக்கம், ஆனால் இருவேறு பாதைகள்.
 இவர்களுடன் குறிப்பிட வேண்டிய மற்றொருவர் என்.டி ராஜ்குமார்தமிழில் இசைப்பாடல் போக்கு கொண்ட நவீன கவிஞர்களில் அப்பட்டமானவர் இவர். நாட்டார் மக்கள் கலை வடிவங்களின் மொழியும் தாளலயமும் இவரது கவிதைகளில் நர்த்தனமிடும்.
இசைப்பாடல் மரபின் மற்றொரு நவீன கிளையாக இருப்பவர் மனுஷ்ய புத்திரன். அவரது சிறந்த கவிதைகள் அறிவார்த்தம் குறைவாகவும் உணர்ச்சித்தளும்பல் மிகுதியாகவும் இருக்கும். அதாவது, அவரிடம் தர்க்க கட்டமைப்பு கொண்ட இறுக்கமான கவிதைகளும், இப்படி முந்தானையை அடிக்கடி பத்திரப்படுத்தி இடுப்பில் சொருகாத அபாரமான கவிதைகளும் உண்டு. குறிப்பாக அவரது காதல் கவிதைகள். இசையொழுங்கு, சொற்களின் அமைப்பு, மீளமீள ஒலிக்கும் சொற்றொடர்கள், முன்பின் முரணான கூற்றுகள் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றி பெறும் கொதிப்பான கவிதைகள் இவை. இவற்றில் சில கவிதைகளில் பித்தின் உச்சத்திற்கு லகுவாய் போய் திரும்புவார் மனுஷ்யபுத்திரன்.
இதற்கு உதாரணமாய் மனுஷ்ய புத்திரனின் பல சிறப்பான கவிதைகளை சொல்லலாம். ஆனால் என்னை இந்த கட்டுரையை எழுதத் தூண்டிய கவிதையையே இங்கு குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அக்கவிதையின் தலைப்புபிரியும் இடங்கள்” (”நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்தொகுப்பிலிருந்து).


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...