முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (3)


Image result for மனுஷ்யபுத்திரன்

இந்த நகரத்தில்
நம் வழிகள்
ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன

நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்


நாம் அமர்ந்திருந்து எழுந்து வந்துவிட்ட
நிலங்களின் மீது
நிலவொளி இந்நேரம்
பெரும்தனிமையில் படர்ந்திருக்கும்

திரும்பும் வழியில்
நான் என் பொறுப்புகளை நினைத்துக் கொள்கிறேன்
நீ நிச்சயமற்ற உன் நாளையை நினைத்துக் கொள்கிறாய்
நம் வாழ்விடங்களுக்கு
அவரவர் வழியில் மீளும் துயரங்களெங்கும்
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது

மனுஷ்ய புத்திரனின் இக்கவிதையில் இசையொழுங்கு இயல்பாக உள்ளது; வானம்பாடிகளுக்கும் தேவதேவன், மனுஷ்யபுத்திரன்களுக்குமான வேறுபாடு இதுஅதாவது வலிந்து திணிக்கப்படாத இசைத்தன்மை.
 உதாரணத்திற்கு, இக்கவிதையில் இரண்டாவது பத்தியில் சொற்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வருகின்றன (மோனைநமக்கிடையே, நம், நீங்குதலின், நமக்கு, நாம்); அதற்கு அடுத்த பத்தியில் மோனை சில முறை தான் வருகிறது (நாம், நிலங்களின், நிலவொளி). இந்த ஒழுங்கின்மையை நான் கவனிக்க வேண்டியது அவசியம்.
 மனுஷ்யபுத்திரனுக்கு ஓசை லயம் வேண்டும்; ஆனால் அது கவிதை முழுக்க ஒரே சீரான தாள லயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது ஓசை நயத்துக்காக சொற்கோர்வை இல்லை; வெற்று ஓசையின் அழகுக்காக சொல்லின் இசைத்தன்மையை அவர் கிலுக்கிப் பார்ப்பதில்லை. அர்த்தத்தை கட்டியெழுப்ப மாட்டுமே சொற்களின் இசை நயத்தை அவர் பயன்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அவர்ஓசையை சில இடங்களில் இங்கு சீராக கொண்டு வருகிறார். அது என்ன?
இக்கவிதையின் முக்கிய சொல்நாம்” – இருவர் இணைந்து நாம் ஆனாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். அவர்கள் இருவழிகளிலாய் பிரிந்து செல்லப் போகிறார்கள். அவர்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டும் போதும் உள்ளுக்குள் தத்தமது உலகத்துக்குள் மீள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்கிறார்கள். இது தான் இக்கவிதையில் மென்கசப்பை, கழிவிரக்க தொனியை, நகைமுரணைஒட்டுமொத்தமாய் ஒரு அவல தொனியை - தோற்றுவிக்கிறது. மனுஷ்யபுத்திரன் இந்த நகைமுரணை கவிதையின் ஒலி ஒழுக்கு மூலம் உணர்த்த முயல்கிறார். அதற்காக அவர் என்ன செய்கிறார்?
நான், நாம், நீ, நம், நமக்குஆகிய சொற்கள் 11 தடவைகள் இச்சிறு கவிதையில் வருகின்றன. இந்த சுட்டுப்பெயர்கள் (pronouns) இல்லாது கூட இக்கவிதையை அவர் எழுதியிருக்க முடியும்.
உதாரணமாய்,
நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்

என்பதை
இடையே மூடும் கதவுகள்
வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின்
நடுவில் மின்சார ரயில்
இல்லாமலாகும் அந்தியின் இருள்

இப்படியும் எழுதலாம். (எண்பதுகளில் இந்த பாணியே பிரசித்தமாய் இருந்ததுஉதாரணமாய் எஸ். வைத்தீஸ்வரனின் கவிதைகள்.) இரண்டு பத்திகளுக்கும் என்ன வித்தியாசம்? முதல் வடிவில் உறவு கொள்ளும் தரப்புகளின் இடம் முக்கியமாய் அழுத்தம் கொள்கிறது. இரண்டாவதில், அவர்கள் இடையிலான இன்மை வலியுறுத்தப்படுகிறது. முதல் வடிவம் உணர்ச்சிகரமாய், ஓசை நயம் கொண்டு, உரையாடல்தன்மையுடன்அதனாலே மனிதக்குரலாய், சதைப்பற்றுடன் - உள்ளது. இரண்டாவதோ அரூபமாய் (ஒரு சர்ரியலிய ஓவியம் போல்) உள்ளது.
ஆக, அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே மனுஷ்யபுத்திரன் இங்கு சுட்டுப்பெயர்களை மீள மீள பயன்படுத்துகிறார். ஏன்?
நாம், “நமது, “நமக்கானது என திரும்ப திரும்ப அவர் உச்சாடனம் செய்யும் போது கவிதையில் வரும் காதலர் இருவரும் இணைந்தே ஈருடல் ஓருயிராய் இருப்பதான ஒரு பிரமை நமக்கு ஏற்படுகிறது. ஆனால் கவிதைக்குள் அவர் அவர்கள் பிரியப்போகிறார்கள்; பிரிவதற்கு முன்பான அந்த நிமிடங்களிலும் மனதளவில் வெகுவாய் விலகிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பேசுகிறார். ஒன்றை உணர்த்தி விட்டு, முற்றிலும் முரணான ஒன்றை சொல்கிறார். இதுவே கவிதையின் அதிர்ச்சி மற்றும் நகைமுரண். இதில் இருந்து தான் அந்த அவல உணர்வு தோன்றுகிறது.
இது போதாதென்று கூடுதலாய் (ஏற்கனவே குறிப்பிட்டது போல) “நாம்என்பதன் ஒலிமயக்கத்தை ஏற்படுத்தஒலியில் துவங்கும் சொற்களை 11 முறை பயன்படுத்துகிறார்.
 ஒவ்வொரு தினமும்என எழுதலாம்; ஆனால் அவர்ஒவ்வொரு நாளும்என்கிறார்.
பிரிதலுக்கு இடையேஇன்னும் இயல்பாய் இருந்திருக்கும்; ஆனால் அவர்நீங்குதலின் நடுவில்என எழுதுகிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...