Skip to main content

Posts

Showing posts from July, 2019

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பிளாஸ்டிக் சிரிப்புகளின் காலம்

நான் முன்பு ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்ப எழுத்து பிரிவில் , ஒரு சின்ன வேலையில் , இருந்தேன் . எந்திர பாகங்கள் , மின்னணு கருவிகள் குறித்த விவரணைகளே புரியாமலே புரிந்த மாதிரி எழுதுவது என் பணி . என் அயலில் மற்றொரு துறை இயங்கியது . முழுக்க மென்பொருள் கோடிங் சார்ந்த ஒரு புரோஜெக்ட் . அதில் சிறு சிறு பிரிவாக ஏகப்பட்ட பேர் இயங்கினர் . அவர்களில் ஒருவர் - ஒரு வங்காளி - எனக்கு கேண்டீனில் வைத்து நட்பானார் . நான் அவரை இறுதியாக சந்தித்ததும் கேண்டீனில் தான் . அன்று எதையோ தொலைத்தது போல தனியாக அமர்ந்திருந்தார் .  “ என்ன ஆச்சு ?” என வழக்கம் போல கேட்டேன் . வழக்கம் போல அவர் தன் சின்ன சின்ன பிரச்சனைகளை , தனிமையைப் பற்றி புலம்புவார் . நான் இத்தகைய புலம்பல்களை ரசிப்பேன் . “I am fine” என் சிரித்தபடி தோள் உலுக்குகிறவர்களை விட இத்தகையோர் நேர்மையானவர்கள் என நினைப்பேன் . அவர் அன்று விச்சிராந்தியாக பதில் சொன்னார் , “ எனக்கு வேலை போயிடுச்சு !” ஏன் , எப்படி என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை . ஆறுதல் சொல்லவி...

அத்திவரதரும் இந்துத்துவ அரசியல் கனவும்

அத்திவரதர் வைபவம் , அது சம்மந்தமான பரபரப்பு பற்றி சரவணன் சந்திரன் எழுதிய பதிவைப் படித்தேன் . அவர் அப்பதிவை அழகாக எழுதியிருந்தாலும் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை . அப்பதிவு பல பாஜகவினர் மற்றும் நடுநிலை சங்கிகளின் மார்பில் பாலை வார்த்திருக்கும் என்பதாலே இங்கு மாற்றுக்கருத்தை கூற விழைகிறேன் .

பிக்பாஸ்: சேரனுக்கு எதிரான மீராவின் பாலியல் குற்றச்சாட்டு (2)

அந்த வீட்டில் சேரன் தன்னை பொருட்படுத்தியதோ கவனித்ததோ இல்லை என இந்த குற்றச்சாட்டின் இடையே ஓரிடத்தில் சொல்கிறார் . இது ஒரு முரணான கூற்று . அதாவது சேரனுக்கு மீராவிடம் பாலியல் ஈடுபாடு இருந்திருந்தால் அவர் அவரை தவறாக தொட்டிருக்க வாய்ப்புண்டு . தன்னை எந்தவிதத்திலும் பிடிக்காத , வெறுக்கிர ஒருவர் என அவர் சேரனை சித்தரிக்கும் பட்சத்தில் சேரன் “ அப்படி ” ஏன் செய்ய வேண்டும் ? சரி இது எப்படியோ போகட்டும் . தன்னை ஒருவர் வெறுப்பதாய் ஒரு பெண் உணரும் பட்சத்தில் இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பாரா ? சில பெண்கள் செய்வார்கள் என்பதற்கு மீராவே உதாரணம் .

பிக்பாஸ்: சேரனுக்கு எதிரான மீராவின் பாலியல் குற்றச்சாட்டு (1)

பிக்பாஸ் டாஸ்க் ஒன்றில் விளையாட்டின் பகுதியாக ஓடிச் செல்லும் மீராவை சேரன் தடுத்து அவர் தோளைப் பற்றி தள்ளி விடுகிறார் . விளையாட்டின் இந்த நியதியை ஏற்று மீராவும் சேரனுக்கு ஹை பை கொடுக்கிறார் . ஆனால் இதையடுத்து வீட்டிலுள்ளோரிடம் மீரா பேசும் போது தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக புலம்புகிறார் . சேரன் தன்னை இடுப்பைப் பிடித்து தள்ளி விட்டதாக அதனால் தான் காயப்பட்டதாக ( வலி ஏற்பட்டதாக ), அவரது தொடுகை தப்பாக பட்டதாக சொல்கிறார் . பெண்களிடம் கண்ணியமாகவே நடந்து கொள்வேன் எனக் கோரும் சேரன் இப்படி தன்னிடம் பண்ணலாமா என்பதே அவரது கோரல் . தனது கூற்று மீது மீராவுக்கு சற்று குழப்பம் இருந்திருக்க வேண்டும் . தான் சரியாக வெளிப்படுத்தவில்லையோ எனத் தோன்றியிருக்கலாம் . ஆகையால் அவர் பின்னர் சாண்டியிடம் நடந்த சம்பவத்தை நிகழ்த்தி காட்டினார் .

எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (2)

” நான் ஒரு போன் பேசத் தான் வந்தேன் ” எனும் தலைப்பில் மார்க்வெஸின் ஒரு அட்டகாசமான சிறுகதை உண்டு . ஒரு நெருக்கடியான சந்தர்பத்தில் தொலைபேசியில் பேசும் நோக்கில் ஒரு மனநல மருத்துவமனைக்கு செல்லும் பெண் அங்கேயே மாட்டி பைத்தியமாக கருதப்பட்டு சிறைவைக்கப்படும் கொடூரத்தை அக்கதை சித்தரிக்கும் . பல சமயங்களில் இலக்கிய பாராட்டு விழாக்கள் அப்படித் தான் அமையும் . எழுத்தாளனைப் பார்த்தால் ரொம்ப மரியாதையுடன் “ நானும் எழுத்தாளன் தானுங்க ” என பீடிகை போடுகிறவர்களிடம் காட்டிக் கொள்ளவே கூடாது . விக்கிரமாதித்யன் தன்னை ஒரு அமைப்பு விருது தருகிறேன் என அழைத்து நாற்சந்தியில் கூட்டம் போட்டு நள்ளிரவு வரை அதன் ஒருங்கிணைப்பாளர்களே மைக்கில் முழங்கி சுயவிளம்பரம் பண்ணி விட்டு பேருந்துக்கு கூட பணம் தராமல் நடுரோட்டில் கைவிட்ட கதையை ஒரு பேட்டியில் சொல்கிறார் . இலக்கிய ஆர்வலர்களில் வெள்ளாந்தியானவர்கள் நல்லவர்கள் , சுயமோகிகள் கடித்து வைக்கும் பைத்தியங்களைப் போன்றவர்கள் - இவர்களிடையே வேறுபாடு கண்டு தப்பிக்க தெரிய வேண்டும் .

எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (1)

இந்த கேள்வியை முன்னிட்டு , ஜெயமோகன் சமீபத்தில் எழுதியுள்ள விரிவான கட்டுரை - “ எழுத்தாளனும் சாமான்யனும் ” முக்கியமானது (https://m.jeyamohan.in/124194#.XTqKMsrhWhA). எழுத்தாளனின் கொள்கைநிலை விளக்கமாக அதை பார்க்கிறேன் . ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் அதைப் படிக்க வேண்டும் . தமிழகத்தில் எழுத்தாளர்கள் அந்நியப்படுவதை , பொருளியல் , பண்பாட்டு ஆதரவின்றி சிறுமைப்படுவதை , ஒடுக்கப்படுவதை ஜெயமோகன் குறிப்பிடுகிறார் . அறிவுத்தளத்தை ஒரு சமூகம் பொருட்படுத்தினால் அது எழுத்தாளன் உள்ளிட்ட அறிவுத்தள / கலை செயல்பாட்டாளர்களுக்கு தனி இடமொன்றை அளிக்கும் . இந்த செயல்பாட்டாளர்களே ஒரு சமூகத்தின் ஆன்மாவாக , கனவுகள் பிறக்கும் நிலமாக திகழ்பவர்கள் . சமூகத்தின் அறம் என்பது இந்த படைப்பு , அறிவுசார் குரல்களில் மையம் கொண்டிருக்கும் என்பது ஜெயமோகனின் கூற்று .

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (3)

மிஷிமாவுக்கு மன்னர் மீது தனிப்பட்ட பிரியமோ மன்னராட்சி மீது மயக்கமோ இல்லை . ஆனால் நவீன கார்ப்பரேட் தாக்கம் , எந்திரமயமாக்கலால் மக்கள் அடிமையாகி , ஆன்ம சாரத்தை இழக்கும் நிலை , பாண்பாட்டு வேர்கள் அறுக்கப்பாட்டு சமூகம் மலினப்படும் சூழல் ஆகியவற்றை எதிர்ப்பதற்காக அவர் மன்னரை , அவர் மீதான வழிபாட்டை , ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார் . இந்த செப்புக்கு மூலம் மிஷிமா தெரிவித்த உண்மையானது ஹைடெக்கார் தனது தத்துவத்தில் பேசியது தான் . நீட்சே ஜெர்மனியில் இருந்தபடி “ கடவுள் இறந்து விட்டார் , மீ — மனிதன் தோன்ற வேண்டிய காலம் அருகாமையில் உள்ளது ” என அறைகூவியது தான் .