முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அபிலாஷின் பத்தி எழுத்துகள் - அ. ராமசாமி


தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் . ராமசாமி எனது எழுத்துப் பயணம் பற்றி எழுதி உள்ள குறிப்பை இங்கே பகிர்கிறேன்.

அபிலாஷின் பத்தி எழுத்துகள்
- . ராமசாமி
============================
 உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார்உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும்தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை


கல்விப்புலப்பார்வையையும் விமரிசன நோக்கையும் சம அளவில் கலந்து எழுதும் அவரது கவனம்பட்டு  எழுத்துகளாக மாறியதில் குறிப்பிட வேண்டியனவாக இருப்பனவற்றை உயிர்மை பதிப்பகம் நூல்களாக மாற்றித் தந்துள்ளது. அவை எழுதப்பட்டபோது வாசித்தவைதான் என்றாலும் பின்வரும்  நூல்களைப் புத்தகச் சந்தையில் வாங்கி மொத்தமாக வாங்கிப்படித்தேன்.
1.பெண்கள் இப்படித்தான் யோசிக்கிறார்களா?
2.கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்
3. ME TOO - சில விமர்சனங்கள் 
4..BIG BOSS - துயரத்தை ஏன் கூவி விற்கிறீர்கள்

நடுத்தரவர்க்கம் சார்ந்த வெகுமக்களின் கவனத்தை ஈர்க்கும் கிரிக்கெட், சினிமா, தொலைக்காட்சிச் சிறப்பு நிகழ்ச்சிகள், தன்னெழுச்சியாக எழும்பிவரும் சமூக நிகழ்வுகள் போன்றவற்றைக் குறித்துக் கடந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால்   அவரது புனைவல்லா எழுத்துகளின்  ஓர் சிறப்பு அடையாளம் உருவாகியிருப்பதை அறியலாம்தமிழின் பொது உளவியலுக்குள் செயல்படும் தனிமனிதக் கூறுகளைப் பேசியவர் என்பது அவரது அடையாளமாக ஆகும் என நினைக்கிறேன்
உயிர்மை அச்சிதழில் தொடங்கி, மின்னம்பலம். காம்., இந்துதமிழ், குமுதம், விகடன்.காம். உயிர்மை.காம் என அவர் எழுதிய பெரும்பாலான தொடர்களை வாசித்திருக்கிறேன். இவையெல்லாமல் அவரது வலைப்பக்கமான திருட்டுச்சாவி.காமிலும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருப்பார். தொடர்ச்சியாக எழுதுவதும் வாசிப்பதும் சிலபேருக்கு ஒரு நோய்போன்றது. அபிலாஷுக்கு அந்நோய் விடாது கறுப்பாகத் தொடரும் நோய்.


உளவியல் சார்ந்த கேள்விகளை எழுப்புவதால் அவரது மொழிநடைப் பெரும்பான்மையோரை நோக்கிப் பேசும் தன்மையைத் தவறவிடுகிறது. அதைக் கைப்பற்றுவதற்காகச் சில கதைகள், சில மேற்கோள்கள், சில விவரிப்புமுறை போன்றவற்றைச் செய்தாரென்றால் தமிழின் முக்கியமான - வெகுமக்கள் தளத்தில் எழுதும் பத்தி எழுத்தாளராக மாறிவிடுவார்வாழ்த்துகள் அபிலாஷ்

கருத்துகள்