முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அபிலாஷின் பத்தி எழுத்துகள் - அ. ராமசாமி


தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் . ராமசாமி எனது எழுத்துப் பயணம் பற்றி எழுதி உள்ள குறிப்பை இங்கே பகிர்கிறேன்.

அபிலாஷின் பத்தி எழுத்துகள்
- . ராமசாமி
============================
 உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார்உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும்தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை


கல்விப்புலப்பார்வையையும் விமரிசன நோக்கையும் சம அளவில் கலந்து எழுதும் அவரது கவனம்பட்டு  எழுத்துகளாக மாறியதில் குறிப்பிட வேண்டியனவாக இருப்பனவற்றை உயிர்மை பதிப்பகம் நூல்களாக மாற்றித் தந்துள்ளது. அவை எழுதப்பட்டபோது வாசித்தவைதான் என்றாலும் பின்வரும்  நூல்களைப் புத்தகச் சந்தையில் வாங்கி மொத்தமாக வாங்கிப்படித்தேன்.
1.பெண்கள் இப்படித்தான் யோசிக்கிறார்களா?
2.கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்
3. ME TOO - சில விமர்சனங்கள் 
4..BIG BOSS - துயரத்தை ஏன் கூவி விற்கிறீர்கள்

நடுத்தரவர்க்கம் சார்ந்த வெகுமக்களின் கவனத்தை ஈர்க்கும் கிரிக்கெட், சினிமா, தொலைக்காட்சிச் சிறப்பு நிகழ்ச்சிகள், தன்னெழுச்சியாக எழும்பிவரும் சமூக நிகழ்வுகள் போன்றவற்றைக் குறித்துக் கடந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால்   அவரது புனைவல்லா எழுத்துகளின்  ஓர் சிறப்பு அடையாளம் உருவாகியிருப்பதை அறியலாம்தமிழின் பொது உளவியலுக்குள் செயல்படும் தனிமனிதக் கூறுகளைப் பேசியவர் என்பது அவரது அடையாளமாக ஆகும் என நினைக்கிறேன்
உயிர்மை அச்சிதழில் தொடங்கி, மின்னம்பலம். காம்., இந்துதமிழ், குமுதம், விகடன்.காம். உயிர்மை.காம் என அவர் எழுதிய பெரும்பாலான தொடர்களை வாசித்திருக்கிறேன். இவையெல்லாமல் அவரது வலைப்பக்கமான திருட்டுச்சாவி.காமிலும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருப்பார். தொடர்ச்சியாக எழுதுவதும் வாசிப்பதும் சிலபேருக்கு ஒரு நோய்போன்றது. அபிலாஷுக்கு அந்நோய் விடாது கறுப்பாகத் தொடரும் நோய்.


உளவியல் சார்ந்த கேள்விகளை எழுப்புவதால் அவரது மொழிநடைப் பெரும்பான்மையோரை நோக்கிப் பேசும் தன்மையைத் தவறவிடுகிறது. அதைக் கைப்பற்றுவதற்காகச் சில கதைகள், சில மேற்கோள்கள், சில விவரிப்புமுறை போன்றவற்றைச் செய்தாரென்றால் தமிழின் முக்கியமான - வெகுமக்கள் தளத்தில் எழுதும் பத்தி எழுத்தாளராக மாறிவிடுவார்வாழ்த்துகள் அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...