Skip to main content

வால்



I

நாள்: 28/02/08
பெயர்: அபிட்டோ
மூலம்: செல்வி
கதாபாத்திரம் 1: நான் (செல்வி)
கதாபாத்திரம் 2: பாஷோ (இறைவனடி அடைந்த சாதாரண பூனைக்குட்டி)
கனவு நேரம்: 1 மணி நேரத்திற்கு மேல் (ஒரு வேளை)

"பாஷோ செத்துப் போலேப்பா, நெஜம்மா! நம்பலியா, இப்போ எழுப்பறேன் பார்." சமையலறையில் தூசு படிந்து கிடக்கும் பாத்திரத்தை அலம்பி வெந்நீர் கொதிக்க விடுகிறேன்.
சமையலறை விளக்கு இயங்கவில்லை. அரை இருள். என் தலைக்கு மேல் தொங்கும் சிலந்தி வலை இழை ஒளிக்கீற்று பட்டு துலங்குகிறது. கொதிக்கும் வெந்நீருடன் பாஷோவை நெருங்குகிறேன். தன் பெட்டியில் வாய் திறந்து அசைவற்ற தூக்கம். வழக்கமாய் நம் வீட்டுத்தரையில் ஓடித்திரியுமே பல்லி அது வளர்ந்து இப்போது நம் படுக்கை மேல் நின்று பார்க்கிறது. அதை விரட்டுகிறேன். பாஷோ மேல் வெந்நீர் தெளிக்கிறேன். ஆச்சரியம். என் கைவிரல்கள் சுட்டுவிடவில்லை. ஆனால் பாஷோ, சின்ன அதிர்வுடன், புரண்டு எழ முயல்கிறான். தள்ளாடி எழுந்தபின் மீயாவ் என்று கத்தி, திடீர் ஆவேசத்துடன் ஓடுகிறான். நம் வீட்டு கழிப்பறை நீரை நக்க ஓடுவானே அதே வேகத்தில். துரத்துகிறேன்.

மதில் மேல் பெரிசாய் கறுப்புப் பூனை. முறைக்கிறது. வளர்ந்தால் பாஷோ இதே போல் தான் தோன்றுவானோ? அதற்கு பிளாஸ்டிக் பைபோல் தொங்கும் மடி. பாஷோ மதில் மேல் அசாத்திய லாவகத்துடன் ஏறுகிறான். அவனை வாத்சல்யத்துடன் ஏற்றுக்கொண்டு நக்கிக் கொடுக்கிறது. பாஷோ பால் குடிக்கிறான். அருகில் செல்கிறேன். படுத்த வாக்கிலே சீறுகிறது பெண் பூனை. அப்போதுதான் சூடுபட்டது போல் எரிச்சல் விரல்களில். உதறுகிறேன்.

வீட்டுக்குத் திரும்பினால் மீண்டும் அதே பல்லி படுக்கையில். போர்வைக்கு வெளியே அதன் வால் மட்டும். அருவருப்பாய், பழுப்பில். ஓடிப்போய் அதை பற்றி இழுக்கிறேன். அபரிதமாய் வளர்ந்து விட்டது போல் பல்லியின் வால் அத்தனை நீளம், என் கையளவு. பாஷோவின் வால் அளவு திண்மை. கொஞ்ச நேரம், இழுக்க இழுக்க வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் பல்லி உடலைக் காணவில்லை. என் கையில் மிருதுவான வால் மட்டும். படுக்கையை உதற முயல, கையில் வால் மெலிதாய் அதிர்கிறது. விசிறி எறிகிறேன்.

படுத்த பிறகும் வாந்தி உணர்வு விடவில்லை. முடிவாய் கட்டுப்படுத்த முடியாமல் படுத்தபடியே திரும்பி வாந்தி எடுக்கிறேன். வாயைத் துடைக்காமலே ஆசுவாசமாய் தூங்குகிறேன். காலை எழுந்து பார்த்தால் நான் வாந்தி எடுத்திருக்கவில்லை, அழுதிருக்கிறேன்.

II

கதாபாத்திரம் 1: நான் (அபிட்டோ)
கதாபாத்திரம் 2: நடிகை மேகலா
கதாபாத்திரம் 3: ஆண்குறி (யாருடையதென உறுதியாகவில்லை)
நாள்: 20/02/08
மூலம்: அபிட்டோ
கனவு நேரம்: அரை மணி (நிச்சயமாய்)
பொழுது: மாலை மற்றும் இரவு

ம்... நான் சொல்லப் போறத வச்சுட்டு என் உள்ளார்ந்த ஆசைகள், எண்ணங்கள் பத்தியெல்லாம் தப்புக்கணக்கு போடக்கூடாது. தயவு செஞ்சு! ஏன்னா கனவுங்கறது... ஓ.கே நேரே கனவுக்கே வறேன். நான் வெத்துடம்பா பாறை மேல் உட்கார்ந்து பராக்குப் பாக்குறேன். ஜட்டியாவது போட்டிருந்தேனாண்ணு நினைவில்லை. சுத்திலும் பச்சைப் பசேலுண்ணு மரமும் புதருமா. சன்னமான வெளிச்சம். ரொம்ப நேரமா அடிவானத்தில் வட்டமடிக்கும் ஒரு பருந்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சதா அருவியில் தண்ணீர் விழுந்து சிதறும் சத்தம். அதுவரை அருவியை கவனிக்காதது ஆச்சரியம் தான். எதிரே ஒரு பெண் திறந்த மார்புடன்...நடிகை மேகலா...குளிக்கிறாள். குறுக்கே அடிக்கும் அந்தி வெயிலில் அவள் மார்புகள் பளபளவென துலங்குகின்றன. மிகுந்த உற்சாகம். கனவு மனிதன் மிக இளவயதிலிருந்தே விரும்பிய நடிகை அவள் என்பதைக் குறிப்பிட வேண்டும். ரகசியமாய் கண்காணிக்கும் குறுகுறுப்பு.




அந்த மார்புகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். தோலோடு தோலாக ஒட்டியோ, வீங்கித் தொளதொளவென தொங்கும்படியோ அல்லாமல், அளவாய் ம்... கொட்டங்கச்சி அளவுக்கென்று வைத்துக் கொள்ளேன். சற்றும் தொய்வின்றி, நேர்கொண்ட பார்வையுடைய மார்புகள்.

யோனி தேடி பார்வை கீழே செல்கிறது. மஞ்சள் மயிரடர்ந்த அடிவயிற்றின் ஆரம்பம். அதிமென் சருமம். தொப்புளுக்குக் கீழ் ஒற்றை மயிர் ரேகை. சிவந்த அப்பகுதி, ஓடும் நுண் ரத்தகுழாய்கள் பதைக்க. அதில் ஆயுட்பலனே அடங்கியிருப்பது போல், பயணிக்கும் என் இடக்கண் விடாமல் துடிக்கிறது. அங்கு கோடாய் கிழிவதற்கு பதில் ...விரைத்த ஆண்குறி.

கொட்டும் நீருக்கு வெளியே அவளது ஆண்குறி நீட்டி நிற்கிறது.




ரொம்ப நேரத்திற்குப் பிறகென்று நினைக்கிறேன். படுக்கையில் இடம் வலமாய் புரள்கிறேன். ஒவ்வொரு திசைமாறிக் கிடக்கும்போதும் மனம் நிலைப்பட்டுத் தூங்கும் என்ற நம்பிக்கை. சட்டென இடக்கையில் வழுவழுவென எதுவோ தட்டுப்படுகிறது. புரண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் விரைத்த ஆண்குறி தனியே. ஆனால் என்னுடையதை விட சரி நீளம். தள்ளி விட்டு திரும்பிப் படுக்கிறேன். மீண்டும் தட்டுப்படுகிறது என் பின்னந்தொடையில் வெதுவெதுப்பற்று குளிர்ந்து போய். அதன் நுண்ணிய அதிர்வு எனக்குள் பரவுகிறது. ஆழமான தூக்கத்திற்குத் திரும்புகிறேன்.

III

கனவுகளை பேசி முடித்தபின்...
கதாபாத்திரம்: செல்வி
நாள்: இன்று
பொழுது: எங்கள் அறையில் எப்போதும் ஒரே வெளிச்சம்தான். கடிகாரம் வேறு நின்று விட்டது.

"அம்மாதான், கூப்பிட்டிருந்தாங்க. அவங்க கூட வேலை பாக்குற டீச்சர்ஸ் எல்லாம் எப்ப பாட்டியாகப் போறீங்கன்னு கேட்குறாங்களாம். இவங்க என்னை நோண்டுறாங்க... நான் என்ன செய்ய? எனக்கா ஆசை வரணும்ல."

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...