Skip to main content

வால்



I

நாள்: 28/02/08
பெயர்: அபிட்டோ
மூலம்: செல்வி
கதாபாத்திரம் 1: நான் (செல்வி)
கதாபாத்திரம் 2: பாஷோ (இறைவனடி அடைந்த சாதாரண பூனைக்குட்டி)
கனவு நேரம்: 1 மணி நேரத்திற்கு மேல் (ஒரு வேளை)

"பாஷோ செத்துப் போலேப்பா, நெஜம்மா! நம்பலியா, இப்போ எழுப்பறேன் பார்." சமையலறையில் தூசு படிந்து கிடக்கும் பாத்திரத்தை அலம்பி வெந்நீர் கொதிக்க விடுகிறேன்.
சமையலறை விளக்கு இயங்கவில்லை. அரை இருள். என் தலைக்கு மேல் தொங்கும் சிலந்தி வலை இழை ஒளிக்கீற்று பட்டு துலங்குகிறது. கொதிக்கும் வெந்நீருடன் பாஷோவை நெருங்குகிறேன். தன் பெட்டியில் வாய் திறந்து அசைவற்ற தூக்கம். வழக்கமாய் நம் வீட்டுத்தரையில் ஓடித்திரியுமே பல்லி அது வளர்ந்து இப்போது நம் படுக்கை மேல் நின்று பார்க்கிறது. அதை விரட்டுகிறேன். பாஷோ மேல் வெந்நீர் தெளிக்கிறேன். ஆச்சரியம். என் கைவிரல்கள் சுட்டுவிடவில்லை. ஆனால் பாஷோ, சின்ன அதிர்வுடன், புரண்டு எழ முயல்கிறான். தள்ளாடி எழுந்தபின் மீயாவ் என்று கத்தி, திடீர் ஆவேசத்துடன் ஓடுகிறான். நம் வீட்டு கழிப்பறை நீரை நக்க ஓடுவானே அதே வேகத்தில். துரத்துகிறேன்.

மதில் மேல் பெரிசாய் கறுப்புப் பூனை. முறைக்கிறது. வளர்ந்தால் பாஷோ இதே போல் தான் தோன்றுவானோ? அதற்கு பிளாஸ்டிக் பைபோல் தொங்கும் மடி. பாஷோ மதில் மேல் அசாத்திய லாவகத்துடன் ஏறுகிறான். அவனை வாத்சல்யத்துடன் ஏற்றுக்கொண்டு நக்கிக் கொடுக்கிறது. பாஷோ பால் குடிக்கிறான். அருகில் செல்கிறேன். படுத்த வாக்கிலே சீறுகிறது பெண் பூனை. அப்போதுதான் சூடுபட்டது போல் எரிச்சல் விரல்களில். உதறுகிறேன்.

வீட்டுக்குத் திரும்பினால் மீண்டும் அதே பல்லி படுக்கையில். போர்வைக்கு வெளியே அதன் வால் மட்டும். அருவருப்பாய், பழுப்பில். ஓடிப்போய் அதை பற்றி இழுக்கிறேன். அபரிதமாய் வளர்ந்து விட்டது போல் பல்லியின் வால் அத்தனை நீளம், என் கையளவு. பாஷோவின் வால் அளவு திண்மை. கொஞ்ச நேரம், இழுக்க இழுக்க வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் பல்லி உடலைக் காணவில்லை. என் கையில் மிருதுவான வால் மட்டும். படுக்கையை உதற முயல, கையில் வால் மெலிதாய் அதிர்கிறது. விசிறி எறிகிறேன்.

படுத்த பிறகும் வாந்தி உணர்வு விடவில்லை. முடிவாய் கட்டுப்படுத்த முடியாமல் படுத்தபடியே திரும்பி வாந்தி எடுக்கிறேன். வாயைத் துடைக்காமலே ஆசுவாசமாய் தூங்குகிறேன். காலை எழுந்து பார்த்தால் நான் வாந்தி எடுத்திருக்கவில்லை, அழுதிருக்கிறேன்.

II

கதாபாத்திரம் 1: நான் (அபிட்டோ)
கதாபாத்திரம் 2: நடிகை மேகலா
கதாபாத்திரம் 3: ஆண்குறி (யாருடையதென உறுதியாகவில்லை)
நாள்: 20/02/08
மூலம்: அபிட்டோ
கனவு நேரம்: அரை மணி (நிச்சயமாய்)
பொழுது: மாலை மற்றும் இரவு

ம்... நான் சொல்லப் போறத வச்சுட்டு என் உள்ளார்ந்த ஆசைகள், எண்ணங்கள் பத்தியெல்லாம் தப்புக்கணக்கு போடக்கூடாது. தயவு செஞ்சு! ஏன்னா கனவுங்கறது... ஓ.கே நேரே கனவுக்கே வறேன். நான் வெத்துடம்பா பாறை மேல் உட்கார்ந்து பராக்குப் பாக்குறேன். ஜட்டியாவது போட்டிருந்தேனாண்ணு நினைவில்லை. சுத்திலும் பச்சைப் பசேலுண்ணு மரமும் புதருமா. சன்னமான வெளிச்சம். ரொம்ப நேரமா அடிவானத்தில் வட்டமடிக்கும் ஒரு பருந்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சதா அருவியில் தண்ணீர் விழுந்து சிதறும் சத்தம். அதுவரை அருவியை கவனிக்காதது ஆச்சரியம் தான். எதிரே ஒரு பெண் திறந்த மார்புடன்...நடிகை மேகலா...குளிக்கிறாள். குறுக்கே அடிக்கும் அந்தி வெயிலில் அவள் மார்புகள் பளபளவென துலங்குகின்றன. மிகுந்த உற்சாகம். கனவு மனிதன் மிக இளவயதிலிருந்தே விரும்பிய நடிகை அவள் என்பதைக் குறிப்பிட வேண்டும். ரகசியமாய் கண்காணிக்கும் குறுகுறுப்பு.




அந்த மார்புகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். தோலோடு தோலாக ஒட்டியோ, வீங்கித் தொளதொளவென தொங்கும்படியோ அல்லாமல், அளவாய் ம்... கொட்டங்கச்சி அளவுக்கென்று வைத்துக் கொள்ளேன். சற்றும் தொய்வின்றி, நேர்கொண்ட பார்வையுடைய மார்புகள்.

யோனி தேடி பார்வை கீழே செல்கிறது. மஞ்சள் மயிரடர்ந்த அடிவயிற்றின் ஆரம்பம். அதிமென் சருமம். தொப்புளுக்குக் கீழ் ஒற்றை மயிர் ரேகை. சிவந்த அப்பகுதி, ஓடும் நுண் ரத்தகுழாய்கள் பதைக்க. அதில் ஆயுட்பலனே அடங்கியிருப்பது போல், பயணிக்கும் என் இடக்கண் விடாமல் துடிக்கிறது. அங்கு கோடாய் கிழிவதற்கு பதில் ...விரைத்த ஆண்குறி.

கொட்டும் நீருக்கு வெளியே அவளது ஆண்குறி நீட்டி நிற்கிறது.




ரொம்ப நேரத்திற்குப் பிறகென்று நினைக்கிறேன். படுக்கையில் இடம் வலமாய் புரள்கிறேன். ஒவ்வொரு திசைமாறிக் கிடக்கும்போதும் மனம் நிலைப்பட்டுத் தூங்கும் என்ற நம்பிக்கை. சட்டென இடக்கையில் வழுவழுவென எதுவோ தட்டுப்படுகிறது. புரண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் விரைத்த ஆண்குறி தனியே. ஆனால் என்னுடையதை விட சரி நீளம். தள்ளி விட்டு திரும்பிப் படுக்கிறேன். மீண்டும் தட்டுப்படுகிறது என் பின்னந்தொடையில் வெதுவெதுப்பற்று குளிர்ந்து போய். அதன் நுண்ணிய அதிர்வு எனக்குள் பரவுகிறது. ஆழமான தூக்கத்திற்குத் திரும்புகிறேன்.

III

கனவுகளை பேசி முடித்தபின்...
கதாபாத்திரம்: செல்வி
நாள்: இன்று
பொழுது: எங்கள் அறையில் எப்போதும் ஒரே வெளிச்சம்தான். கடிகாரம் வேறு நின்று விட்டது.

"அம்மாதான், கூப்பிட்டிருந்தாங்க. அவங்க கூட வேலை பாக்குற டீச்சர்ஸ் எல்லாம் எப்ப பாட்டியாகப் போறீங்கன்னு கேட்குறாங்களாம். இவங்க என்னை நோண்டுறாங்க... நான் என்ன செய்ய? எனக்கா ஆசை வரணும்ல."

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...