Skip to main content

அரவிந்த அடிகாவின் "வெள்ளைப் புலி": முதல் அத்தியாயம்

முதல் இரவு

கீழ்வருபவரின் மேசைக்கு

மேதகைய வென் ஜியாபாவோ
பிரீமியரின் அலுவலகம்
பெய்ஜிங்
விடுதலை விரும்பி சீன தேசத்தின் தலை நகரம்

கீழ்வருபவரின் மேசையிலிருந்து
"வெள்ளைப் புலி"
சிந்திக்கும் மனிதன் மற்றும்
சுயதொழில் முனைவோன்
உலகின் தொழிற் நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங்கின் மையத்தில் வாழ்பவன்
எலக்டுரானிக் சிட்டி ஃபேஸ் 1 (ஹொசூர் பிரதான சாலை சற்று தாண்டி)
பெங்களூர், இந்தியா

திரு பிரீமியர் அவர்களே,
சார்,
நீங்களோ நானோ ஆங்கிலம் பெசுவதில்லை; ஆனால் சில விசயங்களை ஆங்கிலத்தில் தான் பேசியாக வேண்டும். இதிலொன்றை எனது முன்னாள் முதலாளி காலமான திரு. அசோக்கின் முன்னாள் மனைவி சொல்லித் தந்தாள்; இன்று இரவு 11:30க்கு, அதாவது பத்து நிமிடத்துக்கு முன், அகில இந்திய வானொலியின் அந்த பெண்மணி "பிரீமியர் ஜியாபாவோ அடுத்த வாரம் பங்களூர் வருகிறார்" என அறிவித்த போது, நான் அதை உடனே சொன்னேன்.



உண்மையில், ஒவ்வொரு முறை உங்களைப் போல் மாமனிதர்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தரும்போதும் நான் அதை சொல்வேன். என் வழியில், சார், நான் என்னை உங்கள் வகையை சார்ந்தவனாக கருதுகிறேன். ஆனால் எப்போதெல்லாம் எங்கள் பிரதமரும் அவரது பெருமை வாய்ந்த தோஸ்துக்களும் விமான நிலையத்துக்கு தங்கள் கருப்பு கார்களில் வந்திறங்கி, டி.வி. படக்கருவி முன் உங்களுக்கு நமஸ்தே செய்து, இந்தியா எத்துணை ஒழுக்கமும், புனிதமும் மிக்கது எனக் கூறும் போது, நான் அந்த ஆங்கிலத்தில் அதனை சொல்ல வேண்டியதாகிறது.


இப்போது, நீங்கள் எங்களுக்கு இவ்வாரம் வருகை தருகிறீர்கள், மேதகையீர், அப்படித்தானே? அகில இந்திய வானொலி இவ்விசயங்களில் நம்பத் தகுந்தது தான்.

அதுவொரு ஜோக், சார்.
ஹா!

அதனால் தான் நீங்கள் நிஜமாகவே பெங்களூர் வருகிறீர்களா என்று நேரடியாகவே கேட்க நினைத்தேன். ஏனென்றால், நீங்கள் வருவதென்றால், முக்கியமானதொன்றை எனக்கு உங்களிடம் சொல்லவுள்ளது. பாருங்கள், வானொலியில் அப்பெண்மணி சொன்னாள், "திரு.ஜியாபாவோ ஒரு லட்சியத்தை மேற்கொண்டுள்ளார்: அவருக்கு பெங்களூர் பற்றின உண்மை தெரிய வேண்டும்"

என் ரத்தம் உறைந்தது. பெங்களூர் பற்றின் உண்மை யாருக்காவது தெரியுமானால் அது நான் தான். அடுத்து, அந்த பெண் அறிவிப்பாளர் சொன்னார், "திரு. ஜியாபாவோ சில இந்திய சுயதொழில் முனைவோரை சந்தித்து, அவர்களின் வெற்றிக் கதையை அவர்கள் உதடுகளில் இருந்தே கேட்க விரும்புகிறார்". அவள் பிறகு சிறிது விளக்கினாள். நிச்சயமாக, எங்கள் நாட்டில், குடிநீர், மின்சாரம், கழிநீர் கட்டமைப்பு, பொதுப்போக்குவரத்து, சுகாதார உணர்வு, ஒழுக்கம், மரியாதை, நேரந்தவறாமை இல்லையென்றாலும், நிச்சயம் சுயதொழில் முனைவோர் உண்டு. அதோடு இந்த சுயதொழில் முனைவோர் -- நாங்கள் சுயதொழில் முனைவோர் -- ஏறத்தாழ அமெரிக்காவையே தற்போது இயக்கும் இந்த அவுட்சோர்சிங் நிறுவனங்கள் அனைத்தையும் அமைத்துள்ளோம். ஆயிரக்கணாக்கானோர். குறிப்பாய் தொழில் நுட்பத்துறையில்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...