Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 16



இது ஒரு திங்கட் கிழமை அன்று நடந்தது. அடுத்து வந்த வாரத்தில் செவ்வாய் கிழமையின் போது, மதிய தூக்க வேளையில், நான் என் நண்பர்களிலேயே மூத்தவரான லூயி கார்மெலோ கொரியாவுடன் பம்பரம் விட்டு கொண்டிருந்த போது பொழுதாகும் முன்னரே தூங்குபவர்கள் எழுந்து ஜன்னலில் இருந்து எட்டிப் பார்ப்பது கண்டு நாங்கள் வியந்தோம்.
அப்போது, ஆளரவமற்ற தெருவில் ஒரு பெண் கராறான் இரங்கல் உடையில், செய்தித்தாளில் பொதிந்த வாடிய பூங்கொத்தை தாங்கிய 12 வயது பெண்ணுடன் வருவதை பார்த்தோம். சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து தங்களை கறுப்பு குடை கொண்டு பாதுகாத்தனர்; அவர்கள் கடந்து செல்வதை வேடிக்கை பார்க்கும் மக்களின் மரியாதை கெட்டத்தனத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
கடந்து போவதை ஜன்னல் வழி ஒரு முழுத்தெருவினால் வேடிக்கை பார்க்கப்படும் ஒற்றைக்கனவைப் போல் இக்காட்சி என்னை பல ஆண்டுகள் தொடர்ந்தது; என் கதை ஒன்றில் எழுதி நான் அதை ஆவியோட்டி சமாளிக்கும் வரை. ஆனால் அந்த பெண் மற்றும் சிறுமியின் கொந்தளிப்பு நிலையை அல்லது குலையாத தன்மானத்தை அந்நாளில் அம்மாவுடன் வீட்டை விற்க சென்று அதே ஆளரவமற்ற தெருவில் அதே பயங்கர வேளையில் நடப்பது எண்ணி அதிர்ச்சி அடையும் வரை நான் உணர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. “ நானே அத்திருடன் என்று உணர்கிறேன்”, நான் சொன்னேன். அம்மா என்னை புரிந்து கொள்ளவில்லை. சொல்வதானால், மரியா கன்சிகுராவின் வீட்டை நாங்கள் கடக்கும் போது, தோட்டாத் துளை மூடப்பட்ட தடயம் அப்போது கூட தெரிந்த கதவை அவள் கடைக்கண்ணால் கூட பார்க்கவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் அவளுடனான அப்பயணத்தை நினைவு கொள்ளும் போது அவள் அந்த துயர நிகழ்வை நினைத்துப் பார்த்தாள். ஆனால் அதை மறக்க தன் ஆன்மாவையே விட்டுக் கொடுத்திருப்பாள் என்பதை உறுதி செய்தாள். பெல்ஜியக்காரன் என்று மேலும் நன்றாக அறியப்பட்ட டான் எமிலியோ வாழ்ந்த வீட்டை நாங்கள் கடக்கையில் இது மேலும் வெளிப்படையாகியது; டான் எமிலியோ முதல் உலகப் போரில் நார்மண்டி கண்ணி வெடிப்பகுதியில் இரண்டு கால்களின் பயன்பாட்டையும் இழந்தவர்; மேலும் ஒரு பெந்தேகோஸ்து ஞாயிற்றுக்கிழமை அன்று தங்க சயனைடின் நறுமண புகைகொண்டு ஞாபகத்தின் சித்திரவதைகளில் இருந்து தப்பினார். எனக்கு ஆறு வயதுக்கு மேல் இருந்திருக்காது; ஆனால் ஏதோ அச்செய்தி ஏற்படுத்திய தடுமாற்றம் நேற்று காலை ஏழு மணிக்கு நிகழ்ந்தது போல் நினைவுள்ளது. அச்செய்தி எந்தளவுக்கு நினைவில் பதிந்திருந்தது என்றால், வீட்டை விற்க அம்மாவுடன் நகரத்துக்கு திரும்பிய போது 20 வருடங்களுக்கு பின் அம்மா தன் மவுனத்தை கடைசியாக கலைத்தாள். “பாவம் அந்த பெல்ஜியக்காரன்”, பெருமூச்சுடன் சொன்னாள், “ நீ சொன்னது போலவே அவர் பிறகு செஸ் ஆடவே இல்லை”

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...