முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூனையும் காலசக்கரமும்

காலத்துக்கு உதடுகள் உண்டென்றால் அவை சதா புன்னகைத்தபடியே இருக்க வேண்டும். மாற்றங்களின் வீச்சில் அத்தனை வேடிக்கைகள். மனித வரலாற்றில், உங்களது எனது அன்றாட வாழ்வில் இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. எனினும் ஒரு மாற்றத்துக்கு பூனையிடம் இருந்து ஒரு கதை சொல்கிறேன்.

எங்கள் வீட்டில் இரண்டாவது பூனை வந்த போது ஏற்கனவே ஒரு முதல் பூனை இருந்திருக்கும் என்பதை இதை படித்து முடிக்கும் முன்னரே ஊகித்திருப்பீர்கள். முதல் பூனை நாட்டு வகை. ஐந்தரை அடி உயர மனிதனின் முழங்கை அளவு நீளம். சராசரி உயரம். பூனை 2 நாலே வாரங்கள். பெண்களின் கைக்குட்டையை கசக்கி வைத்தது போன்ற தோற்றம். நாங்கள் பயந்தது போன்றே பூனை 2 வந்ததும் மூத்ததுக்கு பயங்கர கோபம். குட்டியை நாங்கள் பொத்தி பொத்தி காக்க வேண்டி இருந்தது. அறைக்குள் சதா பூட்டி வைத்தோம். ஆனால் பூனை 1 பல்லைக் காட்டி பாம்பு போல் ஓசை எழுப்பி சீறியது. பார்க்கும் போது எல்லாம் பாய்ந்தது. குட்டிப் பூனைக்கோ மூத்த பூனை தன் தாயை நினைவூட்டி இருக்க வேண்டும். ஆசையாக அருகில் சென்று கடியும் பிறாண்டல்களும் பெற்றது.



குட்டிப் பூனை சாப்பாட்டுக் கிண்ணம் அருகே சென்றால் மூத்த பூனை துரத்தியது. கார்ட்போர்டு பெட்டிக்குள் தூங்கினால் விரட்டியது. பிளாஸ்டிக் பந்து விளையாடினால் தட்டிப் பறித்தது. இப்படி நம்மூர் சாதி நிலவரம் தான். அப்போது குட்டிப் பூனையை பார்க்க பாவமாக இருந்தாலும் சீக்கிரமே நிலைமை தலைகீழாகும் என்று தோன்றியது. காரணம் குட்டிப் பூனை persian எனும் பெரிய வகை பூனை. ஜடை நாய் உயரத்துக்கு வளரும். ஒரே மாதத்தில் குட்டிப் பூனை திரும்ப துரத்தி விட்டு பதுங்கிக் கொள்ள ஆரம்பித்தது. பெரிசு சற்று சந்தேகத்துடன் குட்டியின் வளர்ச்சியை கவனித்தது. அசுர வேகத்தில் வளர்ந்து ஆறே மாதத்தில் பெரிசை விட உயரமாக பருமனாக தோற்றம் அளித்தது. பிறகு பொழுது போகாவிட்டால் பூனை 1-ஐ துரத்தி அடிக்கிறது. தூங்க விடாமல அதன் வாலை கடித்து சீண்டுகிறது. பெரிசு திடீரென்று பயங்கர பொறுமைசாலி ஆகி விட்டது. நாளுக்கு நாள் தன் இருப்பின் நெருக்கடியை உணர்ந்து வருகிறது. ரெண்டு வயது நாட்டுப் பூனை ரெண்டு கிலோ என்றால் ஒரு வயது பெர்ஷியன் புனை ஆறு கிலோ கனக்கும். அதாவது இன்னும் ஆறு மாதங்களில் பெரிசை விட சிறிசு மும்மடங்கு பெரிசாகி விடும்.



உங்கள் வாழ்வில் இது போல் பல சம்பவங்கள் பார்த்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம், வாசித்திருக்கலாம். எனக்கு எழுதுங்கள்.

கருத்துகள்

Madumitha இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லா அலுவலகத்திலும்
நடக்கும் SENIOR,JUNIOR
பிறாண்டல்கள்தான்
உங்கள் பூனைகளின்
கதை.
www.thalaivan.com இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை. என்ன, ஜூனியர்களை அவ்வளவு எளிதில் யாரும் வளர விடுவதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...