Skip to main content

Posts

Showing posts from September, 2010

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள் - ஆர்தர் சி கிளார்க்

”இது சற்று விசித்திரமான வேண்டுகோள் தான்”, பாராட்டத்தக்க கட்டுப்பாடு என்று தான் எதிர்பார்த்த ஒன்றுடன் டாக்டர் வாக்னர் கேட்டார். “எனக்கு தெரிந்த வரையில் ஒரு திபத்திய மடாலயத்துக்கு ஆட்டோமெட்டிக் சீக்குவன்ஸ் கணினி வழங்கும்படி கேட்கப்பட்டது இதுவே முதன் முறை. நான் அத்துமீறி ஆர்வம் காட்ட விரும்பவில்லை, ஆனால், உங்கள் உ ...ம்... நிறுவனத்துக்கு இத்தகைய ஒர் எந்திரத்தினால் பயனுண்டு என்று நான் சிறிதும் நினைத்திருக்க மாட்டேன். நீங்கள் அதைக் கொண்டு என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள் என்று தயவு கூர்ந்து விளக்க முடியுமா?”

T20 கிரிக்கெட்டும் குஸ்தி பயில்வானின் சங்கடமும்

குறைநீள பந்து வீச்சை ஆடுவது பற்றி நினைவுகூரும் போது சஞ்சய் மஞ்சுரேக்கர் “அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க மட்டையாளர்களைப் பார்த்தால் எங்களுக்கு அசூயையாக இருக்கும். நாங்கள் குறைநீள பந்திற்கு வெளியேறாமல் எப்படி சமாளிப்பது என்று கவலைப்படுகையில், அவர்களோ அதை ஒரு ஓட்டமெடுக்கும் வாய்ப்பாக கருதி நேர்மறையாக ஆடினர் ” . என்கிறார். சஞ்சய் குறிப்பிடும் தொண்ணூறுகளுக்கு முன்பிருந்தே இந்திய கிரிக்கெட்டர்களுக்கு குறைநீளப் பந்து முதுகில் தொற்றிய முள்ளாகத் தான் இருந்து வந்துள்ளது.

ஆர்.பிரகதீசின் ”உணர்வு”: வெளியேற்றமும் மனவிகாசமும்

திரைக்கதை மற்றும் இயக்கம்: ஆர்.பிரகதீஷ் நடிப்பு: பிரவீன் மற்றும் ஜானி குரல்கள்: ஆர்.பிரகதீஷ் மற்றும் புவனேஷ்வரி ஒளிப்பதிவு: ஆர்.அரவிந்த் படத்தொகுப்பு: டி.சிவமணி ஆர்.பிரகதீசின் இக்குறும்படம், மேலோட்டமாக சொல்வதானால், ஒரு சிறுவனுக்கும் நாய்க்குமான நட்பைப் பற்றியது. இன்னும், அந்நாய் தான் வாழும் தெருவுடன் கொள்ளும் பந்தத்தை பற்றியது. ஒரு மிகச் சின்ன இழையை நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் திரைக்கதையாக இயக்குநர் பின்னி வளர்த்துள்ளது படத்துக்குள் எளிதில் நுழைந்து அடையாளம் காண, மனம் ஒன்ற பார்வையாளனை தூண்டுகிறது.

என்.டி ராஜ்குமார்: கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல்

என்.டி ராஜ்குமார் தனது உச்சாடன தொனி மற்றும் தனித்துவமான நடைக்காக முதல் தொகுப்பான “ தெறியிலிருந்தே ” கவனிக்கப்பட்டவர். தலித் கவிதை வரலாற்றில் நிலைபெற்ற பெயர். அவரது ஆறாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு குட்டிரேவதியின் “பூனையைப் போல் அலையும் வெளிச்சத்தை ” போல் நம்மை நெடுநேரம் அட்டைப் பக்கத்திலேயே நிலைக்க வைப்பது: ” சொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள் ” .

வாக்குமூலம் - புக்காவஸ்கி

மரணத்துக்கு காத்திருக்கிறேன் படுக்கை மேல் தாவும் ஒரு பூனை போல் என் மனைவிக்காக ரொம்ப ரொம்ப இரக்கப்படுகிறேன்

கிளாடிஸ் உணர்கிறாள் -ஜிம் ஹென்ரி

தாமரை இதழில் வெளியான எனது மொழியாக்கம் புல்வெட்டும் எந்திரத்தை புல்லுக்கு குறுக்காய் தள்ளிய போது கிளாடிஸ் அம்மாவை மூச்சுக்குக் கீழ் சபித்துக் கொண்டாள். அவளது சகோதரன் எடி நேர்கோடுகளை எப்போதும் உருவாக்குவான், ஆனால் அதை செய்வது அவளுக்கு சாத்தியமற்றதாகவே படுகிறது. வெக்கை தாங்கவொண்ணா விதம் உள்ளது; கிளாடிஸுக்கு போதை களைப்பு வேறு.

பயணக் குறிப்புகள்: கலையாத சதுரங்கப் பலகையும், கச்சிதமான நூலகமும்

போன மாத இறுதியில் சில சான்றிதழ்களை எடுத்து வர சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு செல்ல வேண்டி இருந்தது; சில தனிப்பட்ட காரணங்களுக்காக அது ஒரு சற்று நீண்ட சுற்றுப் பயணமாக முடிந்தது. பெங்களூர் சென்று அங்கிருந்து ஊருக்கு சென்றேன். அங்கே இருந்த இரண்டு நாட்களில் முடிந்த வரையில் நண்பர்களை சந்தித்தேன். புதுச்சூழலிலோ அல்லது நீண்ட காலம் கழித்தோ சில நண்பர்களை சந்திக்கும் போது வினோதமான ஒன்று புலப்படுகிறது: அவர்கள் அதே சுற்றுப் பாதையில் அதே பாவனைகளுடன் செல்கிறார்கள் என்பது அது. பிரச்சனைகளும், புகார்களும், தீர்வுகளும் மாறுவதே இல்லை.

சில கேள்விகள்: மகிழ்ச்சி விழைவும் பக்தியும்

டீக்கடையில் ஒட்டுக் கேட்டதில் ஒரு குடும்ப விசாரணை உரையாடல். கொஞ்சம் ஆரோக்யமான இடைவெளியுடன் இந்திய பாணியில் கராறாக குடும்பம் பற்றி மட்டுமேயான, அக்கறையும், கவலைகளும், புகார்களும், யோசனைகளும் கலந்த, ஒரு உரையாடல் – நாற்பதைத் தொடும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்.

பைத்தியங்கள் என்னை எப்பொதும் நேசித்தனர் - புக்காவஸ்கி

அத்தோடு மந்தபுத்திகளும் ஆரம்பப் பள்ளியில் ஜூனியர் உயர்பள்ளியில் உயர் நிலை பள்ளியில் ஜூனியர் கல்லூரியில் வேண்டப்படாதவர் தங்களை என்னோடு இணைத்துக் கொள்வர்

தும்பிகள்

வல்லினம் இதழில் வெளியான சிறுகதை வாழ்வின் இறுதி நாட்களை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்த கபாலீஸ்வரன் தன் கல்லூரி நாட்களை ஒரு முறை விரல் விடாமல் எண்ணிப் பார்த்தான். எரிச்சலோடு சிகரெட் புகையை இழுத்து விட்டுக் கொண்டான். சிகரெட் நுனி கனன்று தகித்தது. எதிரே உட்கார்ந்திருந்த பூனைக் குட்டி கூர்ந்து பார்த்தது.

உலகக் கோப்பை: தோனியின் முன்னுள்ள இரு கேள்விகள்

வரப்போகும் கிரிக்கெட் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், கட்டி எழுப்பப்படும் அவநம்பிக்கைகளும் சற்று மிகையானவையே. சமீபத்திய சில ஏமாற்றங்களை கணக்கில் கொண்டாலும் சொந்த ஆடுகளங்களில் இந்தியா மிக வலுவான அணியாகவே உள்ளது. அணிகளின் இதுவரையிலான பொதுவான ஆட்டவரலாற்றின் படி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் கோப்பையை வெல்லும் சரிசமமான வாய்ப்பு இந்தியாவுக்கும் உண்டு.

இந்திய பந்து வீச்சின் பொற்காலமும் வரலாற்றின் அழுத்தமும்

தற்போதைய இந்திய அணியை அலசும் விமர்சகர்கள் முதலில் சுட்டுவது பந்துவீச்சு பலவீனத்தை தான். தோனியின் நான்கு வருடங்களுக்கு மேலான தலைமையின் கீழ் நமது வீச்சாளர்கள் நேர்ச்சை ஆடுகளாக எப்போதும் தோற்றம் அளித்து வந்துள்ளார்கள். முன்னணி பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு சவால் விட வேறு யாரும் இல்லாத காரணத்தினாலே தொடர்ந்து இடத்தை தக்க வைக்கும் வருந்தத்தக்க நிலைமை உள்ளது.

ஒரு விபரீத நாள் - சார்லஸ் புக்காவஸ்கி

 ஹாலிவுட் பார்க்கில் வெக்கையான , சோர்வான நாட்களில் ஒன்றான அன்று பெருங்கூட்டத்துடன் ,  சோர்வுறும் , முரட்டுத்தனமான , முட்டாள்  கூட்டம்

மனைவிக்கு ஒரு பிறந்தநாள் கவிதை

மிகச்சிறந்த தருணங்களும் ஆகப்பெரும் துயரங்களும் கடந்து செல்ல அனுமதித்தோம் மறக்க முடியாத மறக்க விரும்பாத துக்கங்களை நாட்காட்டியின் துடிக்கும் தாள்களில் குறித்து வைக்கவில்லை