முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைத்தியங்கள் என்னை எப்பொதும் நேசித்தனர் - புக்காவஸ்கி





அத்தோடு மந்தபுத்திகளும்

ஆரம்பப் பள்ளியில்
ஜூனியர் உயர்பள்ளியில்
உயர் நிலை பள்ளியில்
ஜூனியர் கல்லூரியில்
வேண்டப்படாதவர் தங்களை
என்னோடு
இணைத்துக் கொள்வர்

ஒற்றைக் கையர்கள்
முகத்தசை இழுப்புடையோர்
பேச்சுக் குறைபாடுடையவர்
ஒற்றைக் கண்ணின் மேல்
வெண்படலம் கொண்டவர்
பயந்தாங்கொள்ளிகள்
மானிட வெறுப்பாளர்கள்
கொலைகாரர்கள்
ஒளிந்துபார்க்கும் கிறுக்கர்கள்
மற்றும் திருடர்கள்

தொழிற்ச்சாலைகளில் எல்லாம்
என் குண்டிக்கு பின்னும்
வேண்டப்படாதவர்களை என்பால்
கவர்ந்தேன்

உடனடியாய்
அவர்கள் என்னை கண்டு கொண்டனர், என்னோடு
ஒட்டிக் கொண்டனர், இப்போதும்
கூட அவர்கள் அதைச் செய்வதுண்டு.

இப்போதிருக்கும் அண்டைப்பகுதியில்
என்னை கண்டுகொண்ட
ஒருவன் இருக்கிறான்.
குப்பை ரொம்பிய
ஓரு ஷாப்பிங் தள்ளுவண்டியை
தள்ளிச் செல்வான்:
உடைந்த கழிகள், ஷூ வார்இழைகள்,
காலி உருளைக்கிழங்கு வறுவல் பைகள்,
பால்பைகள், தினசரிகள், பேனா வைப்பான்கள்...
"என்ன நண்பா எப்படிக்கீறே?"
நான் நிற்பேன், நாங்கள் சற்று நேரம்
பேசுவோம்

பிறகு நான் வணக்கம் சொல்லிப் பிரிவேன்.
ஆனால் அவன் என்னைப்
பின்தொடர்வான்.

பீர் கடைகள்
காதல் கடைகள்
கடந்து
"எனக்கு அறிவூட்டு
நண்பா, அறிவூட்டு.
என்ன நடக்கிறது என்பது
எனக்கு அறிய வேண்டும்"

இவன் புதியவன்
வேறு யாரிடமும்
இவன் பேசி
நான் இதுவரைப் பார்த்ததில்லை

தள்ளுவண்டி
எனக்குப் பின்னால்
கலகலத்து சற்று வருகிறது

பிறகு எதுவோ
கீழே விழுகிறது
அதை எடுக்க
அவன் நிற்கிறான்

அவன் அவ்வாறு செய்ய நான்
முனையில் உள்ள
பச்சை உணவகத்து
முன்கதவு வழியாக
நடந்து செல்கிறேன்

பொதுஅறையைத்
தாண்டி
பின்கதவுக்கு வந்து
சேர்கிறேன், மேலும்
அங்கு ஒரு பூனை
முழு ஆனந்தத்தில்
பீ இடுகிறது
அது என்னைப் பார்த்து
இளிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.