முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு விபரீத நாள் - சார்லஸ் புக்காவஸ்கி





 ஹாலிவுட் பார்க்கில் வெக்கையான, சோர்வான நாட்களில் ஒன்றான அன்று

பெருங்கூட்டத்துடன்,

 சோர்வுறும், முரட்டுத்தனமான, முட்டாள்

 கூட்டம்



கடைசிப் போட்டியில் வென்று விட்டேன், வாங்குவதற்கு காத்திருந்தேன்,

என் காரை நெருங்கிய போது

அப்பகுதியிலிருந்து வெளியேற முயல்வதற்கான

ஒரு பிரம்மாண்ட போக்குவரத்து நெரிசல்


ஆக என் ஷூக்களை கழற்றினேன், காத்திருந்தேன், வானொலியை

இயக்கினேன், அதிஷ்டவசமாய் சிறிது பாரம்பரிய இசை ஒலித்தது, ஒரு பின்ட்

ஸ்காட்ச் காரின் சின்ன சேமிப்பறையிருந்தது,

மூடியைத் திறந்து ஒரு மடக்கு



இவர்களெல்லாம் இங்கிருந்து கிளம்பும்வரை பொறுத்திருப்பேன்,

நான் எண்ணினேன், பிறகு நான் கிளம்புவேன்

முக்கால் சிகர் கிடைத்தது, பற்ற வைத்தேன், மற்றொரு

ஸ்காட்ச் மடக்கு

இசை கேட்டேன், புகை பிடித்தேன்,

ஸ்காட்ச் அருந்தினேன், தோற்றவர்கள் கிளம்புவதை

வேடிக்கை பார்த்தேன்


100 யார்டுகள் கிழக்கே 

மட்டமான சிறு ஆட்டமொன்று வேறு

நடந்து கொண்டிருந்தது



பிறகு அதுவும் முடிந்தது

விஸ்கியை காலி செய்ய முடிவு செய்தேன்


அப்படியே செய்து, பின் இருக்கையில்

கால் நீட்டி படுத்தேன்.


எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன்

என்று தெரியாது

ஆனால் நான் விழித்தபோது இருட்டியிருந்தது

வண்டி நிறுத்துமிடம் காலியாயிருந்தது


ஷுக்களை மாட்ட வேண்டாமென தீர்மானித்து, காரை இயக்கி

அங்கிருந்து வெளியேறினேன்


என் இடத்தை அடைந்த போது

தொலைபேசி மணியடிப்பது கேட்டது


சாவி நுழைத்து கதவைத் திறந்த போது

தொலைபேசி தொடந்து மணியடித்தது


நடந்து சென்று

தொலைபேசியை எடுத்தேன்


"ஹலோ"


"தேவடியா மவனே எங்கே போயிருந்தாய்"


"ஓடுதளத்துக்கு"


"ஓடுதளமா? மணி இப்போது 12:30 a.m.!

7 p.m. இலிருந்தே உன்னை அழைத்துக்

கொண்டிருக்கிறேன்"


"ஓடுதளத்திலிருந்து இப்போது தான்

வந்தேன்"


"எவகூட இருந்தே அங்கே"


"இல்லை"

"உன்னை நம்ப மாட்டேன்"

தொலைபேசியை வைத்தாள்.


குளிர்பதன பெட்டியிடம் சென்றேன், பீர் ஒன்று எடுத்தேன்,

குளியலறை போனேன்,

தொட்டியில் நீர் திறந்து விட்டேன்.

பீரை தீர்த்தேன், மற்றொன்று எடுத்தேன், திறந்தேன்,


தொட்டிக்குள் இறங்கினேன்.

தொலைபேசி மீண்டும்

அடித்தது


பீரோடு தொட்டியிலிருந்து வெளியேறினேன்,

சொட்ட சொட்ட

தொலைபேசியிடம் சென்றேன்,

அதை எடுத்தேன்


"ஹலோ"

"தேவடியா பையா, நான்

இப்போதும் உன்னை நம்பவில்லை"


அவள் துண்டித்தாள்.

எனது பீரோடு நான் தொட்டிக்கு திரும்ப நடந்து சென்றேன்

மற்றொரு நீர்த் தடத்தை

பின் விட்டு


நான் தொட்டியை அடைந்த போது

தொலைபேசி மீண்டும்

அடித்தது


அதை அடிக்க விட்டேன், மணி ஒலிகளை

எண்ணியபடி: 1,2,3,4,5,6,7,8,9

10,11,12,13,14,15,

16 ...

அவள் வைத்தாள்.

பிறகு , ஒருவேளை, 3 அல்லது 4 நிமிடங்கள்

கழிந்திருக்கும்.


தொலைபேசி மீண்டும்

அடித்தது.


மணி ஒலிகளை எண்ணினேன்:

1,2,3,4,5,6,7,8

9


பிறகு

அமைதி


அப்போது காரில் என் ஷூக்க்ளை

மறந்து விட்டிருந்ததை

நினைவு கூர்ந்தேன்.


பரவாயில்லைதான், என்னிடம்

ஒரு ஜோடி மட்டுமே இருந்தது என்பதைத் தவிர.


அந்த காரை ஒருபோதும் யாரும்

திருட விரும்ப மாட்டார்கள்

என்பதற்கு, ஒருவேளை, வாய்ப்பிருந்தது.


தொட்டியை விட்டு இறங்கினேன்

மற்றொரு பீருக்காக

மற்றொரு தடத்தை

பின்னால் விட்டு


அது ஒரு

நீண்ட

நீண்ட

நாளின்

முடிவு.

கருத்துகள்

vinu இவ்வாறு கூறியுள்ளார்…
escuseme sorry bro puriyaliyeaaaa
vinu இவ்வாறு கூறியுள்ளார்…
meendum meendum meendumeana 3, 4 murai padithean eatho purinthamaathiri irrukkirathuuuu


pattasuu
Haiku charles இவ்வாறு கூறியுள்ளார்…
Nandru

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...