Skip to main content

ஒரு விபரீத நாள் - சார்லஸ் புக்காவஸ்கி





 ஹாலிவுட் பார்க்கில் வெக்கையான, சோர்வான நாட்களில் ஒன்றான அன்று

பெருங்கூட்டத்துடன்,

 சோர்வுறும், முரட்டுத்தனமான, முட்டாள்

 கூட்டம்



கடைசிப் போட்டியில் வென்று விட்டேன், வாங்குவதற்கு காத்திருந்தேன்,

என் காரை நெருங்கிய போது

அப்பகுதியிலிருந்து வெளியேற முயல்வதற்கான

ஒரு பிரம்மாண்ட போக்குவரத்து நெரிசல்


ஆக என் ஷூக்களை கழற்றினேன், காத்திருந்தேன், வானொலியை

இயக்கினேன், அதிஷ்டவசமாய் சிறிது பாரம்பரிய இசை ஒலித்தது, ஒரு பின்ட்

ஸ்காட்ச் காரின் சின்ன சேமிப்பறையிருந்தது,

மூடியைத் திறந்து ஒரு மடக்கு



இவர்களெல்லாம் இங்கிருந்து கிளம்பும்வரை பொறுத்திருப்பேன்,

நான் எண்ணினேன், பிறகு நான் கிளம்புவேன்

முக்கால் சிகர் கிடைத்தது, பற்ற வைத்தேன், மற்றொரு

ஸ்காட்ச் மடக்கு

இசை கேட்டேன், புகை பிடித்தேன்,

ஸ்காட்ச் அருந்தினேன், தோற்றவர்கள் கிளம்புவதை

வேடிக்கை பார்த்தேன்


100 யார்டுகள் கிழக்கே 

மட்டமான சிறு ஆட்டமொன்று வேறு

நடந்து கொண்டிருந்தது



பிறகு அதுவும் முடிந்தது

விஸ்கியை காலி செய்ய முடிவு செய்தேன்


அப்படியே செய்து, பின் இருக்கையில்

கால் நீட்டி படுத்தேன்.


எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன்

என்று தெரியாது

ஆனால் நான் விழித்தபோது இருட்டியிருந்தது

வண்டி நிறுத்துமிடம் காலியாயிருந்தது


ஷுக்களை மாட்ட வேண்டாமென தீர்மானித்து, காரை இயக்கி

அங்கிருந்து வெளியேறினேன்


என் இடத்தை அடைந்த போது

தொலைபேசி மணியடிப்பது கேட்டது


சாவி நுழைத்து கதவைத் திறந்த போது

தொலைபேசி தொடந்து மணியடித்தது


நடந்து சென்று

தொலைபேசியை எடுத்தேன்


"ஹலோ"


"தேவடியா மவனே எங்கே போயிருந்தாய்"


"ஓடுதளத்துக்கு"


"ஓடுதளமா? மணி இப்போது 12:30 a.m.!

7 p.m. இலிருந்தே உன்னை அழைத்துக்

கொண்டிருக்கிறேன்"


"ஓடுதளத்திலிருந்து இப்போது தான்

வந்தேன்"


"எவகூட இருந்தே அங்கே"


"இல்லை"

"உன்னை நம்ப மாட்டேன்"

தொலைபேசியை வைத்தாள்.


குளிர்பதன பெட்டியிடம் சென்றேன், பீர் ஒன்று எடுத்தேன்,

குளியலறை போனேன்,

தொட்டியில் நீர் திறந்து விட்டேன்.

பீரை தீர்த்தேன், மற்றொன்று எடுத்தேன், திறந்தேன்,


தொட்டிக்குள் இறங்கினேன்.

தொலைபேசி மீண்டும்

அடித்தது


பீரோடு தொட்டியிலிருந்து வெளியேறினேன்,

சொட்ட சொட்ட

தொலைபேசியிடம் சென்றேன்,

அதை எடுத்தேன்


"ஹலோ"

"தேவடியா பையா, நான்

இப்போதும் உன்னை நம்பவில்லை"


அவள் துண்டித்தாள்.

எனது பீரோடு நான் தொட்டிக்கு திரும்ப நடந்து சென்றேன்

மற்றொரு நீர்த் தடத்தை

பின் விட்டு


நான் தொட்டியை அடைந்த போது

தொலைபேசி மீண்டும்

அடித்தது


அதை அடிக்க விட்டேன், மணி ஒலிகளை

எண்ணியபடி: 1,2,3,4,5,6,7,8,9

10,11,12,13,14,15,

16 ...

அவள் வைத்தாள்.

பிறகு , ஒருவேளை, 3 அல்லது 4 நிமிடங்கள்

கழிந்திருக்கும்.


தொலைபேசி மீண்டும்

அடித்தது.


மணி ஒலிகளை எண்ணினேன்:

1,2,3,4,5,6,7,8

9


பிறகு

அமைதி


அப்போது காரில் என் ஷூக்க்ளை

மறந்து விட்டிருந்ததை

நினைவு கூர்ந்தேன்.


பரவாயில்லைதான், என்னிடம்

ஒரு ஜோடி மட்டுமே இருந்தது என்பதைத் தவிர.


அந்த காரை ஒருபோதும் யாரும்

திருட விரும்ப மாட்டார்கள்

என்பதற்கு, ஒருவேளை, வாய்ப்பிருந்தது.


தொட்டியை விட்டு இறங்கினேன்

மற்றொரு பீருக்காக

மற்றொரு தடத்தை

பின்னால் விட்டு


அது ஒரு

நீண்ட

நீண்ட

நாளின்

முடிவு.

Comments

vinu said…
escuseme sorry bro puriyaliyeaaaa
vinu said…
meendum meendum meendumeana 3, 4 murai padithean eatho purinthamaathiri irrukkirathuuuu


pattasuu

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...