Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு விபரீத நாள் - சார்லஸ் புக்காவஸ்கி





 ஹாலிவுட் பார்க்கில் வெக்கையான, சோர்வான நாட்களில் ஒன்றான அன்று

பெருங்கூட்டத்துடன்,

 சோர்வுறும், முரட்டுத்தனமான, முட்டாள்

 கூட்டம்



கடைசிப் போட்டியில் வென்று விட்டேன், வாங்குவதற்கு காத்திருந்தேன்,

என் காரை நெருங்கிய போது

அப்பகுதியிலிருந்து வெளியேற முயல்வதற்கான

ஒரு பிரம்மாண்ட போக்குவரத்து நெரிசல்


ஆக என் ஷூக்களை கழற்றினேன், காத்திருந்தேன், வானொலியை

இயக்கினேன், அதிஷ்டவசமாய் சிறிது பாரம்பரிய இசை ஒலித்தது, ஒரு பின்ட்

ஸ்காட்ச் காரின் சின்ன சேமிப்பறையிருந்தது,

மூடியைத் திறந்து ஒரு மடக்கு



இவர்களெல்லாம் இங்கிருந்து கிளம்பும்வரை பொறுத்திருப்பேன்,

நான் எண்ணினேன், பிறகு நான் கிளம்புவேன்

முக்கால் சிகர் கிடைத்தது, பற்ற வைத்தேன், மற்றொரு

ஸ்காட்ச் மடக்கு

இசை கேட்டேன், புகை பிடித்தேன்,

ஸ்காட்ச் அருந்தினேன், தோற்றவர்கள் கிளம்புவதை

வேடிக்கை பார்த்தேன்


100 யார்டுகள் கிழக்கே 

மட்டமான சிறு ஆட்டமொன்று வேறு

நடந்து கொண்டிருந்தது



பிறகு அதுவும் முடிந்தது

விஸ்கியை காலி செய்ய முடிவு செய்தேன்


அப்படியே செய்து, பின் இருக்கையில்

கால் நீட்டி படுத்தேன்.


எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன்

என்று தெரியாது

ஆனால் நான் விழித்தபோது இருட்டியிருந்தது

வண்டி நிறுத்துமிடம் காலியாயிருந்தது


ஷுக்களை மாட்ட வேண்டாமென தீர்மானித்து, காரை இயக்கி

அங்கிருந்து வெளியேறினேன்


என் இடத்தை அடைந்த போது

தொலைபேசி மணியடிப்பது கேட்டது


சாவி நுழைத்து கதவைத் திறந்த போது

தொலைபேசி தொடந்து மணியடித்தது


நடந்து சென்று

தொலைபேசியை எடுத்தேன்


"ஹலோ"


"தேவடியா மவனே எங்கே போயிருந்தாய்"


"ஓடுதளத்துக்கு"


"ஓடுதளமா? மணி இப்போது 12:30 a.m.!

7 p.m. இலிருந்தே உன்னை அழைத்துக்

கொண்டிருக்கிறேன்"


"ஓடுதளத்திலிருந்து இப்போது தான்

வந்தேன்"


"எவகூட இருந்தே அங்கே"


"இல்லை"

"உன்னை நம்ப மாட்டேன்"

தொலைபேசியை வைத்தாள்.


குளிர்பதன பெட்டியிடம் சென்றேன், பீர் ஒன்று எடுத்தேன்,

குளியலறை போனேன்,

தொட்டியில் நீர் திறந்து விட்டேன்.

பீரை தீர்த்தேன், மற்றொன்று எடுத்தேன், திறந்தேன்,


தொட்டிக்குள் இறங்கினேன்.

தொலைபேசி மீண்டும்

அடித்தது


பீரோடு தொட்டியிலிருந்து வெளியேறினேன்,

சொட்ட சொட்ட

தொலைபேசியிடம் சென்றேன்,

அதை எடுத்தேன்


"ஹலோ"

"தேவடியா பையா, நான்

இப்போதும் உன்னை நம்பவில்லை"


அவள் துண்டித்தாள்.

எனது பீரோடு நான் தொட்டிக்கு திரும்ப நடந்து சென்றேன்

மற்றொரு நீர்த் தடத்தை

பின் விட்டு


நான் தொட்டியை அடைந்த போது

தொலைபேசி மீண்டும்

அடித்தது


அதை அடிக்க விட்டேன், மணி ஒலிகளை

எண்ணியபடி: 1,2,3,4,5,6,7,8,9

10,11,12,13,14,15,

16 ...

அவள் வைத்தாள்.

பிறகு , ஒருவேளை, 3 அல்லது 4 நிமிடங்கள்

கழிந்திருக்கும்.


தொலைபேசி மீண்டும்

அடித்தது.


மணி ஒலிகளை எண்ணினேன்:

1,2,3,4,5,6,7,8

9


பிறகு

அமைதி


அப்போது காரில் என் ஷூக்க்ளை

மறந்து விட்டிருந்ததை

நினைவு கூர்ந்தேன்.


பரவாயில்லைதான், என்னிடம்

ஒரு ஜோடி மட்டுமே இருந்தது என்பதைத் தவிர.


அந்த காரை ஒருபோதும் யாரும்

திருட விரும்ப மாட்டார்கள்

என்பதற்கு, ஒருவேளை, வாய்ப்பிருந்தது.


தொட்டியை விட்டு இறங்கினேன்

மற்றொரு பீருக்காக

மற்றொரு தடத்தை

பின்னால் விட்டு


அது ஒரு

நீண்ட

நீண்ட

நாளின்

முடிவு.

Comments

vinu said…
escuseme sorry bro puriyaliyeaaaa
vinu said…
meendum meendum meendumeana 3, 4 murai padithean eatho purinthamaathiri irrukkirathuuuu


pattasuu

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...