Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வணிக இதழும் தீவிர எழுத்தாளனும்

தபு சங்கர்: வணிக இதழ்களின் சமீபத்திய ஒரே கண்டுபிடிப்பு

வணிக பத்திரிகைகள் ஒரு காலத்தில் தொடர்கதை மூலம் நிறைய எழுத்தாளர்களை ஊக்குவித்தன. நிறைய குப்பைகள் தோன்றின. ஆனால் அதில் இருந்து சுஜாதா, பாலகுமாரன் போன்ற நல்ல புனைவு எழுத்தாளர்களும் தோன்றினர். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களில் வணிக எழுத்தாளர்கள் கண்டுபிடித்த அல்லது உருவாக்கின எழுத்தாளர்கள் யார் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால் சிறுபத்திரிகை, நடுநிலை பத்திரிகைகளில் எழுதி பயின்றவர்களை அவ்வப்போது சில பத்திகள் எழுத வைத்து ஏதோ மகானுபாவர்கள் போன்ற ஒரு பிம்பத்தை இப்பத்திரிகைகள் தோற்றுவிக்கின்றன. இன்னொரு பக்கம் இலக்கிய எழுத்தாளர்கள் வீம்பினால் வணிக பத்திரிகைகள் எழுதாதிருந்தனர். இன்று எழுதுகிறார்கள் என்றொரு எண்ணமும் சிலருக்கு உள்ளது. இரண்டும் பொய்கள்.


இன்று பத்தி எழுதும் பல இலக்கிய எழுத்தாளர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக சிறு, நடுநிலை பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி உருவாக்கிய புகழை, திறமையை வணிக இதழ்கள் ஹைஜேக் பண்ணி பயன்படுத்துகின்றன என்பதே உண்மை. இதே எழுத்தாளர்கள் இருபது, முப்பது வருடங்களுக்கு முன் வணிக இதழ்களில் எழுதவே முடியாது. இன்று இப்பத்திரிகைகளுக்கு எழுத ஆட்கள் இல்லை. அதனால் இலக்கிய பரப்பில் இருந்து ஆட்களை பிழுது தம் வயலில் நட்டுக் கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்து கடந்த இருபதாண்டுகளில் வணிக இதழ்கள் உருவாக்கின ஒரே எழுத்தாளன் தபு சங்கர் தான். அவர் எத்தனை சிறுபிள்ளைத்தனமானவர் என உங்களுக்கு தெரியும்.

வணிக இதழ்கள் எழுத்தாளர்களை நடத்தும் விதத்தில் சில கோளாறுகள் உண்டு. ஒன்று, வணிக இதழ் ஆசிரியர்கள் தொடர்ந்து சீரியஸான பத்திரிகைகளை படிக்கிறார்கள். ஆனால் அதில் எழுதுகிற திறமையான ஆட்களை அழைத்து தொடர்ந்து தம் இதழில் எழுத வைக்க மாட்டார்கள். அதற்கு பதில் சினிமா உதவி இயக்குநர்கள், சீரியலுக்கு வசனம் எழுதுபவர்கள் போன்று பகுதி நேர ஆட்களையே ஒன்றிரண்டு தொடர்கள் எழுத வைப்பார்கள். இவர்களையும் தொடர்ந்து எழுத அனுமதித்து வளர விட மாட்டார்கள். அல்லது இவர்களுக்கு தொடர்ந்து இயங்கும் ஆற்றலோ ஆர்வமோ இராது. இப்போது தீவிர இதழ்களில் திறமையாக ஆழமாக எழுதுபவர்கள் வணிக இதழ்களில்ன் அடுத்த இருபது வருடங்கள் கழித்து ஒரு தொடரோ பத்தியோ எழுதுவார்கள். உண்மையான எழுத்துப் பயிற்சியும் ஆற்றல் வெளிப்பாடும் தீவிர இதழ்களில் தான் நடக்கிறது. அங்கு தான் பரிட்சார்த்த முயற்சிகளுக்கு அவகாசம் உள்ளது. அங்கு தான் புது திறமைகளுக்கு வாய்ப்பும் உள்ளது. ஒன்று கவனித்தீர்களா? கடந்த பத்து ஆண்டுகளில் வணிக இதழ்களில் மட்டுமே எழுதி கவனிக்கப்பட்ட புது எழுத்தாளன் என யாருமே இல்லை. ஏனென்றால் எழுத்தாளனை தொடர்ந்து எழுத அனுமதிக்க மாட்டார்கள். கடந்த இருபது வருடங்களை எடுத்துக் கொள்வோம். வாரத்துக்கு ஒரு கதை என வணிக கதைகள் எழுதினால் எத்தனை லட்சம் கதைகள். இவ்வளவு லட்சம் கதை எழுதினவர்களில் ஒரு 20 பேர்களாவது தேற வேண்டாமா? 1995க்கு மேல் குமுதம், குங்குமம், விகடன் இவற்றில் மட்டும் எழுதி இன்று எஸ்.ரா, ஜெயமோ அளவுக்கு முக்கியமாக அல்லது பெயர் தெரிகிற அளவுக்கு இயங்கும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எனக்கு யார் பெயரும் நினைவுக்கு வரவில்லை.

இதற்கு காரணம் பார்முலா கதை எழுதுவதை மட்டும் வணிக இதழ்கள் ஊக்குவிப்பது. நான் 2005இல் ஒரு பி.பி.ஓவில் வேலை பார்த்தேன். அங்கு செக்யூரிட்டியாக இருந்தவர் என்னிடம் தான் 20 வருடங்களாக பல வணிக இதழ்களில் சிறுகதை எழுதுவதாக சொன்னார். அவரது சில கதைகளை காட்டினார். ஒரு சின்ன பார்முலா வைத்து கைகாது வரைந்து உருவாக்கின உயிரில்லா கதைகள். அவர் என் கதையை படித்து “உங்களுக்கு என்னை விட திறமை உண்டு” என்றார். ஆனால் நான் அவரிடம் காட்டியது மிக சாதாரணமான ஒரு கதை. ஆனால் சில பரீட்சார்த்த முயற்சிகள் கொண்ட கதை. அதுவே அவருக்கு ஒரு பிரமிப்பை உண்டு பண்ணியது. ஏனென்றால அவர் ஒரு எந்திரம் மாதிரி ஒரே கதைகளை இத்தனை வருடங்களாய் எழுதி வந்திருக்கிறார். எல்லாமே ஒன்று தான். ஜெராக்ஸ் பிரதி கதைகள். இப்படியான பலரை வணிக இதழ்கள் தோற்றுவித்துள்ளன.

பார்முலா படி எழுதவே கூடாது என நான் கூறவில்லை. ஆனால் அதற்குள் ஜீவன் வேண்டும். அப்படியானவரக்ளை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் வணிக இதழ் எடிட்டர்களில் இலக்கியம் அறிந்தோர் இலக்கிய எழுத்தாளர்கள் மேல் ஒரு வெறுப்பு அல்லது வயிற்றெரிச்சலோடு இருக்கிறார்கள். இலக்கியம் படிக்காத எடிட்டர்களுக்கு நல்ல கதை எதுவென தெரியாது.

தீவிர இதழ்களும் கூட புது எழுத்தாளனை தேடிப் பிடித்து ஊக்குவிப்பது இல்லை தான். ஆனால் ஏதோ ஒரு மூலையில் அவனுக்கு எழுத வாய்ப்புகளை அளிக்கிறது. தொடர்ந்து மாதாமாதம் என வருடக் கணக்கில் எழுத அனுமதித்து எழுத்தாளனை ஒரு ஆளுமை ஆக்குகிறது. ஆனால் இன்று வணிக இதழ்களில் யாரும் தொடர்ந்து எழுதவோ வளரவோ முடியாது. அதற்கு இடைநிலை பத்திரிகைகளில் மாங்குமாங்கென எழுத வேண்டும். அல்லது பிளாகில் இயங்க வேண்டும். இதற்கு ஒரு காரணம் இன்று வணிக இதழ்கள் எழுத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டது என்பது. வண்ண படங்கள், ஆபாச சேதிகள், பேட்டிகள், டிவிட்டரில் இருந்து எடுத்து போடுகிற ஜோக்குகள் மற்றும் சில பரபரப்பு ரிப்போர்ட்டுகள். எதையாவது அள்ளிக் கொடுத்து வாசகனை தக்க வைப்பிற பரிதவிப்பில் இப்பத்திரிகைகள் உள்ளன. இது போக நாம் எதைப் போட்டாலும் படிப்பார்கள் எனும் எடிட்டர்களின் திமிர்த்தனமும்.
பல தீவிர பத்திரிகைகளில் எழுத்தாளன் பத்திரிகையை விட நெடிது உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். எழுத்தாளனை படிக்க தான் தன் பத்திரிகை வாங்குகிறார்கள் என தீவிர இதழ் எடிட்டர்கள் அறிவார்கள். ஆனால் வணிக இதழ் எடிட்டர்கள் தமக்கு கீழ் தான் எழுத்தாளன் எனும் எண்ணம் கொண்டவர்கள். அவர்களுக்கு அதில் ஒரு ஈகோ திருப்தி உள்ளது. ஏனெனில் இன்றுள்ள பல வணிக இதழ் ஆசிரியர்கள் இலக்கியம் வாசிப்பவர்கள், ஆனால் ஒரு எழுத்தாளனாய் எதையும் சாதிக்க முடியாதவர்கள்.


வணிக இதழ்கள் எழுத்தாளனை எப்படி நடத்துகின்றன என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு பிரபல வணிக இதழின் எடிட்டர் என் எழுத்தாள நண்பருக்கு நல்ல பரிச்சயம். இவரது படைப்புகளை தீவிர இதழ்களில் படித்து தொடர்ந்து அது பற்றி பேசுவார். ஆனால் ஒரு நாளும் தன் பத்திரிகையில் எழுத கேட்க மாட்டார். ஒருநாள் நண்பரே வாய்விட்டு வெறுப்பில் கேட்டு விட்டார் “என்னை ஒருநாளும் எழுத கேட்க மாட்டீங்க தானே”. அதற்கு அவர் “அதுக்கென்ன தாராளமா எழுதுங்களேன்” என்று வாய் வார்த்தையாக சொல்லி மழுப்பி விட்டார். நேரடியாக எழுத கேட்கசில்லை. அடுத்து இதன் போட்டி வணிக இதழ் ஒன்றில் நண்பருக்கு பத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தது. உடனே அதனை பிளாக் பண்ணுவதற்காக இந்த எடிட்டர் நண்பரை தொடர்பு கொண்டு “என் பத்திரிகையில் பத்தி எழுதுங்க” என்றார். நண்பர் சரி என்றார். “ஆனால் நீங்க அந்த போட்டி இதழில் எழுதக் கூடாது”. நண்பர் தன்னை இத்தனை நாளும் உதாசீனித்த ஒருவரை விட தானாய் எழுத சொன்ன இதழ் தான் சிறந்தது என முடிவெடுத்து எடிட்டரின் கோரிக்கையை நிராகரித்தார். இப்படி கர்ணனை குந்தியும் பாண்டவர்களும் நட்த்தியது போலத் தான் வணிக இதழ்கள் தீவிர எழுத்தாளனை நடத்துகிறது. இதற்கு ****ளே மேல்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...